Wednesday 7 December 2016

இந்திய உச்ச நீதிமன்றமும் தேசிய கீதமும்


siragu-national-anthem4

அண்மையில் நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதாவ ராய் கொண்ட குழு தேசிய கீதம் திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடி இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது எனச் சொன்னால் மிகையன்று. பொழுதுபோக்கிற்காக படம் பார்க்க வரும் மக்களிடம் கண்டிப்பாக தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் எனக் கூறுவது அறிவானதா? அது பல பிரச்சனைகளையும், சண்டைகளையும் உருவாக்காதா? அதே போன்று தாய்நாட்டின் மீதான பற்று என்பது நிர்பந்திப்பதால் வந்து விடுமா?  என ஒரு புறம் கேள்விகள் கேட்கப்படுகின்றது.
siragu-national-anthem2


இது ஒரு புறம் இருக்க, 1962 ல் இந்திய – சீனா போரின் போது திரையரங்குகளில் படம் முடிந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தாத காரணத்தால் அந்தப்பழக்கம் நிறுத்தப்பட்டது. மீண்டும்  
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2003 இல் போடப்பட்ட உத்தரவின் படி திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் பல பிரச்சனைகளைக்கட்டாயமாக்கப்பட்ட தேசியகீதம் ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தின் பானாஜி எனும் இடத்தில் எழுத்தாளர் சாலில் சத்துருவேதி முதுகு தண்டில் காயம் காரணமாக திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காதபோது கடுமையாகத்தாக்கப்பட்டார். இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது எனினும் உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தொடர்பான முக்கிய வழக்கில் முப்பது வருடங்களுக்கு முன் என்ன தீர்ப்பு தந்தது எனப் பார்ப்பது அவசியம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment