Monday 8 June 2015

தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல் – பகுதி-4

mukilan nerkaanal5

கேள்வி: தாங்கள் மேற்கொண்ட சமூகப் போராட்டங்கள் என்ன?
பதில்: இது நான் கூடங்குளம் போராட்டத்திற்கு செல்வதற்கு முன்னால் நடந்தது. 2011 செப்டம்பர் 11ந்தேதி கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்திற்குச் சென்றேன். இன்றைக்கும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவில் ஒருவராக இருந்து செயல்பட்டு வருகிறேன். அதற்கு முன்னால் என்னுடைய செயல்பரப்பு என்பது ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில்தான். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களில் 2005-களில் இருந்து தொடர்ந்து வினையாற்றி வருகிறேன். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக அறியப்பட்டாலும் கூட, என்னுடைய செயல்பாடு என்பது நேரடியாக சுற்றுச்சூழலுக்கு வந்தது அல்ல. நான் ஏற்கனவே தொடக்கத்திலேயே சொன்னேன், தமிழீழ விடுதலை, தமிழ்தேசிய விடுதலை என்ற அரசியல் களத்தின் மூலம்தான் நான் சமூக செயல்பாட்டுக்கு வந்தேன்.

mukilan nerkaanal7
1983-லே தமிழீழப் படுகொலை நடந்த பொழுது, தியாகப் பயணத்தில் பங்கெடுத்தப் பின்பு, நெடுமாறன் அய்யா அவர்களுடைய அன்றைய தமிழ்நாடு, காமராசு காங்கிரசு அமைப்பில் இணைந்து செயல்பட்டேன். அதனுடைய மாணவர் அமைப்பினுடைய பொறுப்பாளராக இருந்தேன். தமிழ்நாடு காமராசு காங்கிரசு என்பது தமிழர் தேசிய இயக்கமாக மாற்றப்பட்ட பொழுதும் அதனுடைய மாணவர் அமைப்பிலே பொறுப்பாளராக செயல்பட்டேன். அப்போதைய காலகட்டங்களில் எனக்கு மார்க்சீயத்தின் மீதான பரிச்சயம் ஏற்பட்டு, புரிதல்கள் ஏற்பட்டு அதைப்பற்றி பலரோடும் விவாதிக்கத் தொடங்கினேன். அதனுடைய வழி இங்கே ஒரு சுரண்டலற்ற, ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செய்யாத, சுரண்டல் இல்லாத ஒரு சமத்துவமான சமூகம் அமையவேண்டும், இந்த நாட்டிலே வியர்வை சிந்தி உழைக்கக்கூடிய உழவர் தொழிலாளருடைய அதிகாரம் அமைய வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட அதிகாரம் என்பது குறிப்பாக இந்தியச் சூழலிலே இந்தியா என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நாடு. இந்த கட்டமைக்கப்பட்ட இந்திய நாடு என்பது எந்த விதமான மொழி தேசிய இனத்திற்கும், எந்த விதமான சுதந்திரமான அணுகுமுறைகளும் தராமல் முழுக்க முழுக்க ஒரு அடிமைப்படுத்தி வைக்கக்கூடிய கட்டமைப்புதான் இந்திய கட்டமைப்பு என்பதை உணர்ந்து இங்கே ஒவ்வொரு மொழி வழி தேசிய இனமும் தன்னுடைய தேசிய விடுதலை புரட்சியை நிகழ்த்துவதன் ஊடாகத்தான் சமூகம் அடுத்த படிநிலைக்கு செல்லப்படமுடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment