Tuesday 13 June 2017

கணையாழிகளும் அமெரிக்கத் திருமணங்களும்


Siraguu kanayaali1

திருமணச் சடங்கில் இந்திய மணமக்கள் பெரும்பாலும் மாலை மாற்றிக் கொள்வார்கள். பிறகு இந்திய வட்டாரங்களில் வாழும் பல்வேறு சமயங்களின், இனங்களின், குலங்களின் வழக்கப்படி தாலி கட்டுவது, மோதிரம் அணிவிப்பது, பதிவுத் திருமணங்களில் திருமணப் பதிவேட்டில் கையெழுத்திடுவது எனப் பற்பலவகைச் சடங்குகள் வழியாக மணமக்களின் திருமணம் சட்டப்படி அங்கீகாரம் செய்யப்படுகிறது.



மோதிரம் அல்லது கணையாழி அணிவிப்பது மாலை மாற்றுவதற்கு இணையான பண்டைய வழக்கங்களில் ஒன்று. பாரத நாட்டுக்கு அப்பெயர் வழங்கக் காரணம் எனக் கூறப்படும் கதைகளில் ஒன்று பரதன் என்னும் மன்னவன் பெயரால் பாரதம் அல்லது பரதவர்ஷம் எனப் பெயர் ஏற்பட்டது என்பது. இந்தப் பரதனின் தாய் தந்தையர் ஹஸ்தினாபுரத்தின் மன்னன் துஷ்யந்தனும், தாய் சகுந்தலையும் என்பது ஒரு தொன்மக் கதை (மற்றொன்று, சமண சமய ரிஷபதேவரின் மகனான பேரரசன் பரதன் என்பவனால் பாரதம் எனப் பெயர் பெற்றது என்ற கதை). அந்த துஷ்யந்தன்-சகுந்தலையின் கதையில் அவர்களது காந்தர்வ திருமணத்திற்கு அடையாளமாக மோதிரம் காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment