Monday 15 June 2015

தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல் – பகுதி-5

mukilan nerkaanal4

கேள்வி: தற்பொழுது கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருவதில் தாங்கள் பெற்ற அனுபவம் என்ன?

பதில்: நம் நாட்டில் சாதாரணமான முறைகேடுகள், லஞ்ச ஊழல்கள் இவையெல்லாம் மிகப்பெரிய அளவிலே பிரம்மாண்டமாக பேசப்படுகிறது. நான் பொதுவாழ்க்கையில் வந்த காலம்கூட ஊழல் எதிர்ப்பு காலம் என்று சொல்லலாம். நான் துவக்கத்திலே சொன்னேன் கருணாநிதி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட காலம் என்னுடைய சிறிய பத்துவயது காலத்தில்தான். எனக்கு பொதுவாழ்க்கையில் அதையே திரும்பத்திரும்ப படித்தும் கேட்டும் வளர்ந்தவன் நான். ஊழல் எதிர்ப்பு, லஞ்சஊழல் எதிர்ப்பு என்ற வகையிலே. எம்.ஜி.ஆர்-ஐ ஒரு காலத்தில் பிடித்தது என்பதுகூட திரைப்படக் கட்டமைப்பில் கட்டமைத்துக் காட்டப்பட்ட அவர், ஊழலை எதிர்ப்பவர், நேர்மைக்காக நிற்பவர் என்ற மனோபாவம்தான், அவர் மீதான ஒரு பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. பின் சமூக ரீதியாக வளரும் பொழுது, அறிவு ரீதியாக வளரும் பொழுது அப்படியான நிலை எல்லாம் அந்தக் கட்சியும் இல்லை, அவரும் இல்லை என்பதற்கான புரிதல் பெற்றேன். அதற்கான வகையிலே என்னுடைய மாற்றுச் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டவன் நான். அந்த வகையிலே ஊழல் ஒழிப்பு என்பது சிறு வயதிலிருந்தே லஞ்சத்தை எதிர்ப்பது, ஊழலை ஒழிப்பது என்பதில் மிகப்பெரிய ஆர்வமும் வெறியும் கொண்டவன் என்றுகூட சொல்லலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment