Monday 19 December 2016

கவிஞர் கண்ணதாசனும் அரசியல் கவிதைகளும்


siragu-kannadasan1

“மாற்றம் எனது மானிடத் தத்துவம்” என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் தன் அரசியல் வாழ்வில் பல்வேறு மாற்றங்களைக் கண்டார். அவற்றால் அவர் கொண்ட விருப்பு வெறுப்புகளும் ஏராளம். அவைகளை தன் சுயசரிதை நூல்களான மனவாசம் மற்றும் வனவாசத்தில் உரைநடையாக பதிவு செய்திருந்த போதிலும் தன் உணாச்சிகளை வீரியமிக்க கவிதைகளால் எழுதி எழுதித் தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டார்.
தன் முரண்பாட்டை வெளிப்படுத்திய தன்னுணர்ச்சிக் கவிஞர்:
“மானிடரைப் பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கையான பதிகம்
மலையளவு தூக்கி உடன்
வலிக்கும் வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்”

என்று தான் கொண்ட கருத்து முரண்பாடுகளின் உச்சநிலையை வெளிப்படுத்துகிறார். தனது தெய்வமிருகத் தன்மையைத் தன் வாழ்நாளில் போற்றியவர்களை உடன் தூற்றியும் தூற்றியவர்களை மறுநிகழ்வில் போற்றியும் வந்துள்ளதனை அவரே பதிவிடுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment