Tuesday, 30 April 2019

கலைக்காக ஒரு கதை


siragu-ravichantrika-book--cover1
நூலும் நூலாசிரியரும்:
படைப்பாளரும் பத்திரிக்கையாளருமான மீ. ப. சோமசுந்தரம் (மீ. ப. சோமு, 1921 – 1999) அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். “அக்கரைச் சீமையிலே” என்ற பயண நூலுக்குச் சாகித்திய அகாதெமி பரிசுடன், படைப்பிலக்கியத்திற்காக மேலும் பல பரிசுகளும் பெற்ற இலக்கியவாதி. கல்கி இதழின் ஆசிரியராக இரு ஆண்டுகள் (1954-1956) பொறுப்பேற்றதுடன், நண்பன் என்ற இதழையும் தொடங்கி நடத்தினார். கட்டுரை, ஆய்வுக்கட்டுரை, பயணக்கட்டுரை, புதினம், சிறுகதை, நாடகம், கவிதை, சித்தர் இலக்கியம் (ஆய்வு நூல்) என இலக்கியத்தின் பல துறைகளிலும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்தியதுடன் சொற்பொழிவாளராகவும் இருந்துள்ளார். இவரது புகழ்பெற்ற புதினம் ரவிசந்திரிகா.

‘சர்ப்ப கந்தி’ என்ற மூலிகை பாம்பின் நச்சு முறிவுக்கான மருந்து, அது மனநோய்க்கும் ஒரு மருந்து, அதற்கு ‘சந்திரிகா’ என்ற பெயருமுண்டு என்ற தகவலுடன் நூல் துவங்குகிறது. கதையின் நாயகி சந்திரிகா அவளது நாட்டிய ஆசிரியரான புல்லாங்குழல் கலைஞர் ரவீந்திரனுக்கு மன ஆறுதல் தந்து, அவனது வாழ்வுக்கு நிலவாக ஒளி கொடுத்தாள் என்று கதை குறித்த அறிமுகம் கொடுக்கப்படுகிறது. கதை மலைக்கோட்டையில் அவளது நாட்டிய அரங்கேற்றத்துடன் தொடங்குகிறது. அவளுக்கு விழாவில் பரிசளிக்கத் தனது புல்லாங்குழலை அடைமானம் வைத்து பரிசு வாங்குகிறார் அவளது ஆசிரியர் ரவீந்திரன். கதையின் நோக்கம் கலைக்கும் கலைஞர்களின் வாழ்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்புவது என்பது தெளிவு. ரவிசந்திரிகா என்ற ராகமும் ஒன்று உண்டு. வானதி பதிப்பகம் வெளியிட்ட (நான்காம் பதிப்பு -1989) இந்த நூலின் முதல் அத்தியாயம் ‘மலைக்கோட்டை’ என்று துவங்கி, 45 ஆவது அத்தியாயமாக  ‘மங்களம்’ என்ற தலைப்புடன் மங்களம் பாடி முடிக்கப்படும் இந்த நூலின் பக்கங்கள் 500க்கும் மேல் விரிகிறது. முதல் பதிப்பு எப்பொழுது என்ற குறிப்பில்லை. இக்கதை அக்காலத்தில் கல்கியில் தொடராக வந்ததாக அறிய முடிகிறது. மேலும், இது மிகவும் வரவேற்கப்பட்ட கதை என்பதால் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 29 April 2019

பட்டினப்பாலை ஒரு அறிமுகம் !!


siragu pattinapaalai2
“குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்துக்” காவிரிப்பூம் பட்டினத்துக் காவலனான” சோழன் கரிகாற் பெருவளத்தானை பெரும்பாணாற்றுப்படை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய இப் பனுவலுக்குப் பட்டினப்பாலை எனப்பெயர் குறித்தார்.
பட்டினப்பாலை என்பது, பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்தினைச் செய்யுள் நூல் என விரியும்.

புலவரின் நோக்கம் கரிகாற் சோழனை சிறப்பித்துப் பாட வேண்டும் என்பது தான். ஆனால் நேரே பாடினால் அது புறத்திணை ஏழனுள் ஒன்றாகிய வாகைத்திணை வகையில் வரும். அவ்வாகைத்திணைப் பொருள் அமையப் பாடி இப்பாட்டினுள் அகத்திணை ஏழனுள் ஒன்றாகிய பாலைத்திணை பொருள்பட இதனை அகப்பொருட் பாடலாக பாடியதே இந்நூலின் சிறப்பு. பாலை என்பது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் அகத்திணை ஒழுக்கங்களுள் ஒன்று. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பற்றிக் கூறுவது. இப்பட்டினப்பாலை வஞ்சியடிகள் பெருவரவினவாக ஆசிரிய அடிகளும் விரவப்பெற்ற ஓரின்னிசைப் பாடலாகும். இதனை வஞ்சி நெடும்பாட்டெனவும் வழங்குவர். தன் தலைவியைவிட்டு பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது. இது செலவழுங்குதல் துறையின் பாற் வரும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/

Thursday, 25 April 2019

நான் யார்? என்னைத் தெரியுமா?? (கவிதை)


Dec-23-2017-newsletter1
குயில் கூவதற்கு நான் வேண்டும்
மயில் அகவுதற்கு நான் வேண்டும்
குரங்கு தாவுதற்கு நான் வேண்டும்
மனிசிதலை சிவுதற்கும் நான் வேண்டும்
அவர இவர் மேவுதற்கும் நான் வேண்டும்
வயலில் ஒன்றை தூவுதற்கும் வயிற்றில்
ஒன்றைக் காவுதற்வும் நான் வேண்டும்
அப்படி என்றால் நான் யார்?

தீவுக்கு என்ன வேண்டும் தீர்வு வேண்டும்?
ஒரு நல்ல தீர்வுக்கு என்ன வேண்டும்??
தீவுக்கும் தீர்வுக்கும் நான் வேண்டும்
கதவிலும் நான் இருப்பேன் மதவிலும் நான் இருப்பேன்
இரவிலும் நான் வருவேன் உங்கள் கனவிலும் நான் வருவேன்
நிலவிலும் நானிருப்பேன் உங்கள் நினைவிலே நான் நிச்சயம் இருப்பேன்
நான் உண்மையில் ஆர்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 24 April 2019

தூக்கில் தொங்கிய மாலை (சிறுகதை)


siragu birds
சூரியன் மெல்ல தன் ஒளிக்கதிர்களை விடுவித்தான். நீர் நிரம்பிய குளத்தில் அழகிய தாமரைமுகம் சிவந்தாள். பறவைகள் விழித்த செய்தி மரங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அப்போது இரண்டு காகங்கள் மட்டும் கண் விழிக்காமல் கூட்டில் உறங்கிக் கொண்டிருந்தன. புறாக்களும், கொக்குகளும் யானை வடிவத்தையுடைய நீர் கோர்த்த மேகத்தைத் தொட்டுவிடும் அளவிற்கு உயர்ந்து பறந்தன.
சூரியஒளி கூட்டில் பட்டதும் திடீரென அலறி அடித்தடி பதற்றத்துடன் எழுந்தன அவை. சுற்றும் முற்றும் அலைந்து திரிந்து பார்த்தன. ஒரு பறவையும் கண்ணில் தென்படவில்லை. ”ஐயோ நம்மைத் தன்னந் தனியாக விட்டுட்டுப் போயிட்டாங்களே! நாம எப்படி இறை தேடுவது” என்று கவலையுடன் ஒன்றையொன்று பார்த்தன.

முடிவாக, சரி நீ ஒரு பக்கம் போ! நான் ஒரு பக்கம் போறேன்! என மூக்கு உடைந்த காக்காவும் ஒரு கால் உடைந்த காக்காவும் முடிவெடுத்து பறக்க ஆரம்பித்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 22 April 2019

சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள்


siragu paguththarivu1
பகுத்தறிவுக் கொள்கை இன்றைய காலத்தில் தோன்றியவை அல்ல, மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றே உண்டானவையாகும். பகுத்தறிவு என்ற பெயர்தான் பிற்காலத்தில் வந்ததே தவிர அதன் பொருண்மை அல்லது அதன் பொருள் எனப்படும் பகுத்து ஆராயும் முறை சிந்திக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இருந்து வருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனை நல் வழிப்படுத்த சில பகுத்தறிவுக் கூறுகள் எடுத்துக் கூறபட்டன. அந்த வழிமுறையில் பகுத்தறிவுக் கொள்கையினை மனிதனுக்கு உணர்த்துவதில், சங்க இலக்கியத்தின் பங்கு என்ன என்பதனை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்குகிறது.

மனித மூளையின் ஆற்றலினால் தோன்றுகின்ற சிந்தனை சக்தியின் விளைவால் அவனது மனதிலே நன்றும் தீதுமாய் எண்ணங்கள் கலந்திருக்கின்றன. இவற்றுள் நல்லது எது தீயது எது என அறியும் நுண்ணியல் ஆற்றலே பகுத்தறிவாகும். எந்த ஒரு கொள்ளைகையையும் கோட்பாட்டையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதோ அல்லது ஏற்காமல் விட்டு விடுவதோ பகுத்தறிவு ஆகும். எந்த ஒன்றின் உண்மைத் தன்மையை அறிவதுதான் பகுத்தறிவு. இது ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதன் மூலமே தெளிவுபடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 19 April 2019

சிலை அல்ல அவர் சித்தாந்தம் (கவிதை)


siragu election-commission3

சிலை அல்ல அவர் சித்தாந்தம்
சீறியெழும் அலைகளாய்
ஆர்ப்பரிக்கும் சிந்தனை
சில்வண்டுகளின் ஆணவத்தை
அழிக்கும் சினத்தீ!
செறுப்பொன்று வீழ்ந்தாலே
முளைத்திடும் சிலையாய்
சிலையொன்றை உடைத்தால்
சித்தாந்தம் சீறாதோ?
உடைத்து விளையாடும்
உஞ்சி விருத்திகளே
உதைகள் உண்டு

உங்களுக்கு காத்திருங்கள்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

Thursday, 18 April 2019

காவிரிக்கு உரியவர் யார்?


siragu kaavirikku2
காவிரிக்கு உரியவர் யார்? என்ற கேள்வி இக்காலத்தில் மாநில அரசுகளுக்கிடையில் நிகழும் காவிரிநீர் பங்கீடு பற்றியஉரிமைப் போராட்டம் குறித்து எழுந்த கேள்வியல்ல. மாறாக, காவிரி யாருக்குரியவள் என்று தமிழிலக்கியப் பாடலும், வடமொழி கல்வெட்டுப்பாடல் ஒன்றும் குறிப்பிடும் செய்தியை மீள்பார்வை செய்யும் முயற்சி.
 திங்கள் மாலை வெண்குடையான்,
  சென்னி,செங்கோல் அது ஓச்சி,
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,
  புலவாய்; வாழி, காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,
  புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று
  அறிந்தேன்; வாழி, காவேரி! [புகார்க் காண்டம்: 7. கானல் வரி; 21-28]
 உரை:

மாலையால் அலங்கரிக்கப்பட்ட முழுமதி போன்ற அழகிய வெண்கொற்றக் குடையைக் கொண்ட சோழன், தனது செங்கோல் ஆட்சியின் கீழ் கொணர்ந்த கங்கையுடன் கூடினாலும், காவேரி பெண்ணே நீ அவனை வெறுக்க மாட்டாய், உன் பண்பு வாழ்க. அவ்வாறு வெறுப்பதை ஒழித்தது, கயல் கண்கள் கொண்டவளே, உனது தலைவன் மீது நீ கொண்ட காதலால் விளைந்த கற்பு என அறிந்தேன், நீ வாழ்க.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.