Wednesday 14 December 2016

இலக்கியச் சுவையும் எழில்மிகு அணியும்


பன்மணிக் கோவை: நூல் மதிப்புரை
panmanik-kovai

தமிழிலக்கியம் காட்டும் புரட்சிப்பெண், அறவாழ்வு மேற்கொண்ட மணிமேகலையைப் போற்றும் விதத்தில் பெயர் சூட்டப்பட்டு,   அமெரிக்க வாழ் தமிழர்களால் மேகலா இராமமூர்த்தி என அறியப்படுபவர் “பன்மணிக் கோவை” நூலின் ஆசிரியரான மேகலா. முதுகலை தமிழிலக்கியமும், முதுகலை கணினிப் பயன்பாட்டியியலும் படித்து, தற்பொழுது ஃப்ளோரிடா பாலிடெக்னிக் (Florida Polytechnic University) பல்கலைக்கழகத்தில் கணினிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழார்வத்தால் “வல்லமை” இணைய இதழின் துணை ஆசிரியராகவும் தொண்டாற்றி வரும் மேகலா அவர்கள், மறைந்த தமிழறிஞர் இராம. இராமமூர்த்தி அவர்களின் அருமை மகளும் ஆவார். தந்தையின் வழியொட்டி தமிழிலக்கியச் சுவையைத் தானும் துய்த்து, மற்ற தமிழ் ஆர்வலர்களும் படித்து மகிழும் வகையில் வெளியிட்டுள்ள பன்மணிக் கோவை அவரது நோக்கத்தைச் சிறப்புடன் நிறைவு செய்துள்ளது.

சங்க இலக்கியச் சுவை, ஒப்பிலக்கிய ஆய்வு, வாழ்வியல் விளக்கம், அறநெறி வழிப்படுத்துதல், நன்னெறி அறிவுரைகள், மானுடவியல் கட்டுரைகள், உயிரியல் தகவல்கள் என எக்கோணத்தில் மணிமணியாகக் கட்டுரைகள் அமைந்தாலும், அக்கட்டுரைகள் அனைத்தையும் இணைத்து ஊடாடிச் செல்லும் பொன்னிழை தமிழிலக்கியப் பாடல்களில் இருந்து எடுத்தாண்ட மேற்கோள்களே. கூறப் போந்த எக்கருத்திற்கும் ஒரு இலக்கியப் பாடல் ஆசிரியரின் நினைவில் நிழலாடுவது ஒரு சிறப்பு என்றால் அதனைத் தக்கமுறையில் கட்டுரையில் அமைத்திருப்பதும் மற்றொரு சிறப்பு. மேகலாவின் இத்தகைய விவரிப்பினால் தமிழிலக்கியத்திற்கு புதியவர் ஒருவரும், கற்றுத் துறைபோகிய தமிழறிஞர் ஒருவரும் இந்நூலை ஒருசேரப் படித்து மகிழலாம் என்பது திண்ணம். பள்ளிப்படிப்புடன் தமிழிலக்கியம் படிக்க வாய்ப்பின்றி மேற்படிப்பிற்குப் பிற துறைகளைத் தேர்வு செய்து தடம் விலகிச் சென்றவர்களுக்கு இந்த நூல் தமிழிலக்கியக் கருவூலத்தை அறிமுகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்பது மிகையன்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment