Monday 8 June 2015

சென்னையில் விண்ணைத்தொடும் நிலத்தின் மதிப்பு – விரைவில் சரிந்து விழும்

chennayil vinnai thodum4
சென்றவாரம் இரண்டு மனை சார்ந்த பேரங்களில் ஈடுபட்டு தோல்வியடைந்தேன். காரணம், மனைக்கு அதன் உரிமையாளர்கள் கேட்ட தொகை விண்ணைத்தொடும் அளவிற்கு இருந்தது. அந்த விலையில் வாங்கி, அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டி விற்றால் மிகக் கொடுமையான கடனுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். என்னிடம் இருக்கக்கூடிய அனைத்து சொத்துக்களையும் விற்றாலும் அந்தக் கடன் தீராது. இரண்டு மனை பேரங்களிலும், தாங்கள் கேட்டத் தொகைக்கு பலர் வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அறிவுள்ள எந்த ஒரு கட்டிட முதலாளியும் முட்டாள் தனத்துடன் சொல்லப்படும் அத்தகைய அதிக விலையில் மனையை வாங்கமாட்டார்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக நிலம்/வீடு சார்ந்த சொத்துக்களில் விலையை நீங்கள் கவனித்து வந்தால் பெரிய அளவிலான கழிவுகளை முதலாளிகள் தந்து தங்களிடம் இருக்கக்கூடிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் விற்றுப்போக எண்ணுவதைக் காணமுடியும். ஒருசில மேல்தட்டுப் பகுதிகளில் தொடக்கத்தில் அறிவித்த விலையை விட முப்பதிலிருந்து நாற்பது சதவிகிதம் விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment