Tuesday 23 June 2015

மதச்சார்பின்மையை மறுபரிசீலனை செய்ய முடியுமா?

madhachaarpinmai4
இந்திய மதச்சார்பின்மை இப்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. இதொன்றும் புதிதல்ல. காலங்காலமாக நிகழ்ந்து வரும் விஷயம் தான். குறிப்பாக தேர்தலின் போது, மதச்சார்பின்மை அரசியல் கச்சாப் பொருளாகிறது. போலி மதச்சார்பின்மைவாதிகள் என்று பாரதிய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சாட்டுவதும், மதவாதிகள் என்று காங்கிரஸ் பா.ஜ.க-வைச் சாடுவதும் நமக்கொன்றும் புதிதில்லையே.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முகவுரையில் இருக்கும் “மதச்சார்பற்ற, சமதர்ம” என்ற சொற்கள் இப்போதைய விவாதப் பொருளாகியிருக்கின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விளம்பரங்களில் இருந்த அரசியல் சாசன முகவுரையில் இச்சொற்கள் விடுபட்டுப் போயிருந்தன. பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியிலிருப்பதால் இவ்விடுபடலைப் பற்றி சந்தேகம் எழுவது இயல்பே. 1950ல் இருந்த அரசியல் சாசனப் பதிப்பின் முகவுரையை வெளியிட்டதாக அரசு கூறுகிறது.

1950ல் அமல்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தில் இவ்வார்த்தைகள் இல்லை. நாற்பத்திரண்டாவது அரசியல் சாசன திருத்தத்தில் தான் இச்சொற்கள் அரசியல் சாசன முகவுரையில் ஏற்றப்பட்டன. ஆனால் அரசியல் நிர்ணய அவையில் இவ்வார்த்தைகளைப் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment