Monday 12 June 2017

சுற்றுப்புறச்சூழல் காப்போம்


Siragu environment2

உலக சுற்றுப்புறச்சூழல் தினமாக ஜூன் 5 – ந்தேதி உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டது. அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் சேர்ப்பதில் சமூக ஆர்வலர்கள் இவ்வாண்டு அதிக அக்கறை எடுத்துக்கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக மரம் வளர்ப்பது என்பது சில ஆண்டுகளாக நம்மிடம் குறைந்திருந்தது. அதிலும் நம் மண்சார்ந்த மரங்கள் நடுவது என்பது எல்லோருக்கும் ஒரு விருப்பமில்லா செய்கை என்ற மாயை உருவாகி இருந்தது என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால், நம் மரங்கள் வளர்வதற்கு தாமதமாகும், வளர்ந்து பயன் தர பலஆண்டுகள் ஆகிறது என்ற ஒரு மனநிலைதான் காரணம். வெளிநாட்டு மரங்கள் வெகு விரைவில் வளர்ந்து, பெரிய மரமாகி நிழல் தருகின்றன. அதனால் தான் நம் மக்களும் சரி, அரசாங்கமும் சரி, சாலை இரு மருங்கிலும் இந்த மண்சாரா மரங்களை வளர்த்து வைத்திருக்கின்றனர். சென்ற 2016 -ஆம் ஆண்டு சென்னையில் வந்த ‘வர்தா புயல்’ காரணமாக பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment