Tuesday 27 June 2017

தமிழ்த் தாத்தா பெற்ற பதவிகளும் பட்டங்களும் பாராட்டுகளும்


Siragu U._V._Swaminatha_Iyer 3

‘தமிழ்த் தாத்தா’ என்ற பட்டம் ‘உத்தமதானபுரம் வே. சாமிநாத ஐயர்’ (1855-1942) அவர்களுக்கு கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி கொடுத்த பட்டம். இவர் பெற்ற அனைத்துப் பட்டங்களுடன் இவரது முழுப்பெயரும் “பிரம்மஸ்ரீ மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி திராவிட வித்யாபூஷணம் மகாவித்வான் டாக்டர் உத்தமதானபுரம் வே. சாமிநாதையரவர்கள்” என்று குறிப்பிடப்படுவதையும் நூல்களில் காணலாம்.


அறுபதாண்டுக் காலத்துக்கும் மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றிய தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் (1855-1942) தமிழுக்காகவே வாழ்ந்தவர். உ.வே.சா. என்ற பெயர் தமிழ் பதிப்புலக வரலாற்றில் சிறப்பிடம் பிடித்த பெயர். பழந்தமிழ் நூல் பதிப்பித்தலில் இவர் காட்டிய சிறப்பு அக்கறையாலேதான் சங்கத்தமிழ் நூல்கள் பலரையும் சென்றடைந்தன. இந்த நூல்களின் வாயில்களாகவே இன்று நாம் பழங்காலத்தில் தமிழரின் வாழ்வையும் வளங்களையும் அறிந்து கொள்கிறோம். சங்கத் தமிழர்களை தற்காலத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் உ.வே.சா. எனலாம். சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பலவகைப்பட்ட 90 க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை அச்சுப்பதிப்பில் தமிழர் கையில் தவழ விட்டவர் என்றால் அது மிகையன்று. இவர் தமிழ் இலக்கியப் பதிப்புத்துறையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழின் செம்மொழித் தரத்திற்கு உ.வே.சா.பதிப்பித்த சங்கத்தமிழ் நூல்களே தக்க சான்றுகள் வழங்கின.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment