Monday, 29 February 2016

புறநானூறு கூறும் கொடைச்சிறப்பும் மன்னர்களும்


puranaanooru1
சங்ககால நூல்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற புறநானூறு நூலானது அக்கால மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் சங்க கால மன்னர்கள் தங்களது சிறப்புகளாக பெரிதும் கொண்டிருந்த கொடைத்தன்மையானது மிக முக்கியமானதாக கருதிவந்துள்ளனர் என்பதற்கு சான்றாக பல இடங்களை ஆய்வு செய்கிறபொழுது அவர்களது கொடைத்தன்மையின் பண்பை சில புலவர்கள் ஏற்றியும் கூறியுள்ளனர். மேலும் கடையெழு வள்ளல்கள் அவர்களது ஈகைத் தன்மை பற்றி இங்கே ஆய்வு செய்யப்படுகிறது.
பாண்டியர்:
puranaanooru2
“தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!”(புறம்-6)
பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைத் தன்மையை புலவர் காரிகிழார் குறிப்பிடுகிறார். மேலும்
“———–வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த” (புறம்-9)
என்பதன் மூலம் முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைச்சிறப்பு பற்றி முக்கிய ஆதாரமாக நமக்குகிடைக்கிறது.

பாண்டியன் பெருவழுதி பாணர்களுக்கு பரிசாக யானையை தந்தமையை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 28 February 2016

இரத்தம் கொதிப்பதற்கு முன் இறக்கிவிட வேண்டும்


Dr.Jerome -FI
Kaplan’s clinical hypertension என்றொரு புத்தகம். நவீன மருத்துவத்தில் இரத்தக் கொதிப்பு பற்றி எழுதப்பட்ட ஒரு முழுமையான புத்தகம் என இதை கூறமுடியும்.
இந்த நூல் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்று விளக்கும்போது, “பல கோடி டாலர்கள் செலவு செய்தும், இன்னும் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான முழுமையான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை” என்கிறது.
Blood pressure measuring studio shot
இது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஏன் நவீன மருத்துவத்தில் இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை?

ஏனென்றால் எந்த ஒரு நோய்க்கும் ஒரு கிருமியோ அல்லது ஏதேனும் வேதிப்பொருளோ காரணமாக இருக்க வேண்டும் என்று நுண்ணோக்கியின் மூலமோ அல்லது மருத்துவ ஆய்வகத்திலோ (Medical Laboratory) பகுத்துப் பார்க்கும் போக்கு உடையது நவீன மருத்துவம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 25 February 2016

நீர்வழிப் போக்குவரத்து அமைப்பு: படக்கட்டுரை

நீர்வழிப் போக்குவரத்து அமைப்பு: படக்கட்டுரை



மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 24 February 2016

முதுகுவலியைப் போக்க வழிமுறைகள்


mudhukuvali3
  1. முதுகெலும்பு வலிகளுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து, எனவே பூண்டு எண்ணெயை முதுகெலும்பில் தேய்த்துவர வலி குறையும்.
  2. முதுகுவலி இருப்பவர்கள் 1 கிராம் சுக்கு, 5 மிளகு மற்றும் 5 கிராம்பு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து, தினமும் 2 வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.
  3. தளுதாளி இலையுடன் பூண்டு, 
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 23 February 2016

தமிழ்மொழி ஆட்சி!(கவிதை)


vincent nerkaanal22

எல்லை யென்பதில்லை எங்கள் தமிழ்
மொழிக்கு ஈடேது ம்மில்லை- எங்கள்
தமிழ்மொழி போன்றொரு தாயு ம்மில்லை

தமிழ்மொழி போன்றொரு தந்தையு ம்மில்லை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19900

Monday, 22 February 2016

மொழி வளர்ச்சிக்கு உதவிய சமயப்பணி முயற்சிகள்


mozhi valarchchikku8
“ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறித்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து…”
இவ்வரிகள் காணப்படுவது 438 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் தமிழ் எழுத்துருவிலேயே அச்சிலேறிய முதல் தமிழ்ப் புத்தகத்தில். போர்த்துக்கீசிய மொழியில் இருந்து ‘ஃபிரான்சிஸ் சேவியர்’ (Francis Xavier) தமிழில் மொழிபெயர்த்த மறை நூலைப் போர்த்துக்கீசியரான ‘ஹென்றிக்ஸ் பாதிரியார்’ (Portuguese Jesuit priest, Henrique Henriques, 1520–1600) பதிப்பித்தார். தமிழ் அச்சு நூலின் தந்தை எனவும் இவர் போற்றப்படுகிறார். இவர் முயற்சியால் கொல்லத்தில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு, கோவாவில் உள்ள அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு, கொல்லத்தில் 1578-ஆம் ஆண்டில் (October 20, 1578) வெளியான இந்நூலின் பெயர் “தம்பிரான் வணக்கம்” (Doctrina Christam en Lingua Malauar Tamul / Thambiran Vanakkam). இந்நூல் உருவாக நிதியுதவி அளித்தவர்கள் தூத்துக்குடியில் வாழ்ந்த மீனவர்கள். இந்திய மொழி ஒன்றில், அந்த மொழியின் எழுத்துருவிலேயே அச்சிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியது இந்தத் தம்பிரான் வணக்கம் நூல்.

mozhi valarchchikku1
தமிழுக்கு இப்பெருமை மட்டுமல்ல, ஐரோப்பிய மொழிகளைத் தவிர்த்து, முதன் முதலில் அச்சேறிய உலகமொழிகளில் முதன்மையான மொழி என்ற பெருமையைக் கொண்டதும் தமிழ் மொழியே. ‘கார்டிலா’ என்ற தமிழ் நூல் தம்பிரான் வணக்கம் நூலிற்கு முன்னரே அச்சிடப்பட்ட ஒரு தமிழ் நூல். ஆனால் அதன் எழுத்துகள் ரோமன் எழுத்துகளால் ஆனவை. இக்கால ஃபேஸ்புக்கில் ‘வணக்கம்’ என்பதைத் தமிழ் மக்கள் ஆங்கில எழுத்தில் ‘vanakam’ என ஒலிபெயர்த்து (transliteration) எழுதிக் கொண்டிருப்பது போல ரோமன் எழுத்துகளில் தமிழ் அச்சிடப்பட்டது. கோவாவில் முதலில் அச்சுக்கூடம் அமைப்பதற்கும் முன்னரே இந்தியாவின் எல்லைக்கு வெளியே, 1554 ஆம் ஆண்டு (February 11, 1554) லிஸ்பன் நகரில் அச்சிட்டு வெளியானது கார்டிலா என்ற ‘லூசோ சமய வினா விடை’ என்ற இந்த நூல் (Carthila e lingoa Tamul e Portugues). இதுவும் கிறித்துவ சமய நூலே, இந்த நூல் தமிழறியாத போர்த்துக்கீசிய பாதிரியார்கள் தமிழ் உச்சரிப்பில் வேத வாசகங்களைக் கூறுவதற்காக ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்டது. எனவே, 450 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழின் அச்சு நூல் வரலாற்றின் துவக்கம்தான் கார்டிலா. மலபார் தமிழில் எழுதப்பட்டது என்ற குறிப்பு கொண்ட இந்த நூலின் உருவாக்கத்தில் பங்கேற்றவர்கள் தூத்துக்குடியில் வாழ்ந்த வின்சென்ட் நாசரேத், ஜோஜ் காவல்கோ, தாமஸ் குரூஸ் (Vincente de Nazareth, Jorge Carvalho and Thoma da Cruz) என்ற மூன்று தமிழர்கள். இந்த வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணர்ந்தவர் தனிநாயகம் அடிகள் ஆவார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மண்ணின் மக்களே தமிழ் அச்சு நூல் உருவாக்கத்தில் நன்கொடையும், உழைப்பையும் நல்கியிருக்கிறார்கள் என்பது வியப்பைத் தரும் ஒற்றுமை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 21 February 2016

ஏழைகளின் ஊட்டி ஏலகிரி


yelagiri1

வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள ஏலகிரி மலை சென்னையிலிருந்து ஐந்து மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படுகிற மலை மேல் அமைந்துள்ள இந்தப்பகுதி, தரைமட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ள இந்தப் பகுதி, துளியும் மாசு இல்லாத இடம். முற்றிலும் யூகலிப்டஸ் மரங்கள், பழத்தோட்டம், மலர்த்தோட்டம், புள்வெளிகள் என மனதை கவரும் விடயங்கள் ஏராளம் உள்ளன. இந்த மலையில் மட்டுமே 15 குக்கிராமங்கள் உள்ளன.
பூங்கனூர் ஏரி படகு சவாரி, இயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கா, நடனமாடும் நீர் ஊற்று, மலை சவாரி என குதூகலமூட்டுகிறது. விடுமுறை தினமாக சனி, ஞாயிறு என்றாலே சென்னை, பெங்களூர் என பல இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குவிகிறது.

yelagiri5
இங்கு எந்த வித மருந்துகளும் சேர்க்கப்படாத பல வித பழ வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பன்னீர் கொய்யா(கொய்யா போன்ற வடிவமைப்பில் உள்ளே கொட்டை உள்ளது. மிதமான தித்திப்புடன் சாப்பிடுவதற்கு அத்தனை ருசியாக உள்ளது).

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.