Thursday 29 December 2016

பாவேந்தரின் பகுத்தறிவுப் பார்வையில் திருவாரூர்த் தேர்த்திருவிழா


siragu-bharathidasan1

பாரதிதாசன் கவிதைகளில் தமிழுணர்வும்,  நகைச்சுவை உணர்ச்சியும், புரட்சிக் கருத்துகளும் பரவிக்கிடக்கும். அவரின் சிறிய கவிதை முதல் காப்பியம் வரை இப்பொதுவியல்பு காணப்படும். அவரின் ஒரு நெடுங்கவிதை திருவாரூர் தேர் என்பதாகும். இது அருள்சுடர் பதிப்பகம் வெளியிட்ட பாரதிதாசன் கவிதைகள்  என்ற தலைப்புடைய முழுத்  தொகுப்பில், குயில் பாடல்கள் என்ற பகுதியில் உள்ளது.  இக்கவிதையில் நகையுணர்வும், புரட்சிக் கருத்துகளும் அமைந்து சிறக்கின்றன. எல்லா இடத்திலும் இறைவன் இருக்கிறான் என்றால் எதற்காக ஓரிடத்தில் எல்லா மக்களும் சென்று நெருக்கடியை உண்டு செய்யவேண்டும் என்ற அடிப்படைக் கேள்வியை முன்வைக்கும் நிலையில் இக்கவிதை வரையப்பெற்றுள்ளது.

திருவாரூரில் அருள்மிகு தியாகராசர் மூலக்கடவுளாக விளங்குகிறார். அவருக்குத் தேர்த் திருவிழா நடைபெறும். அத்தேர்த்திருவிழாவில் மக்கள் அதிக அளவில் கூடுவர். இத்தேர் ஆழித்தேர் என்று அழைக்கப்பெறும் அளவில் மிகப் பெரிதானது. எண்கோணத்தில் இருபது பட்டைகள் உடையதாய் முன்னூற்று ஐம்பது டன் எடை கொண்டதாக இத்தேர் விளங்குகிறது. பாரதிதாசன் காலத்தில் இத்தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது. அத்தேர்த் திருவிழாவைக் காண அக்காலத்தில் புகைவண்டியில்தான் செல்லவேண்டும். இதற்காக மக்கள் புகைவண்டியில் பதிவுசெய்ய முண்டியடித்தனர். தேருக்கு முதல் நாள் புகைவண்டியில் ஏறுவதற்கு இயலாத நிலை. மக்கள் கூட்டம் கூட்டமாக திருவாரூர் தேர் காண வந்த காட்சியை, அவர்கள் அக்கூட்ட நெரிசலில் சிக்கித்தவிப்பதை பாடமாக படிப்பவர்முன் சித்தரித்துக் காட்டுகிறார் பாரதிதாசன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

வாசிப்பு


siragu-ilakkiyam1

எழுத்தறிவை அடைவதன் அடிப்படைக் காரணம் வாசிப்பு. வாசிப்பிலிருந்தே அறிதலென்னும் விருட்சத்தின் பெரும்பாலான கிளைகள் கிளைக்கின்றன. அறிதல் வாழ்வை செறிவுள்ளதாக்குகிறது. அறிதல்கள் தடைசெய்யப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை உண்மையில் மனிதன் வாழும் எல்லையைச் சுருக்குகிறது, அனுபவங்களை அடைவதிலிருந்து விலக்குகிறது. அனுபவங்களின் விரிவே வாழ்க்கையின் விரிவு.


வாசிப்பிற்குத் தேவையான முக்கியத்துவத்தை சமூகம் அளிக்கிறதா? முறைப்பட்ட கல்வியைக் கடந்த வாசிப்பை சமூகம் ஊக்குவிக்கிறதா? இல்லை என்றே தோன்றுகிறது – முறைப்பட்டக் கல்வியில் அளிக்கப்படும் வாசிப்பு நுண்தகவல்களை மிக அபூர்வமாகவே அளிக்கிறது. வாசிப்பை ஊக்குவிக்கும் எந்தக் காரணிகளும், இந்தியாவில் பெரும்பாலான கல்வித்துறைகளில் இல்லை. எனவே வாசிப்பை இயல்பாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே உள்ளது. இதையும் கடந்து, சுய விருப்பங்களின் மூலம் வாசிப்பவர்களும் பெரும்பாலும் பொழுதுபோக்கு வாசிப்புகளையை நாடுகிறார்கள், அல்லது வெற்று உணர்ச்சிகளைத் தூண்டும் வாசிப்புகள். காட்சி ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், பொழுது போக்குகளுக்குக் குறைவில்லை. காட்சி ஊடகங்களின் பரவலாக்கத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பொழுதுபோக்குக்காக வாசிப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் பொழுதுபோக்குகளுக்கு குறைவில்லாத இந்தக் காலத்திலும் வெறும் பொழுதுபோக்கு வாசிப்பு பரவலாக இருப்பது ஒரு முரணாகவே தெரிகிறது. ஆனாலும் வாசிப்பு நிகழ்கிறது என்பது ஊக்கமளிக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 27 December 2016

அடித்தட்டு மக்களும், பணமில்லா வர்த்தகமும்


siragu-atm-bank3

கடந்த நாற்பத்தைந்து நாட்களாக மக்கள் தங்கள் பணத்திற்காக அலையும் ஒரு அவலத்தை நாம் எல்லோரும் பார்த்தும், அனுபவித்துக் கொண்டும்தான் இருக்கிறோம். மத்திய பா,ஜ.க. அரசின் முன்யோசனையின்றி செய்த இந்த செயலால் மிகவும் பாதிப்புள்ளவர்கள் அடித்தட்டு மக்கள் தான்.!


திடீரென்று ஒருநாள் இரவு, ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்களை மதிப்பிழக்கச் செய்தபோது மக்கள் சற்று அதிகமாவே அதிர்ச்சிக்குள்ளாகினர் என்பது மறுக்க முடியாத உண்மை. பின்பு கருப்புப்பண ஒழிப்பிற்காகத் (கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டு விட்டதா என்பது வேறு செய்தி…!) தான் இந்த நடவடிக்கை என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டனர். முதலில் இரண்டு நாட்கள் என்றும், பிறகு மூன்று வாரங்கள் ஆகி, அதற்குப் பிறகு ஐம்பது நாட்கள் என்று சொல்லப்பட்டு, இன்றுவரை மக்கள் படும் அவதிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 26 December 2016

துவக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் புதிய சிகிச்சை முறை


siragu-cance-medicine2

அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் (2,00,000) ஆண்களுக்கு ‘புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய்க்கான’ (Prostate cancer/Prostatic carcinoma symptoms) அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். இங்கிலாந்தில் ஆண்டொன்றுக்கு 46,000 புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் உள்ளவர்கள் கண்டறியப்படுகிறார்கள், அவர்களில் 11,000 பேர் இந்த நோயினால் மரணத்தை எதிர்கொள்கிறார்கள். இனப்பெருக்கத்திற்கு உதவும் வகையில், ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில், விந்தணுக்களை (sperm) கடத்துவதற்குத் தேவையான ‘விந்துநீரைச்’ (seminal fluid) சுரப்பதில் ஆண்மைச்சுரப்பி என அழைக்கப்படும் புரோஸ்டேட் சுரப்பி (prostate gland) பங்களிக்கிறது.


பொதுவாக புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் நிரந்தரமாக எதிர் கொள்வது ஆண்மைக்குறைவு எனப்படும் ஆண்குறியின் விறைப்புத் தன்மை குறைபாட்டினால் (erectile dysfunction) ஏற்படும் செயலிழப்பின் காரணமாக இல்லறவாழ்வு பாதிக்கப்படுவதும்; சிறுநீர்க்கழிப்பதில் (urination) கட்டுப்பாடின்மை (incontinence) என்ற நிலை ஏற்படுவதுமாகும். இரவில் அடிக்கடி சிறுநீர்க்கழிக்கும் தேவையால் உறக்கம் கெடுவது, சிறுநீரகப்பையில் சேகரிக்கப்பட்ட சிறுநீரை முழுமையாக வெளியேற்றப்பட முடியாமல் போதல், கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறிவிடுதல், சிற்சில சமயம் சிறுநீரில் உதிரப்போக்கு, சிறுநீர் கழிக்கும் பொழுது வலி எனப் பல தொல்லைகளை அறுவை சிகிச்சையின் பக்க விளைவாக நோயாளிகள் எதிர் கொள்வார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 20 December 2016

கவிதைச்சோலை (நூல்களைப் படி!, ஒளிவீசாத தீபங்கள்!)


நூல்களைப் படி!

-இல.பிரகாசம்
siragu-reading-books1


சிந்திக்க நல்ல நூல்களைப் படி
சிறந்தநற் பண்பினை ஓதுவாய் உள்ளபடி
பழமையை சீர்தூக்கி புதிய சிந்தனைப்
புரட்சியை செய்வாய் உன்றன் நற்
சமுதாயம் உயர்ந்திடும் படி!- இலக்கியக்
காடென இவ்வுலகம் விரிந்துள்ளதை இப்போ
துணர்ந்து சீரிய எழுத்துக்களால் உழைப்பை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=24697


Monday 19 December 2016

கவிஞர் கண்ணதாசனும் அரசியல் கவிதைகளும்


siragu-kannadasan1

“மாற்றம் எனது மானிடத் தத்துவம்” என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் தன் அரசியல் வாழ்வில் பல்வேறு மாற்றங்களைக் கண்டார். அவற்றால் அவர் கொண்ட விருப்பு வெறுப்புகளும் ஏராளம். அவைகளை தன் சுயசரிதை நூல்களான மனவாசம் மற்றும் வனவாசத்தில் உரைநடையாக பதிவு செய்திருந்த போதிலும் தன் உணாச்சிகளை வீரியமிக்க கவிதைகளால் எழுதி எழுதித் தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டார்.
தன் முரண்பாட்டை வெளிப்படுத்திய தன்னுணர்ச்சிக் கவிஞர்:
“மானிடரைப் பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கையான பதிகம்
மலையளவு தூக்கி உடன்
வலிக்கும் வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்”

என்று தான் கொண்ட கருத்து முரண்பாடுகளின் உச்சநிலையை வெளிப்படுத்துகிறார். தனது தெய்வமிருகத் தன்மையைத் தன் வாழ்நாளில் போற்றியவர்களை உடன் தூற்றியும் தூற்றியவர்களை மறுநிகழ்வில் போற்றியும் வந்துள்ளதனை அவரே பதிவிடுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 18 December 2016

திருமணமாகாத தாய் – குழந்தையின் இயற்கை பாதுகாவலராக இருக்க முடியுமா?


siragu-natural-guardian5

ஒரு குழந்தையை பத்து மாதம் கருவில் சுமந்து, பெற்று, கண்ணும் கருத்தும் கொண்டு வளர்க்கும் தாய்தான் ஒரு குழந்தையின் இயற்கை பாதுகாவலர் (natural guardian) என்பது தான் சரியாக இருக்க முடியும். ஆனால் இந்தியா போன்ற குடும்ப அமைப்பும், ஆண் ஆதிக்கமும் கொண்ட நாட்டில் அத்தகைய பரந்த நோக்கு மக்களுக்குக் கிடையாது. குறிப்பாக ஒரு பெண் திருமணம் ஆகாமல் தாய் ஆகும் நிலையில், அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் தந்தை யார்? என்பதை வெளியிட்டே தீர வேண்டும், அந்த நபர் தான் குழந்தையின் முதன்மை பாதுகாவலர் என்ற நிலையே இருந்து வந்தது. இந்த நிலையினை மாற்ற, இந்திய உச்சநீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு மிகச் சிறந்த தீர்ப்பினை வழங்கியது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Saturday 17 December 2016

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -4


பஞ்சதந்திரக் கதைகள் (தொடர்ச்சி)
இங்கும் அப்படித்தான் நடக்கிறது. கெட்டவர்கள் கையில் அகப்பட்டு இறப்பதைக் காட்டிலும் சண்டை செய்து இறப்பதே மேலானது. போர் முனையில் இறப்பவன் சொர்க்கம் அடைகிறான். பகைவர்களை வென்றால், அவனுக்கு ராஜ்யம் கிடைக்கிறது. ஆகவே வீரர்களுக்குச் சாவும் பிழைப்பும் சமம்தான் என்று சஞ்சீவகன் கூறியது.
தமனகன்:பகைவர்களுடைய பலத்தை அறியாமல் எவன் பகை கொள்கிறானோ, அவன் ஒரு சிட்டுக்குருவியினால் பெருங்கடல் அவமானம் அடைந்ததைப் போல அவமானம் அடைவான்.
சஞ்சீவகன்: அது எப்படி?
தமனகன், கதை சொல்லலாயிற்று.
siragu-panjathandhira-story3

ஒரு கடற்கரையில் உள்ள மரத்தில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடுகட்டிக் கொண்டிருந்தன.
பெட்டை (ஆண்பறவையைப் பார்த்து): நான் எங்கே முட்டை இடுவேன்? ஆண்பறவை: இது நல்ல இடம்தான். இங்கேயே இடு.
பெட்டை: இந்தக் கடலினால் ஒருவேளை அபாயம் நேரிடலாம்

ஆண்குருவி: இந்தக் கடல் என்னுடன் பகைத்துக் கொள்ள முடியாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 15 December 2016

பௌத்த சமய நூல்கள்- இறுதிப் பகுதி


siragu-budha6

தமிழகத்தில் பௌத்தமும், பௌத்த நூல்களும்
தமிழகத்தில் எழுந்த பௌத்த சமயக் கருத்துகள் அடங்கிய நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம். முதல் வகை பௌத்தர் இயற்றிய பௌத்த சமயம் சார்ந்த நூல்கள், இரண்டாம் வகை பிற சமயத்தார் படைத்த பௌத்த சமயக் கருத்துகளைக் கொண்ட நூல்கள் என்று பிரிக்கலாம்.
பௌத்தர் இயற்றிய பௌத்த சமயம் சார்ந்த நூல்கள்

பௌத்த மதத்ததைத் தழுவியவர்களால் பௌத்த சமயப் பதிவுகளை வெளிப்படுத்த எழுதப்பெற்ற நூல்களைப் பௌத்த சமயம் சார்ந்த நூல்கள் என்ற வகையில் அடக்கலாம். அவ்வகையில் மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம், சிந்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்பசார கதை, மானஓர்ப்பதிகம், அபிதம்மாவதாரம் ஆகியன அடங்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

எதிர்மறை எண்ணங்களை விரட்டுங்கள்


Idea

நம் வாழ்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் நேரடியாகவோ மறைமுகமாகாவோ, தெரிந்தோ தெரியாமலோ நம்மால் தான் நிகழக்கூடியது. இருந்தபோதிலும் மனித மனம் எப்பொழுதும் நேர்மறையாகவே நினைத்துக் கொண்டிருப்பதுவே கிடையாது. எப்பொழுதும் “நெகட்டிவ்” என்று சொல்லப்படும் எதிர்மறை எண்ணங்களைத் தான் அதிகமாக மனம் நினைத்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறது. இப்படி நம் மனம் எதை எதிர்பார்க்கிறதோ அதையே தான் வாசலில் ஆரத்தி கரைத்து எதிர்பார்த்துக் கொண்டுமிருக்கும். இப்படித்தான் குப்பைகளான எண்ணங்கள் நம்முள் நுழையும், பிறகு அவை எண்ணங்களின் குப்பைகளாக உருவெடுக்கும். சிலர் இதற்கு விதி விலக்காக இருப்பார்கள், அவர்களுக்கு இயற்கையாகவே நேர்மறையும் நம்பிக்கை எண்ணமும் மேலோங்கி இருக்கும். அப்படி இல்லாதவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை ஏனென்றால் நீங்களும் அவ்வாறு மாறமுடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 14 December 2016

இலக்கியச் சுவையும் எழில்மிகு அணியும்


பன்மணிக் கோவை: நூல் மதிப்புரை
panmanik-kovai

தமிழிலக்கியம் காட்டும் புரட்சிப்பெண், அறவாழ்வு மேற்கொண்ட மணிமேகலையைப் போற்றும் விதத்தில் பெயர் சூட்டப்பட்டு,   அமெரிக்க வாழ் தமிழர்களால் மேகலா இராமமூர்த்தி என அறியப்படுபவர் “பன்மணிக் கோவை” நூலின் ஆசிரியரான மேகலா. முதுகலை தமிழிலக்கியமும், முதுகலை கணினிப் பயன்பாட்டியியலும் படித்து, தற்பொழுது ஃப்ளோரிடா பாலிடெக்னிக் (Florida Polytechnic University) பல்கலைக்கழகத்தில் கணினிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழார்வத்தால் “வல்லமை” இணைய இதழின் துணை ஆசிரியராகவும் தொண்டாற்றி வரும் மேகலா அவர்கள், மறைந்த தமிழறிஞர் இராம. இராமமூர்த்தி அவர்களின் அருமை மகளும் ஆவார். தந்தையின் வழியொட்டி தமிழிலக்கியச் சுவையைத் தானும் துய்த்து, மற்ற தமிழ் ஆர்வலர்களும் படித்து மகிழும் வகையில் வெளியிட்டுள்ள பன்மணிக் கோவை அவரது நோக்கத்தைச் சிறப்புடன் நிறைவு செய்துள்ளது.

சங்க இலக்கியச் சுவை, ஒப்பிலக்கிய ஆய்வு, வாழ்வியல் விளக்கம், அறநெறி வழிப்படுத்துதல், நன்னெறி அறிவுரைகள், மானுடவியல் கட்டுரைகள், உயிரியல் தகவல்கள் என எக்கோணத்தில் மணிமணியாகக் கட்டுரைகள் அமைந்தாலும், அக்கட்டுரைகள் அனைத்தையும் இணைத்து ஊடாடிச் செல்லும் பொன்னிழை தமிழிலக்கியப் பாடல்களில் இருந்து எடுத்தாண்ட மேற்கோள்களே. கூறப் போந்த எக்கருத்திற்கும் ஒரு இலக்கியப் பாடல் ஆசிரியரின் நினைவில் நிழலாடுவது ஒரு சிறப்பு என்றால் அதனைத் தக்கமுறையில் கட்டுரையில் அமைத்திருப்பதும் மற்றொரு சிறப்பு. மேகலாவின் இத்தகைய விவரிப்பினால் தமிழிலக்கியத்திற்கு புதியவர் ஒருவரும், கற்றுத் துறைபோகிய தமிழறிஞர் ஒருவரும் இந்நூலை ஒருசேரப் படித்து மகிழலாம் என்பது திண்ணம். பள்ளிப்படிப்புடன் தமிழிலக்கியம் படிக்க வாய்ப்பின்றி மேற்படிப்பிற்குப் பிற துறைகளைத் தேர்வு செய்து தடம் விலகிச் சென்றவர்களுக்கு இந்த நூல் தமிழிலக்கியக் கருவூலத்தை அறிமுகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்பது மிகையன்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 8 December 2016

பௌத்த சமய நூல்கள்


siragu-budha2

பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது.

பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக  வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது.


புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=24519

Wednesday 7 December 2016

இந்திய உச்ச நீதிமன்றமும் தேசிய கீதமும்


siragu-national-anthem4

அண்மையில் நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதாவ ராய் கொண்ட குழு தேசிய கீதம் திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடி இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது எனச் சொன்னால் மிகையன்று. பொழுதுபோக்கிற்காக படம் பார்க்க வரும் மக்களிடம் கண்டிப்பாக தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் எனக் கூறுவது அறிவானதா? அது பல பிரச்சனைகளையும், சண்டைகளையும் உருவாக்காதா? அதே போன்று தாய்நாட்டின் மீதான பற்று என்பது நிர்பந்திப்பதால் வந்து விடுமா?  என ஒரு புறம் கேள்விகள் கேட்கப்படுகின்றது.
siragu-national-anthem2


இது ஒரு புறம் இருக்க, 1962 ல் இந்திய – சீனா போரின் போது திரையரங்குகளில் படம் முடிந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தாத காரணத்தால் அந்தப்பழக்கம் நிறுத்தப்பட்டது. மீண்டும்  
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2003 இல் போடப்பட்ட உத்தரவின் படி திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் பல பிரச்சனைகளைக்கட்டாயமாக்கப்பட்ட தேசியகீதம் ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தின் பானாஜி எனும் இடத்தில் எழுத்தாளர் சாலில் சத்துருவேதி முதுகு தண்டில் காயம் காரணமாக திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காதபோது கடுமையாகத்தாக்கப்பட்டார். இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது எனினும் உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தொடர்பான முக்கிய வழக்கில் முப்பது வருடங்களுக்கு முன் என்ன தீர்ப்பு தந்தது எனப் பார்ப்பது அவசியம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இரண்டாம் பசுமைப்புரட்சி துவங்குகிறது


siragu-green-revolution3

“பண்ணையெல்லாம் பொன் கொழிக்க செய்திடுவோம்
அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்,
கண்மணி போல் நெல்மணியை வளர்த்திடவே
நாளும் கருத்துரைக்கும் ஒலிபரப்பைக் கேட்டிடுவோம்,
பட்டி தொட்டி குப்பம் எங்கும் பாடுபட்டே
நம் பாரத சமுதாயத்தை உயர்த்திடுவோம்”

என்று இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பிய ஒரு விவசாய நிகழ்ச்சியின் பாடல், 1970 மற்றும் 1980-களில் பலரையும் கவர்ந்த பாடல். அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது குடியரசுத் தலைவர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்றவாரம் சண்டிகாரில் நடந்த வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கில் நிகழ்த்திய ஓர் உரையும் (12th edition of CII Agro Tech 2016 in Chandigarh on November 20, 2016), ஒரு அறிவியல் ஆய்வறிக்கையின் வெளியீடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Monday 5 December 2016

புதிய கல்விக்கொள்கை


siragu-new-education4

மத்திய பா.ஜ.க அரசு செயல்முறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் புதிய கல்விக்கொள்கை பற்றி நான் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்… இது முதலில் புதிய கல்விக்கொள்கையே அல்ல… பழைய குலக்கல்வித் திட்டத்தைத்தான் தூசு தட்டி புதியது என்ற பெயரில் நம்மீது திணிக்கப் பார்க்கிறது மத்திய அரசு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஆரம்பத்திலேயே எதிர்க்கவில்லை என்றால், நாம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடும் ஆபத்து இருக்கிறது… அப்படி என்ன அதில் இருக்கிறது என்று கேட்போருக்கு நம்முடைய தெளிவான விளக்கங்கள்.!
1. முதலில், இக்கல்வித்திட்டம் இந்தி, சமற்கிருதத்தை முன்னிறுத்தும் நோக்கில் வரையப்பட்டுள்ளது… இதன் வரைவுக் கொள்கை முகவுரையில், வேதக்கல்வி அடிப்படையில் அமைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் குரு – மாணவன் உன்னத உறவை வலியுறுத்துகிறது.

வேத காலத்தில் சூத்திரர்கள் கல்வி கற்கக்கூடாது.. மீறிக் கற்றால் நாக்கை அறுக்க வேண்டும். வேதத்தைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை அமல் செய்யப் போகிறதா மத்திய அரசு..? அதுமட்டுமல்லாமல் சமற்கிருத மொழியில் என்ன அறிவியல் செய்திகள், கண்டுபிடிப்புகள் இருக்கின்றனவா… அத்தனையும் மதம்சார்ந்த, வர்ணாசிரமம் சார்ந்த விடயங்கள் தானே சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த அறிவியல் யுகத்தில் இவைகள் எந்த வகையில் பயன்படப் போகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.