Tuesday 30 June 2015

மிகினும் குறையினும்- எது?

Dr.Jerome


மருந்து என்றொரு அதிகாரம் திருக்குறளில் உள்ளது. அதன் முதல் குறளிலேயே சித்த மருத்துவத்தின் நோய் நாடலின், அதாவது நோய் இயலின்(Pathology) அடிப்படைக் கொள்கையை, நெற்றிப்பொட்டில் சுட்டது போல “பட்’டென்று கூறிவிடுகிறார் திருவள்ளுவர். அதாவது நோய்கள் வருவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை அந்த குறளில் கூறுகிறார்.

நம் உடலில் மூன்று விதமான கண்ணுக்கு புலப்படாத, நுண்நோக்கியால் பார்க்க முடியாத (Microscope), ஆய்வகங்களில் (Laboratory) அளவிட முடியாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவைதான் வளியை அதாவது வாதத்தை முதலாவதாகக் கொண்ட வாதம், பித்தம் மற்றும் கபம் எனப்படுபவை. இந்த மூன்றையும் பற்றி பல தொகுதிகளில் புத்தகங்கள் எழுதலாம். அவ்வளவு நுணுக்கமானவை இவை. அவ்வளவு நுணுக்கமாக தெரிந்துகொள்ளாவிட்டாலும், கண்டிப்பாக இவை பற்றிய அடிப்படை அறிவு 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.  
                  http://siragu.com/?p=17662

Monday 29 June 2015

பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களின் நேர்காணல்...

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்? பதில்: வணக்கம், நான் இப்பொழுது ஆழி பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன். Langscape என்ற ஒரு மொழிபெயர்ப்பு.. மேலும் படிக்க.. http://siragu.com/?p=17648


           senthil nathan profleFI2

Tuesday 23 June 2015

மதச்சார்பின்மையை மறுபரிசீலனை செய்ய முடியுமா?

madhachaarpinmai4
இந்திய மதச்சார்பின்மை இப்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. இதொன்றும் புதிதல்ல. காலங்காலமாக நிகழ்ந்து வரும் விஷயம் தான். குறிப்பாக தேர்தலின் போது, மதச்சார்பின்மை அரசியல் கச்சாப் பொருளாகிறது. போலி மதச்சார்பின்மைவாதிகள் என்று பாரதிய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சாட்டுவதும், மதவாதிகள் என்று காங்கிரஸ் பா.ஜ.க-வைச் சாடுவதும் நமக்கொன்றும் புதிதில்லையே.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முகவுரையில் இருக்கும் “மதச்சார்பற்ற, சமதர்ம” என்ற சொற்கள் இப்போதைய விவாதப் பொருளாகியிருக்கின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விளம்பரங்களில் இருந்த அரசியல் சாசன முகவுரையில் இச்சொற்கள் விடுபட்டுப் போயிருந்தன. பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியிலிருப்பதால் இவ்விடுபடலைப் பற்றி சந்தேகம் எழுவது இயல்பே. 1950ல் இருந்த அரசியல் சாசனப் பதிப்பின் முகவுரையை வெளியிட்டதாக அரசு கூறுகிறது.

1950ல் அமல்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தில் இவ்வார்த்தைகள் இல்லை. நாற்பத்திரண்டாவது அரசியல் சாசன திருத்தத்தில் தான் இச்சொற்கள் அரசியல் சாசன முகவுரையில் ஏற்றப்பட்டன. ஆனால் அரசியல் நிர்ணய அவையில் இவ்வார்த்தைகளைப் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 22 June 2015

தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல் – இறுதிப் பகுதி

 சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருவதில் தாங்கள் பெற்ற அனுபவம் என்ன?
mugilan14
கடலோரத்தில் தாதுமணல் என்பது இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை உள்ளதாகத்தான் இருக்கும். அதை பயன்படுத்துவது, அள்ளுவதற்கு பல்வேறு வழிமுறைகளை அரசு வைத்திருக்கிறது. இதனால் பாதிப்புகள் வருவதெல்லாம் பார்த்துத்தான் தாதுமணல் என்ற நூலை எழுதினேன். அப்பொழுது ஒரு வாய்ப்பாக காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல, தமிழ்நாட்டில் சகாயம் அவர்கள் கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. சகாயம் அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலே பணியாற்றிய பொழுது எனக்குத் தெரியும். அவர் மதுரையிலே பணியாற்றிய பொழுது கிரானைட் பிரச்சனைகளில் சில ஊர்களில் நேரடியாக தலையிட்டு அது போன்ற பிரச்சனைகளில் அனுபவமும் பெற்றவன் நான். கனிமவள முறைகேடுகளைப் பற்றி உணர்ந்து அதைப்பற்றியான நூலையும் எழுதியிருக்கிறேன். ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வேலை செய்திருக்கிறோம். இப்படி பல்வேறு விதமான கனிம கொள்ளைகளை எதிர்த்து நாங்கள் வேலை செய்திருக்கிறோம்.

இதுமட்டுமல்ல கொல்லி மலையிலே மேட்டூரில் இருக்கக்கூடிய மால்கோ நிறுவனம் அனுமதியில்லாமல் பத்தாண்டுகளுக்கு மேல் கொல்லி மலை செம்மேடு பகுதியிலிருந்து தினசரி 400 லோடு பாக்ஸைட் தாதுவை வெட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது பத்தாண்டுகாலம் அனுமதியே இல்லாமல் ஒரு நிறுவனம். அதை குளத்தூர் மணி, பியூஸ் போன்ற தோழர்கள் உயர்நீதிமன்றத்திலே அள்ளக்கூடாது என்று உத்தரவு பெற்றும் கூட அதை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் இல்லை. சகாயம் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியத்தலைவராக இருந்த பொழுது, அவரிடம் எடுத்துச் சென்று சொன்னதற்கு அவர் இதுபோன்ற நிறுவனத்தில் கை வைப்பதற்கு அவருக்கான அதிகாரத்திலிருந்து பல வேலைகளை மேற்கொண்டார். நேரடியாகச் செய்தால் நெருக்கடி வரும் என்று சொல்லி, முதலில் ஓவர் லோடு என்று அந்த லாரிகளில் பலவற்றை முடக்கினார். பிறகு அதிக வேகம் என்று பிடித்தார். பின்பு ஆண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனைக்காக வரும் பொழுது அதற்கான அனுமதியை ரத்து செய்து அந்த வேலையை நிறுத்த வைத்தார். அதனால் எண்ணற்ற நெருக்கடிகளை சந்தித்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மூலிகைகளே ஆனாலும், சுய மருத்துவம் கூடாது

Dr.Jerome
விலங்குகளுக்குக் கூட மருத்துவ அறிவு உண்டு. சில உடல் உபாதைகளுக்கு சில மூலிகைகளைத் தேடி உண்ணுகின்ற அறிவு விலங்குகளுக்கும் உண்டு. ஆதிமனிதன் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொண்டான்.
suya maruththuvam7
அப்படியானால் மருத்துவர் எதற்கு?

பல கோடிக்கணக்கான பணம் செலவுசெய்து கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகள் எதற்கு?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Saturday 20 June 2015

குடிநோயாளிகளின் பெருக்கத்தையாவது கட்டுப்படுத்துவோம்

kudiyaali1
இந்திய அரசியலில் சில மணித்துளிகளாவது சர்வாதிகாரியாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் எவ்வித இழப்புகளும் இல்லாமல் நாட்டிலுள்ள எல்லா மதுக்கடைகளையும் இழுத்து மூடுவேன் என முழங்கி, அதற்கான இயக்கமும் கண்டவர் காந்தி. ஒருவரை அடிமையாக்கும் போதை பொருட்களில் மிகவும் கொடூரமானதும், மோசமானதும் மது தான். மதுவினால் தினமும் செத்துக் கொண்டிருப்பது அன்றாடம் உழைக்கும் பாமர மக்கள் என்பதால் அப்படியொரு முடிவுக்கு வந்தார். அவர் மட்டுமல்ல அம்பேத்கர் போன்ற பல தலைவர்களும் அதனை தங்கள் செயல்பாட்டில் உறுதியாகக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று வரையிலும் மதுவின் பொருட்டு ஏற்படும் விபத்துக்களும், உயிர், உடமை இழப்புகளும், மது ஒழிப்புப் போராட்டங்களும் ஓய்ந்தபாடில்லை. இதன் விளைவு ஒரு நாட்டின் பெரும்பகுதி மக்கள் தொகையின் வாழ்வியல் நிதானத்தை செயலிழக்கச் செய்யும் குடிநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவது ஒரு சமூகத்தின் சனநாயகத்துக்கு முற்றிலும் ஆபத்தானது. நாட்டின் எல்லா வளர்ச்சித் திட்டங்களையும் சிதைக்கக் கூடியது. எனவே லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் உழைப்புச் சுரண்டலுக்காவது  இவர்களை குடிநோயிலிருந்து காப்பற்ற வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கைகளைக் கொண்டும், அறிவியல் ஆராய்ச்சிகளைக் கொண்டும், பகுத்தறிவுக் கொள்கைகளைக் கொண்டும் மதுவை தீர்க்கமாக ஒழிப்பதில் இங்கே ஒரு வித அரசியல் ஆற்றல் தன்னெழுச்சி பெற முடியாமல் தவித்தாலும், அதனைக் கண்டு மனம் உடையாமல் தினம் தினம் மதுவைக் குடித்து உடலாலும், மனத்தாலும் அவதிப்படும் குடிநோயாளிகளின் பெருக்கத்தையாவது கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியத்தை வளர்த்தெடுக்கும் நம்பிக்கையாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்

mu.varadharaasanaar3
என் நண்பன் ஒருவன் திருமணம். ஆண்டு 1970, அவனுக்கு ஒரு நாவலைத் திருமணப் பரிசாக அளித்தேன். அது நல்ல இசைவான திருமண வாழ்க்கையை வலியுறுத்துகின்ற ஒரு நாவல். பெயர் ‘வாடா மலர்’. அறிஞர் மு. வ. எழுதிய கடைசி நாவல் அது என்று நினைக்கிறேன். பொருத்தம் உண்டோ இல்லையோ அந்தக் காலத்தில் இப்படித்தான் நாங்களும் எங்களைப் போன்ற இளைஞர்களும் மு. வரதராசனாரின் நாவல்களைப் பரிசாக வழங்கினோம். அப்படி அவர் எழுத்தின்மேல் ஒரு பிடிப்பு. (இதே போல் நா. பார்த்தசாரதி மேலும் பிடிப்பு இருந்தது. அது பற்றி வேறொரு சமயம்.)
mu.varadharaasanaar2
தனிப்பட்ட முறையில் எனக்கு மு. வ. மேல் பிடிப்பு உண்டாகக் காரணம், என் தாயார்தான். அவர் மு.வ.வின் அத்தனை கதைகளையும் ‘கரைத்துக் குடித்தவர்’. குறிப்பாகப் ‘பெற்ற மனம்’ நாவல் அவருக்கு மிகவும் பிடிக்கும். மு. வ. வைப் பற்றி இளமையிலேயே எனக்கு எடுத்துரைத்தவர். பலரும் மு. வ. திருப்பத்தூரில் பிறந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். பிறர் அவர் சோளிங்கபுரத்தில் (சுருக்கமாகச் ‘சோளிங்கர்’) பிறந்ததாகவும் எழுதியிருக்கிறார்கள். இரண்டுமே தவறு. இராணிப்பேட்டையிலிருந்து சோளிங்கர் செல்லும் வழியிலுள்ள வேலம் என்பது அவருடைய சொந்த கிராமம். அங்குதான் அவர் பிறந்ததாக என் தாயார் சொல்லியிருக்கிறார். முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். நானும் என் நண்பர்களும்கூட சோளிங்கரில் தமிழ்ச் சங்கம் வைத்திருந்தோம். என் ஊர் ஆர்க்காடு. வேலத்தைக் கடந்துசெல்லாமல் சோளிங்கர் செல்லமுடியாது. (இந்த இடங்கள் பற்றியெல்லாம் ‘அகல் விளக்கு’ நாவலில் குறிப்பு வருகிறது என்று நினைக்கிறேன்.)

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 18 June 2015

இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டு வருகின்றதா?

siruththaip puligal1
புலிகளின் பாதுகாப்புக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், சிறுத்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது!
மனிதன் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையேயான மோதல்களில் யானைக்கு அடுத்தபடியாக அதிகம் இருப்பது சிறுத்தைகள் தான். சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) சிறுத்தைகளை அச்சுறு நிலையை அண்மித்த இனமாக (Near Threatened) வகைப்படுத்தியுள்ளதால்,  இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை வேட்டையாடுவதோ அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ தண்டனைக்குரிய குற்றம்.  ஆனால், இந்தியாவில் வாரத்திற்கு நான்கு சிறுத்தைகள் வேட்டையாடப்படுவதாக வன விலங்குகள் தொடர்புடைய வர்த்தகத்தை கண்காணிக்கும் TRAFFIC என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 17 June 2015

