Thursday 29 December 2016

வாசிப்பு


siragu-ilakkiyam1

எழுத்தறிவை அடைவதன் அடிப்படைக் காரணம் வாசிப்பு. வாசிப்பிலிருந்தே அறிதலென்னும் விருட்சத்தின் பெரும்பாலான கிளைகள் கிளைக்கின்றன. அறிதல் வாழ்வை செறிவுள்ளதாக்குகிறது. அறிதல்கள் தடைசெய்யப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை உண்மையில் மனிதன் வாழும் எல்லையைச் சுருக்குகிறது, அனுபவங்களை அடைவதிலிருந்து விலக்குகிறது. அனுபவங்களின் விரிவே வாழ்க்கையின் விரிவு.


வாசிப்பிற்குத் தேவையான முக்கியத்துவத்தை சமூகம் அளிக்கிறதா? முறைப்பட்ட கல்வியைக் கடந்த வாசிப்பை சமூகம் ஊக்குவிக்கிறதா? இல்லை என்றே தோன்றுகிறது – முறைப்பட்டக் கல்வியில் அளிக்கப்படும் வாசிப்பு நுண்தகவல்களை மிக அபூர்வமாகவே அளிக்கிறது. வாசிப்பை ஊக்குவிக்கும் எந்தக் காரணிகளும், இந்தியாவில் பெரும்பாலான கல்வித்துறைகளில் இல்லை. எனவே வாசிப்பை இயல்பாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே உள்ளது. இதையும் கடந்து, சுய விருப்பங்களின் மூலம் வாசிப்பவர்களும் பெரும்பாலும் பொழுதுபோக்கு வாசிப்புகளையை நாடுகிறார்கள், அல்லது வெற்று உணர்ச்சிகளைத் தூண்டும் வாசிப்புகள். காட்சி ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், பொழுது போக்குகளுக்குக் குறைவில்லை. காட்சி ஊடகங்களின் பரவலாக்கத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பொழுதுபோக்குக்காக வாசிப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் பொழுதுபோக்குகளுக்கு குறைவில்லாத இந்தக் காலத்திலும் வெறும் பொழுதுபோக்கு வாசிப்பு பரவலாக இருப்பது ஒரு முரணாகவே தெரிகிறது. ஆனாலும் வாசிப்பு நிகழ்கிறது என்பது ஊக்கமளிக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment