Monday 29 April 2019

பட்டினப்பாலை ஒரு அறிமுகம் !!


siragu pattinapaalai2
“குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்துக்” காவிரிப்பூம் பட்டினத்துக் காவலனான” சோழன் கரிகாற் பெருவளத்தானை பெரும்பாணாற்றுப்படை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய இப் பனுவலுக்குப் பட்டினப்பாலை எனப்பெயர் குறித்தார்.
பட்டினப்பாலை என்பது, பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்தினைச் செய்யுள் நூல் என விரியும்.

புலவரின் நோக்கம் கரிகாற் சோழனை சிறப்பித்துப் பாட வேண்டும் என்பது தான். ஆனால் நேரே பாடினால் அது புறத்திணை ஏழனுள் ஒன்றாகிய வாகைத்திணை வகையில் வரும். அவ்வாகைத்திணைப் பொருள் அமையப் பாடி இப்பாட்டினுள் அகத்திணை ஏழனுள் ஒன்றாகிய பாலைத்திணை பொருள்பட இதனை அகப்பொருட் பாடலாக பாடியதே இந்நூலின் சிறப்பு. பாலை என்பது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் அகத்திணை ஒழுக்கங்களுள் ஒன்று. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பற்றிக் கூறுவது. இப்பட்டினப்பாலை வஞ்சியடிகள் பெருவரவினவாக ஆசிரிய அடிகளும் விரவப்பெற்ற ஓரின்னிசைப் பாடலாகும். இதனை வஞ்சி நெடும்பாட்டெனவும் வழங்குவர். தன் தலைவியைவிட்டு பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது. இது செலவழுங்குதல் துறையின் பாற் வரும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/

No comments:

Post a Comment