இரத்த வகைகளுக்கும் மூளையின் செயல்திறனுக்கும் உள்ள தொடர்பு

blood types1
நம் அனைவருக்கும் இரத்தம் பார்ப்பதற்கு ஒரே மாதிரி சிவப்பு நிறமாக இருந்தாலும், அதில் ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ என்ற நான்கு வகைகள் உண்டு என்பதும், ஒவ்வொருவரின் இரத்தமும் இதில் ஏதோ ஒரு வகையானது என்பதும் பள்ளி நாட்களிலேயே நாம் அறிந்ததுதான். இந்த இரத்த வகைகளுக்கும் மூளையின் செயல் திறனுக்கும் தொடர்பு உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. நமது மூளையின் வளர்ச்சியிலும், வயது ஏற ஏற முதிர்ச்சியடையும் நிலையிலும், மூளையின் வளர்சிதை மாற்றங்களிலும் இரத்தம் வகிக்கும் பங்கு தற்பொழுது அறியப்பட்டுள்ளது. குறிப்பாக ‘O’ வகைப் பிரிவு இரத்தம் உள்ள மக்களுக்கு, மற்ற இரத்த வகை மக்களைவிட மூளையில் சாம்பல் நிறப் பொருள் (grey matter) அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதிக அளவு சாம்பல் நிறப்பொருள் இருப்பது அறிவாற்றலுக்கும், நினைவாற்றலுக்கும் (cognitive/thinking and memory) உதவும்.
Blood cells in the brain flowing through veins
வயதாகும் பொழுது மூளை பலமாறுதல்களுக்கு உள்ளாகிறது. மூளையின் அளவு சுருங்கத் தொடங்குதல், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவுவிலும் மாறுதல் எனப் பலவகை மாறுதல்களுக்கு மூளை உள்ளாகிறது. அது போலவே வயதாகி மூளை முதிர்ச்சி அடையும் பொழுது மூளையின் சாம்பல் நிறப்பொருளின் அளவு குறைந்து மூளையின் அமைப்பில் மாறுதல் நிகழும். சாம்பல் நிறப் பொருள் நரம்புச் செல்களால் ஆனது. குறிப்பாக மூளையின் நரம்பு செல்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இவற்றின் அளவிலும் எண்ணிக்கையிலும் ஏற்படும் வயதிற்கேற்ற மாற்றங்கள் அறிவுத்திறனையும் நினைவுத்திறனையும் பாதிக்கிறது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 15 June 2015

தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல் – பகுதி-5

mukilan nerkaanal4

கேள்வி: தற்பொழுது கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருவதில் தாங்கள் பெற்ற அனுபவம் என்ன?

பதில்: நம் நாட்டில் சாதாரணமான முறைகேடுகள், லஞ்ச ஊழல்கள் இவையெல்லாம் மிகப்பெரிய அளவிலே பிரம்மாண்டமாக பேசப்படுகிறது. நான் பொதுவாழ்க்கையில் வந்த காலம்கூட ஊழல் எதிர்ப்பு காலம் என்று சொல்லலாம். நான் துவக்கத்திலே சொன்னேன் கருணாநிதி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட காலம் என்னுடைய சிறிய பத்துவயது காலத்தில்தான். எனக்கு பொதுவாழ்க்கையில் அதையே திரும்பத்திரும்ப படித்தும் கேட்டும் வளர்ந்தவன் நான். ஊழல் எதிர்ப்பு, லஞ்சஊழல் எதிர்ப்பு என்ற வகையிலே. எம்.ஜி.ஆர்-ஐ ஒரு காலத்தில் பிடித்தது என்பதுகூட திரைப்படக் கட்டமைப்பில் கட்டமைத்துக் காட்டப்பட்ட அவர், ஊழலை எதிர்ப்பவர், நேர்மைக்காக நிற்பவர் என்ற மனோபாவம்தான், அவர் மீதான ஒரு பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. பின் சமூக ரீதியாக வளரும் பொழுது, அறிவு ரீதியாக வளரும் பொழுது அப்படியான நிலை எல்லாம் அந்தக் கட்சியும் இல்லை, அவரும் இல்லை என்பதற்கான புரிதல் பெற்றேன். அதற்கான வகையிலே என்னுடைய மாற்றுச் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டவன் நான். அந்த வகையிலே ஊழல் ஒழிப்பு என்பது சிறு வயதிலிருந்தே லஞ்சத்தை எதிர்ப்பது, ஊழலை ஒழிப்பது என்பதில் மிகப்பெரிய ஆர்வமும் வெறியும் கொண்டவன் என்றுகூட சொல்லலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம் அல்ல

Dr.Jerome
மருத்துவம் தான் பயில வேண்டும், அதிலும் தமிழின் மீது கொண்ட வேட்கையால் சித்த மருத்துவத்தை விரும்பி,1992ல் நான் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பொழுது, ‘சித்தா’ என்றால் என்ன? என்று பலர் கேட்ட கேள்விகள் என்னை சோர்வுறச் செய்திருக்கின்றன. B.S.M.S முடித்த பிறகு, சித்த மருத்துவமனையை சென்னையில் துவங்கியபோதும் சித்த மருத்துவத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த சற்று போராடவே வேண்டியிருந்தது. பத்து வருட அனுபவத்திற்குப் பிறகு மீண்டும் சித்த மருத்துவர் பேரறிஞர்(M.D) முடித்து, இன்றைய சூழ்நிலையை 1992ஆம் வருட நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது எவ்வளவோ மாற்றம் மக்கள் மத்தியில் வந்திருக்கிறது. கைக்குழந்தைகளுக்கும் சித்த மருத்துவ முறையிலேயே சிகிச்சை தாருங்கள் என்று என்னிடம் கேட்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் சித்த மருத்துவம் பற்றிய ‘அறிமுகம்’ விரிவடைந்திருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 10 June 2015

சி. சு. செல்லப்பா

c.su.sellappaa1

[இந்தக் கட்டுரை, காவ்யா வெளியீடான ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்கள்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. நூலின் பதிப்பாசிரியர் கள் முனைவர் ப. மருதநாயகம், முனைவர் சிலம்பு நா. செல்வராசு. புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தில் 2005இல் படிக்கப்பட்டது]
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் குறுகியகால ஆய்வுத்திட்டம் ஒன்றின்கீழ் 1983 இல் ‘தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு-1900 முதல் 1980 வரை’ என்னும் நூலினை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்நூலின் நான்கு இயல்களில் ‘எழுத்துக்காலம்’ என்பதும் ஒன்று. நவீன திறனாய் வினை ஆராய முன்வரும் எவரும் ‘எழுத்து’ பத்திரிகையின் பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிட முடியாது. எழுத்து பத்திரிகையின் பிதாமகர் சி. சு. செல்லப்பா. (வத்தலக்குண்டில் 1912ஆம் ஆண்டு பிறந்தவர், 1998இல் சென்னையில் மறைந்தவர்). முதன்மையாகப் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றியதாக மதிப்பிடப்பட்ட எழுத்து இதழ், விமரிசன வளர்ச்சிக்காகவே தொடங்கப்பட்டது என்பது ஒரு முரண் உண்மை.

c.su.sellappaa4
மணிக்கொடி கால முதலாகச் சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர் சி. சு. செல்லப்பா. ஐம்பதுகளில் சிலகாலம் படைப்புப் பணியிலிருந்து ஒதுங்கியபோது திறனாய்வு தொடர்பாகப் படிக்கத் தொடங்கினார். குறிப்பாக அமெரிக்க வடிவவியல் திறனாய்வாளர்கள்-புதுத் திறனாய்வாளர்கள்- அவரைக் கவர்ந்தனர். விமரிசனத் துறையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் 1955இல் ஏற்பட்டது. சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிக் க. நா. சுப்ரமணியமும் சி. சு. செல்லப்பாவும் ‘சிறுகதையில் தேக்கமா-வளப்பமா?’ என்னும் பொருள் பற்றிக் கட்டுரைகள் வரைந்தனர். அதனால் பாதிக்கப்பட்ட ஆர்வியும் அகிலனும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, தமது கருத்தை வலியுறுத்திச் செல்லப்பா எழுத முனைந்தார். சுதேசமித்திரன் ஆசிரியர் வேண்டுகோளின்படி ‘நல்ல சிறுகதை எப்படி இருக்கும்?’ என்னும் தலைப்பில் எழுதலானார். இவ்வாறுதான் சி. சு. செல்லப்பாவின் விமரிசனப்பணி தொடங்கியது என்று சொல்லலாம். இந்த ஆர்வமே அவரைப் பின்னால் எழுத்து பத்திரிகை (1959) தொடங்குவதில் கொண்டு சென்று விட்டது. ஒருவகையில் சி. சு. செல்லப்பாவுக்கு ஈடாகச் சொல்லக்கூடிய வடிவநோக்குத் திறனாய்வாளர்கள் இன்றுவரை இல்லை என்று சொல்லலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 9 June 2015

தொலைக்காட்சி

tholaikkaatchi 5

தொலைக்காட்சிப்பெட்டியின் மற்றொரு பெயர் ‘இடியட் பாக்ஸ்’ – முட்டாள்(களின்) பெட்டி. முட்டாள்கள் தினத்தில் மட்டுமல்லாமல் தினம்தோறும் மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கும் பல்வேறு தொழில்நுட்ப நுகர்வு சாதனங்களில் ஒன்றுதான் தொலைக்காட்சிப்பெட்டி. பொழுதுபோக்கு என்றும் செய்திகள் என்றும் நம் வீட்டின் வரவேற்பறையில் குப்பைகளை அள்ளி நிறைத்துக்கொண்டிருக்கும் சாதனம். கூடவே நம் மூளைகளிலும்! அந்தப் பெட்டியின் திரையில், வீட்டுக்கூடத்தின் நடுவில் நிகழ்ந்து கொண்டிருப்பது, பெரும்பாலும் நாம் ரகசியம் என்றும் கெட்டவை என்றும் ஒதுக்கி வைத்திருக்கும் வக்கிரங்கள் – வன்முறை, புறம்பேசுதல், அறமீறல்கள், அத்து மீறல்கள், பாலியல் வெளிப்படுத்தல்கள்! பொழுதுபோக்கு என்னும் பெயரில் வீட்டுக்கூடத்தில், அனைத்து உறவுகளின் கூட்டு அமர்வின் முன் நிகழ்வதால் அவற்றை மனதுக்குள் ஏற்றும் தடை விலகி விடுகிறது. வக்கிரங்கள் எனக்கருதுவதால், பார்ப்பவற்றை ஈடுபாட்டுடன் செயல்படுத்த முடியாமல் ஆசைகளாக மனதின் ஆழங்களுக்குள் புதைத்து வைக்கப்படுகிறது. புதையலின் அழுத்தம் அதிகரிக்கும்போது வெடித்து விடும்! அதே நேரத்தில் தொலைக்காட்சிப்பெட்டி, சுய உணர்வுடன் உபயோகிப்பவர்களின் அறிவுக்குத் தீனி போடும் சாதனம் கூட. அதை ‘இடியட் பாக்ஸ்’ என அழைப்பது, தொழில்நுட்பத்தின் மூலம் நம்மை வந்தடைந்திருக்கும் தொலைக்காட்சிப்பெட்டியை அவமதிப்பது ஆகலாம். உண்மையில் அதை உபயோகிக்கும் நாம் முட்டாள்களா இல்லையா என்பதைப் பொறுத்துதான், அதன் குணம் அமையும் – கண்ணாடியில் பதிந்திருக்கும் அழுக்கு, அது எதிரொளிக்கும் காட்சியில் படிவது போல!
எந்த தொழில்நுட்பத்துக்கும் மூலக்காரணம், மனிதனின் மூளையில் இயற்கை விதிகள் ஏற்படுத்தும் ஒரு தூண்டுதல். அந்தத் தூண்டுதல் அளிக்கும் அறிதல். தொலைக்காட்சியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் செலினியம் என்னும் தனிமத்தின் குணமான, ஒளி பட்டால் எலெக்ட்ரான்களை வெளியிடும் தன்மையை மனிதன் கண்டறிந்ததுதான். இந்தக் கண்டுபிடிப்பு 1873-ம் ஆண்டு நிகழ்ந்தது. செலினியம் என்னும் தனிமத்தில் ஒளி படும்போது, அந்த ஒளியின் தன்மைக்கேற்ற மின் சமிக்ஞ்சையை (Signal) வெளியிடுகிறது. இதுவே ஆரம்பக்கட்ட தொலைக்காட்சி கேமராக்களின் தொழில் நுட்பம்.

ரேடியோ அலைகள் மூலம் ஒலியலைகளை 1906-ம் ஆண்டு அலைபரப்பு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1920-களின் நடுவில், படங்களை ரேடியோ அலைகள் மூலம் அனுப்ப தீவிரமான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது தொலைக்காட்சியின் வயது 100 ஆண்டுகளை இன்னும் தொடவில்லை. ஆனால் தொலைக்காட்சி தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் அதீத வேகத்தில் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 8 June 2015

தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல் – பகுதி-4

mukilan nerkaanal5

கேள்வி: தாங்கள் மேற்கொண்ட சமூகப் போராட்டங்கள் என்ன?
பதில்: இது நான் கூடங்குளம் போராட்டத்திற்கு செல்வதற்கு முன்னால் நடந்தது. 2011 செப்டம்பர் 11ந்தேதி கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்திற்குச் சென்றேன். இன்றைக்கும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவில் ஒருவராக இருந்து செயல்பட்டு வருகிறேன். அதற்கு முன்னால் என்னுடைய செயல்பரப்பு என்பது ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில்தான். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களில் 2005-களில் இருந்து தொடர்ந்து வினையாற்றி வருகிறேன். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக அறியப்பட்டாலும் கூட, என்னுடைய செயல்பாடு என்பது நேரடியாக சுற்றுச்சூழலுக்கு வந்தது அல்ல. நான் ஏற்கனவே தொடக்கத்திலேயே சொன்னேன், தமிழீழ விடுதலை, தமிழ்தேசிய விடுதலை என்ற அரசியல் களத்தின் மூலம்தான் நான் சமூக செயல்பாட்டுக்கு வந்தேன்.

mukilan nerkaanal7
1983-லே தமிழீழப் படுகொலை நடந்த பொழுது, தியாகப் பயணத்தில் பங்கெடுத்தப் பின்பு, நெடுமாறன் அய்யா அவர்களுடைய அன்றைய தமிழ்நாடு, காமராசு காங்கிரசு அமைப்பில் இணைந்து செயல்பட்டேன். அதனுடைய மாணவர் அமைப்பினுடைய பொறுப்பாளராக இருந்தேன். தமிழ்நாடு காமராசு காங்கிரசு என்பது தமிழர் தேசிய இயக்கமாக மாற்றப்பட்ட பொழுதும் அதனுடைய மாணவர் அமைப்பிலே பொறுப்பாளராக செயல்பட்டேன். அப்போதைய காலகட்டங்களில் எனக்கு மார்க்சீயத்தின் மீதான பரிச்சயம் ஏற்பட்டு, புரிதல்கள் ஏற்பட்டு அதைப்பற்றி பலரோடும் விவாதிக்கத் தொடங்கினேன். அதனுடைய வழி இங்கே ஒரு சுரண்டலற்ற, ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செய்யாத, சுரண்டல் இல்லாத ஒரு சமத்துவமான சமூகம் அமையவேண்டும், இந்த நாட்டிலே வியர்வை சிந்தி உழைக்கக்கூடிய உழவர் தொழிலாளருடைய அதிகாரம் அமைய வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட அதிகாரம் என்பது குறிப்பாக இந்தியச் சூழலிலே இந்தியா என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நாடு. இந்த கட்டமைக்கப்பட்ட இந்திய நாடு என்பது எந்த விதமான மொழி தேசிய இனத்திற்கும், எந்த விதமான சுதந்திரமான அணுகுமுறைகளும் தராமல் முழுக்க முழுக்க ஒரு அடிமைப்படுத்தி வைக்கக்கூடிய கட்டமைப்புதான் இந்திய கட்டமைப்பு என்பதை உணர்ந்து இங்கே ஒவ்வொரு மொழி வழி தேசிய இனமும் தன்னுடைய தேசிய விடுதலை புரட்சியை நிகழ்த்துவதன் ஊடாகத்தான் சமூகம் அடுத்த படிநிலைக்கு செல்லப்படமுடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சென்னையில் விண்ணைத்தொடும் நிலத்தின் மதிப்பு – விரைவில் சரிந்து விழும்

chennayil vinnai thodum4
சென்றவாரம் இரண்டு மனை சார்ந்த பேரங்களில் ஈடுபட்டு தோல்வியடைந்தேன். காரணம், மனைக்கு அதன் உரிமையாளர்கள் கேட்ட தொகை விண்ணைத்தொடும் அளவிற்கு இருந்தது. அந்த விலையில் வாங்கி, அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டி விற்றால் மிகக் கொடுமையான கடனுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். என்னிடம் இருக்கக்கூடிய அனைத்து சொத்துக்களையும் விற்றாலும் அந்தக் கடன் தீராது. இரண்டு மனை பேரங்களிலும், தாங்கள் கேட்டத் தொகைக்கு பலர் வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அறிவுள்ள எந்த ஒரு கட்டிட முதலாளியும் முட்டாள் தனத்துடன் சொல்லப்படும் அத்தகைய அதிக விலையில் மனையை வாங்கமாட்டார்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக நிலம்/வீடு சார்ந்த சொத்துக்களில் விலையை நீங்கள் கவனித்து வந்தால் பெரிய அளவிலான கழிவுகளை முதலாளிகள் தந்து தங்களிடம் இருக்கக்கூடிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் விற்றுப்போக எண்ணுவதைக் காணமுடியும். ஒருசில மேல்தட்டுப் பகுதிகளில் தொடக்கத்தில் அறிவித்த விலையை விட முப்பதிலிருந்து நாற்பது சதவிகிதம் விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 3 June 2015

சிறகு இதழுக்கு செய்தியாளர்கள்/நிருபர்கள் தேவை

reporter1

சிறகு இதழுக்கு பகுதி வாரியாக நேர்காணல்கள், கட்டுரைகள், படக்கட்டுரைகள், நிகழ்வுகள், பிற செய்திகள் போன்றவற்றை படைப்புகளாக அனுப்பக்கூடிய செய்தியாளர்கள்/நிருபர்கள் தேவைப்படுகிறார்கள். பகுதி எனப்படுவது தமிழகத்தின் மாவட்டங்களாக இருக்கலாம், 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 2 June 2015

பட்டறிவும் விதிகளும்

pattarivum vidhigalum2
அறிவியல் மூலம் நாம் பெறும் அறிவு நமக்குக் கூறுவது, ஏரணவியல் (logic) முறையில் ஒன்று நிகழ்வதற்கு மற்றொன்று காரணம் என்ற அடிப்படை உண்மையை. நிகழ்வுகளின் காரணம் யூகிக்கப்பட்டு, அந்தக் காரணம் நிகழ்வை ஏற்படுத்துகிறதா என்று பல சோதனைகள் செய்யப்படுகிறது. அந்த நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் அதன் காரணி மூலம்தான் நிகழ்கிறது என்பது ஆய்வுகள் முறையில் உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர் ஆய்வறிஞர் குழுவால் “இதற்குக் காரணம் இது என்பது சரியே” என உறுதிப் படுத்தப்பட்ட பின்னர் அவற்றை அறிவியல் தரும் விதிகளாக உலகம் ஒப்புக்கொள்கிறது. இந்த அறிவியல் விதிகளை முறியடிக்கும் மாற்றுவிளக்கம் எழும்வரை இந்த விதிகளே ஒரு நிகழ்வுக்கு விளக்கம் தரப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மரத்தில் உள்ள பழம் நிலத்தில் விழுவதற்குக் காரணம் புவியின் புவிஈர்ப்புவிசை என்பது யாவரும் அறிந்த ஒரு அறிவியல் விதியின் விளக்கம்.
pattarivum vidhigalum3
அறிவியல் பாடத்தில், குறிப்பாக இயற்பியலில் நாம் படித்த நியூட்டனின் விதிகள், கெப்ளரின் விதிகள், ஃபிளம்மிங்கின் விதிகள் போன்ற அடிப்படை அறிவியல் விதிகள் யாவும் இவ்வாறு அறிவியல் சோதனைகள் மூலம் ஆராயப்பட்டு, ஆதாரப்பூர்வமான முடிவுகளால் அறிவியல் விதிகள் என ஒப்புக்கொள்ளப்பட்டவை. இவை அறிவியல் கோட்பாடுகளை காரண காரியத்துடன் ஏன் விளைவுகள் நிகழ்கின்றன எனத் தெளிவாக விளக்குபவை. ஒவ்வொருமுறையும் இந்த விதிகள் கூறுவது போலவே விளைவுகளும் மாறாது நிகழும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 1 June 2015

வீதி நாடக கலைக்கடலில் எனது ஒரு துளி அனுபவம்

veethi naadagam5
முத்தமிழின் ஒரு பகுதியான நாடகத்திற்கென்று ஒரு தனித்துவம் என்றும் உண்டு. பாட்டு, இசை, நடிப்பு என மூன்றும் கலந்த வடிவமே நாடகம். சங்ககாலம் முதல் பாணர், கூத்தர், விறலியர் என நாடக வரலாறு நம் தமிழ் சமூகத்திற்கு உண்டு என்றாலும், மேடையில் திரை வருதல், விலகுதல், ஒப்பனை, ஒலி-ஒளி வடிவம் அமைத்தல் போன்ற வடிவங்களை பார்சி இனத்தவரிடமிருந்து நாம் கற்றுக் கொண்டோம் என்பது வரலாறு.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் சங்கரதாசு சுவாமிகள், T.K.சண்முகம் போன்ற பல நாடக வல்லுனர்கள் மேலும் நம் நாடகக் கலையை மெருகூட்டினர். ஒரு நாடகம் நிகழ்த்த மேடை, உடை, ஒப்பனை, ஒலி, ஒளி என பல்வேறு உபகரணங்கள் தேவைப்பட்டன. இதெல்லாம் பெற்ற ஒரு குழுவே நாடகக்குழு என அங்கீகரிக்கப்பட்டது. இவைகள் ஏதும் இல்லாமலே மக்களிடத்தில் ஒரு நாடகத்தை நிகழ்த்த முடியும் என்ற ஒரு புதுக் கொள்கையை வகுத்தவரே பாதல் சர்க்கார். வங்காளத்தைச் சேர்ந்த இவர் வீதி நாடகம் என்ற புது நாடக யுக்தி ஒன்றை உருவாக்கினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.