Friday 28 September 2018

அம்ருதா!! (கவிதை)


siragu amrutha2

வயிற்றில் உந்தன் இதயத் துடிப்பின்
வளரும் ஒலி கேட்க நேரமில்லையோ?
வாழ்க்கை முடித்தே வைத்தர் சாதியின்
வல்லூறுகள்; வாட்டும் உன் நினைவுகளை
வஞ்சனை கொண்டோர் எந்தன் உளத்திலிருந்து
வாரிச் சுருட்டி எறிந்திடவும் முடியுமோ?

வெட்டிய அரிவாளில் தொய்ந்த குருதியும்
வீழ்ந்த நொடியும் நெஞ்சத்தில் எரியூட்ட
வளரும் உன் கருவிற்காய் உயிர் சுமந்து

வலிவுடன் போராட உறுதி பூண்டுள்ளேன்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Thursday 27 September 2018

செவ்வியல் இலக்கியங்களில் எதிர்காலவியல்


Siragu tamil4
உலகை எதிர்காலவியல் எனும் சொல்லுக்குள் அடக்கியவை தமிழ்மொழியாகும். தமிழ்மொழியின் உச்சமாகக் கருதப்படுகிற செவ்வியல் இலக்கியங்கள் இப்பொருண்மையை உணர்த்திநிற்கிறது. கணினிவழி கண்டுபிடிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளெல்லாம் தன் கணிப்பில் கண்டுபிடித்தவர்கள் தொன்மைத்தமிழர்கள் ஆவார்கள். கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையமொழி என தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தும் அளவிற்கு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அச்சான்றுகளுள் ஆலைகள், வீட்டுக்கழிவுகள் எல்லாம் கடத்தி வெளியேற்றிய பாங்கு தமிழர்களுடைய எதிர்காலச் சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு உணர்த்திச் சென்றிருக்கின்றன. இவற்றோடு படைக்கப்பட்ட படைப்புக்கள் எல்லாம் இதை உள்வாங்கி சரியாகவே செய்திருக்கிறது.

தொல்காப்பியம்


தமிழில் தோன்றிய தொன்மையான இலக்கணநூல் எத்தனை இருந்தாலும் சான்றாகக் கிடைக்கப் பெற்றவை தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தில் மொழியின் இலக்கணத்தை மட்டும் கூறாமல் எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படைச் சிந்தனையினையும் படைத்திருக்கிறார். பூகோளத்தில் உள்ள உயிர்களின் நிலை, மானுடத்தத்துவம் ஆகியவற்றினையும் கூறியுள்ளார். இதனை,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 26 September 2018

கலிபோர்னியாவில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா


Siragu-Periyar-140th-bday-2018.png
சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள பல்வேறு முற்போக்கு அமைப்புக்கள் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களின் 140-வது பிறந்த நாள் விழாவை கடந்த சனி செப்.22, 2018 அன்று பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் கலிஃபோர்னியாவின் கூப்பேர்டினோ நகரில் கொண்டாடினர். இந்தியாவின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தக்காரர்களில் ஒருவரான தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, சாதி அழிப்பு போன்ற உயரிய கொள்கைகளின் அடிப்படையில் பல்வேறு கருத்தரங்குகள், கேள்வி-பதில் அமர்வுகள் நடைப்பெற்றது.

சிறப்பு பேச்சாளர்களில் ஒருவரான எழுத்தாளர் டாக்டர்.வா.கீதா இந்தியாவில் இருந்து வீடியோ பல்வழி அழைப்பின் வழியே “பெரியார் – பொது வாழ்க்கையின் ஒரு முன்மாதிரி” என்ற தலைப்பில் உரையாற்றினார். முதலில் பெரியாரின் அறம் சார்ந்த பகுத்தறிவும் பொது புத்தியும் எப்படி சாதிய-மத வாதிகளின் அறிவிலிருந்து மேம்பட்டது என்பதையும், பெரியார் எப்படி எப்போதும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் தன் இரு கண்களாகக் கொண்டு சமூக பணியாற்றினார் என்பதையும் விளக்கினார். பெரியார் தனது கொள்கை உறுதிக்கு நேர்-எதிராக இருப்பவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து, அவர்களுக்கு சவால்கள் விட்டு, அவர்களின் சவால்களுக்கும் அறிவார்ந்த பதில் அளித்தார். இந்து மத மடாதிபதி சங்கராச்சாரியர் அவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து பேசத் தயார் என்று தன் அறம் சார்ந்த கொள்கைப் பிடிப்பை வெளிப்படுத்திய உறுதியாளர். அவரது எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தாண்டி தற்போது மற்ற இந்திய மொழிகளிலும், குறிப்பாக இந்தி மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டு கொண்டிருப்பது ஒரு வரவேற்கத்தக்க நல்ல வளர்ச்சி என்றும் டாக்டர்.வா.கீதா குறிப்பிட்டார். இந்த மொழிப் பெயர்ப்பு முயற்சி, இந்தியாவில் சமீப காலங்களில் கட்டமைக்கப்படும் ஒற்றை கலாச்சார இந்துத்துவ சிந்தனையை சவால் செய்யக் கூடிய கருவியாக இருக்கும் என்றார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழகத்தின் அவலநிலையும், ஆட்சியாளர்களின் அலட்சியமும்!


Siragu avasara kaala2
கடந்த சில ஆண்டுகளாகவே நாம் கவனித்து வருகிறோம். நம் மாநில அரசு, மக்களுக்காக ஆட்சி செய்யும் அரசாக சிறிது கூட இயங்கவில்லை என்பது தெளிவான ஒன்று. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மயம். அதோடு மட்டுமல்லாமல், முழு அதிகாரத்தையும் மத்திய மோடி அரசிடம் இழந்து நிற்கிறது. மத்திய அரசு செய்யும் அனைத்து காரியத்திற்கும் தலையாட்டிக்கொண்டு, கைகட்டி சேவகம் புரிந்துகொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்திற்கு எவ்வித நன்மையும் நடக்கவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மேலும் தமிழ்நாட்டை விரோத மனப்பான்மையுடன் தான் பார்க்கிறது மத்திய பா.ச.க அரசு.
சாமானிய மக்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் சிறிதும் தென்படவே இல்லை. அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றன. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு, குறு வணிகர்கள், என அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, துன்பப்படுத்தப்படுகிறார்கள். இயற்கை வளங்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. மீத்தேன், கெயில், நியூட்ரினோ, கூடங்குளம் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கனிம வளங்களை அழிப்பதில் குறியாய் இருக்கும் மத்திய அரசிற்கு சிரம் தாழ்த்தி வணங்கி, சொந்த மாநில மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது ஆளும் அதிமுக அரசு. மேலும் ஆற்றுமணல் முழுதும் சுரண்டி எடுக்கப்பட்டு, நீராதாரத்தையும் கெடுத்துள்ளனர்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 21 September 2018

கவிக்குயில் (சிறுகதை)


siragu kuyil1
ஒரு ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினார்கள். அப்போது தற்செயலாய் அவர்கள் மரத்தில் இருந்த குயிலைப் பார்த்தார்கள். அவர்கள் இருவரின் பேச்சும் குயிலைப் பற்றித் திரும்பியது.
“தன்னோட முட்டையக் கூடக் குயில் தானே அடைகாத்துக் குஞ்சு பொறிக்குறதுல்லை! திருட்டுத்தனமாகாகத்தோட கூட்டுல முட்டைய இட்டுட்டு வந்துரும்! காகம்தான் குயிலோட முட்டையையும் சேர்த்து அடை காக்குது! குயில் சரியான சோம்பேறிப் பறவை!”–என்றார்கள் அந்த வழிப்போக்கர்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த குயிலின் முகம் வாடிவிட்டது. “என்னோட முட்டையை நான் அடை காக்குறதில்லைங்குறது உண்மைதான்! ஆனா இத எப்படி மாத்துறது? இந்த வழிப்போக்கர்கள் சொல்றமாதிரி நான் சோம்பேறிப் பறவை தானா?”–என்று குயில் வருத்தப்பட்டது. மற்ற பறவைகளைப் பற்றி மனிதர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பியது அந்த அப்பாவிக்குயில்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 20 September 2018

அமெரிக்காவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட வ.உ.சிதம்பரனார் 146 ஆவது பிறந்த நாள் விழா


Siragu va.vu.si2
கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் திரு. வ. உ. சிதம்பரனார் அவர்களின் 146வது பிறந்த நாள் விழா செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் முதன்முறையாக இனிதே கொண்டாடப்பட்டது. இது போன்ற விழாக்கள் தமிழ்ப் பெருந்தகைகளைப் பற்றிய செய்திகளை இளம் தலைமுறையினருக்கு கடத்துவதற்கான நோக்கத்தில் நடத்தப்படுவனவாகும். இந்த நோக்கத்தில் முதன் முதலாக கடந்த ஏப்ரல் மாதம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தற்போது வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

வ. உ.சி அவர்களின் பிறந்த நாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. பிறகு குழந்தைகளுக்கான வ. உ.சி அவர்களின் வரலாறு குறித்த வினாடி வினா போட்டி, வ.உ.சி அவர்களின் மார்பளவு உருவப்படத்தை வரையும் போட்டி மற்றும் பெரியவர்களுக்கான பேச்சுப் போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. ந.க.இராஜ்குமார் வினாடிவினாப் போட்டியை சிறப்பாக வடிவமைத்து திறமையாக நடத்தினார். இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 19 September 2018

“நான் யார்?” — பெரியார் தன்னைப்பற்றி கொடுத்த விளக்கம்


periyar
பெரியார் யார்? அவர் தமது வாழ்க்கையின் குறிக்கோளாக எவற்றைக் கருதினார்? அவரது கொள்கைகள் யாவை? இது போன்ற கேள்விகள் பெரியார் வழி நடக்க விரும்புவோருக்குத் தெளிவாக அவரது எழுத்தின் மூலம் புரிந்தாலும், அவரைக் குறித்து அவரே என்ன சொல்கிறார் என்பதை அறியாமல், அவற்றை அறிவதிலும் அக்கறை கொள்ளாமல், பலர் பலவிதமாகப் பேசுவதைக் கேட்டு தங்கள் கருத்தை வளர்த்துக் கொள்வோரே இந்நாளில் பலர்.

அவர் பிறந்து 139 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பெரியாரின் 140 ஆவது பிறந்த தினம் துவங்கிய இந்த ஆண்டில் அவரது வாழ்வையும், அவரது நோக்கத்தையும், அவரது கொள்கைகளையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்காகக் கொச்சைப்படுத்திப் பேசும் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகரிக்கின்றனர். ஒருவர் இன்று மறைந்தால் அடுத்த மாதம் அவரை யாரும் நினைத்திருக்கும் நிலை கிடையாது என்பதே இன்றைய உலக வழக்கு. இருப்பினும், பெரியாரின் பெயரைக் கேட்டாலே இன்றும் கதிகலங்கும் கூட்டத்தைப் பார்க்கும்பொழுது, சிலிர்த்துக்கொண்டு எதிர் விவாதத்திற்குக் கிளம்புவோரைக் காணும் பொழுது அவரது ஆதரவாளர்களுக்கு ஒருவகையில் உள்ளூர மகிழ்ச்சியே ஏற்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 18 September 2018

தொகுப்பு கவிதை (காவிரிக்கு வாழ்த்து!, ‘மியாவ்’ வேட்டை, என் தோட்டத்துப் பூக்கள்)

காவிரிக்கு வாழ்த்து!

            -இல.பிரகாசம்
siragu kaaviri1

பொய்யா வானம் பொழிய வந்தாய்
கொழிக்கும் வளந்தனை அளிக்க வேநீ
குடகு மலைதனைத் தாண்டித் தவழ்ந்து
நடந்து வந்தாய் காவேரி! அணங்கே!
நாளும் நின்பதம் நிலமிசைத்
தவழ குலம்விளங்கும்! வாழிநீ!வா ழியவே!

(03.08.18-திருச்சியில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு நாளில்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/

தனிமனித உளவியல்


Siragu sanga ilakkiya thirumanam3

இலக்கியங்கள் அறத்தையும் பொருளையும் ஒருங்கே வலியுறுத்துவன. வாழ்வில் வளம்பெற வேண்டுமெனில் அஃது பொருளால் மட்டும் நிறைவு பெறாது. அப்பொருளுடன் அறமும் இணைந்த பின்பே நிறைவுபெற்று நிலைநிற்பதென அறிவுறுத்துவன. சான்றோர்கள் கூறிய அறநெறி வாழ்வை மேற்கொள்ளத் தலைவன் தலைவியை விடுத்து வினைவயிற் போன்ற பிரிவு நிகழ்த்தினும் தலைவிக்கு ஆதார ஊற்றாகவும், வாழ்வின் பிடிப்பாகவும், பல்லோர் அவளைப் போற்றும் தன்மையுடையவளாகவும் விளங்கச் செய்பவன் தலைவனே ஆவான். சங்கப் பாடல்களில் தலைவன் கூற்றுக்களை விட, தலைவி உள்ளிட்ட பெண்களின் கூற்றுக்களே மிகுதியாக இருப்பினும் அவர்களை இயங்கச் செய்யும் இயங்கு சக்தியாக இருப்பவன் தலைவனே. இதனால்தான் அப்பெண் மாந்தர்களின் கூற்றுக்கள் அனைத்தும் தலைவனை மையமிட்டதாகவே அமைந்திருக்கின்றன. எனவே, சங்க மாந்தர்களை நகர்த்திச்செல்லும் மையப்புள்ளியாகத் தலைவன் திகழ்கின்றான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களவு, கற்பு வாழ்க்கையில் தலைவியை விடுத்துத் தலைவன் பிரிந்துறையும் போது பிறமாந்தர்களின் கூற்றுக்களில் அவன் அன்பின்மையைப் பற்றியும், குணநலன்களைக் குறித்தும் இடம்பெற்றிருப்பதை உணரமுடியும். அப்படிப்பட்ட ஆளுமைத் தன்மை உடைய தலைவன் புணர்ந்து பிரிந்த காலத்திலும், கற்புக்காலத்தில் பிரிந்த போதிலும், மீண்டு வந்து தலைவியோடு இணைந்த காலத்திலும் தலைவனுக்கு ஏற்பட்ட உள்ள மாறுதல்களை உளவியல் கூறுகள் வழி இக்கட்டுரை ஆராய்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 10 September 2018

377 பற்றி ஒரு பார்வை !!


siragu 377 oru paarvai3
இந்திய உச்சநீதி மன்றத்தின் ஒரு முக்கியத் தீர்ப்பு செப்டம்பர் 6, 2018 வெளியானது. 158 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்தச் சட்டம் பிரிட்டிஷ் கால ஆட்சியின் மூலம் கொண்டு வரப்பட்டச் சட்டம். ஓரினச் சேர்க்கைக்கு இந்தியாவில் இனி சட்டப் பூர்வமான அங்கீகாரம் உண்டு என்ற இந்த தீர்ப்பு, இந்தியா போன்ற மிக பிற்போக்குச் சிந்தனை கொண்ட நாட்டில் வரலாற்றுத் தீர்ப்பாகும். இயற்கைக்கு மாறாக உறவு எனும் விதியின் கீழ் ஓரினச் சேர்க்கை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இன்று இந்த தீர்ப்பின் மூலம் இனி ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் இணைந்து வாழலாம் .
“consensual sex between adults in a private space, which is not harmful to women or children, cannot be denied as it is a matter of individual choice. section 377 results in discrimination and is violative of constitutional principles,”said the SC.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சரத் 377 ஓரினச் சேர்க்கையை தடை செய்வதாக உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதியரசர் R .F நரிமன், A M கான்வில்கர், D Yசந்திராசுட், இந்து மல்ஹோத்ரா என்ற ஐந்து நீதியரசர்கள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஒரு மனதாக இந்தத் தீர்ப்பை தந்துள்ளது பாராட்டத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 6 September 2018

மரக் கறியும் மாமிசமும்


siragu marakkariyum maamisamum1
மனிதனின் உணவுப் பழக்கம் அவன் வாழும் இடத்தின் தட்ப வெப்ப நிலை, அப்பகுதியில் விளையும் தானியங்கள், காய்கறிகள், வளரும் உயிரினங்கள் மற்றும் பல காரணிகளைக் கொண்டு அமைகிறது. மனிதனின் முதல் தொழிலே வேட்டையாடுதலும் மீன் பிடித்தலும் தான். ஆகவே அவன் இயற்கையில் புலால் உணவு உண்பவனே.
ஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களால் மூளை வெளுப்பு செய்யப்பட்டவர்களும் மரக்கறி உணவே மனிதனின் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்று பரப்புரை செய்து கொண்டு இருக்கிறார்கள். காவிகள் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் இப்பரப்புரைகள் அர்த்தமே இல்லாத வகையில் சுழன்று சுழன்று வருகின்றன. எந்த ஒரு தர்க்க வழியிலும் இல்லாமல். கீறல் விழுந்த இசைத் தட்டு போலத் திரும்பத் திரும்பப் பரப்புரை செய்யும் பார்ப்பனர்கள் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரை புலால் உணவை – அதுவும் மாட்டுக் கறியை – மிகவும் விருப்பமாக உண்டவர்கள் தான்.

பார்ப்பனர்கள் புலால் உணவு உண்டு கொண்டு இருந்ததற்கான சான்றுகள் மனு ஸ்மிருதியிலும், புராண இதிகாசங்களிலும் நிறைவே உண்டு. அதிலும் மாட்டுக் கறி என்றால் அவாளுக்கு மிகவும் பிடிக்கும். வேள்வியின் போது கிடைக்கும் மாட்டுக் கறியைச் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பார்ப்பனர்கள் மன்னர்களையும், செல்வந்தர்களையும் வேள்வி செய்யு வேண்டும் என்று அறிவுரை சொல்வர்கள். ஆசை காட்டுவார்கள், வற்புறுத்தவும் செய்வார்கள். இதனால் வேள்விகள் பெருகிய நிலையில் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து, வேளாண்மைக்குப் போதுமான மாடுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 5 September 2018

அவசரகால நெருக்கடியை கொண்டுவர முயல்கிறதா, மத்திய மோடி அரசு.!


Siragu avasara kaala2
பா.ச.க ஆட்சியமைத்திருக்கும், இந்த கடந்த நான்கு ஆண்டுகளாகவே நாம் அனைவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அனைத்து துறைகளிலும், தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. மக்கள்நல வளர்ச்சித் திட்டங்களுக்கு பதில், மக்களை பல வழிகளில் மிகவும் வாட்டிவதைத்துக் கொண்டுதானிருக்கிறது. பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்புகளிலும், பெண்கள் பாதுகாப்பிலும், சிறுபான்மையினரின் நலத்திலும், நாட்டின் வளர்ச்சி விகிதத்திலும், மதச்சார்பின்மை விசயத்திலும் மிகவும் பின்தங்கிய நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்நிலையில், அரசை எதிர்த்துப் போராடுபவர்களை, குரல் கொடுப்பவர்களை ஒடுக்கப்பார்க்கிறது. உயிருக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கைது செய்கிறது. வீட்டுக் காவலில் வைக்கிறது. ஊடகங்களை மிரட்டிப் பணிய வைக்கிறது. ஒரு சனநாயக நாட்டில் வாழும் மக்களுக்கு பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை இல்லையென்றால், அது சனநாயகத்திற்கு ஏற்படும் பெரும் ஆபத்து இல்லையா.! சில மாதங்களுக்கு முன், இதனை, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, நேரடியாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்களே. இந்த சர்வாதிகாரப்போக்கின் உச்சக்கட்டமாக அவசரநிலை பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களின் மத்தியில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 4 September 2018

தமிழகத்துச் சாதி சமத்துவப் போராட்டங்கள்


siragu tamilagaththu1
நூலும் நூலாசிரியரும்:
வலங்கை இடங்கை சாதிகளுக்கு இடையே நிகழ்ந்த கலவரங்கள் வெறும் சாதி மோதல்கள் அல்ல, அவை வர்க்கப் போராட்டங்கள். உழைக்கும் இனத்தோர் தங்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழாதவாறு அரசர்களும், உயர் குலத்தவராகக் கருதப்பட்டோரும் உழைப்பை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தோரைப் பிரித்தாண்டு அவர்களுக்குள் மோதவிட்டு தங்கள் நிலையைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்த நடவடிக்கைகள் என்று தனது “தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்” என்ற நூலில் விளக்குகிறார் பேராசிரியர் நா. வானமாமலை. கலை, இலக்கியம், மதிப்பீடு, பண்பாடு, வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப் பண்பாட்டியல் எனப் பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வாளரும், தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான தமிழறிஞர் நா. வானமாமலை அவர்களின் இரு கட்டுரைகள் அடங்கிய மிகச் சிறு நூல் இது. நாட்டுடைமையாக்கப்பட்ட இவரது நூல்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வழியாக படிப்பதற்குக் கிடைக்கின்றன.

செல்வச் செழிப்புள்ள நிலவுடைமை வேளாளர் வர்க்கமும், வணிகர் வர்க்கமும் முறையே வலம் இடம் எனப் பிரிந்து கொண்டு, அவரவர் தொழில் சார்ந்த உழைக்கும் மக்கள் வர்க்கத்தினரைத் தத்தம் பிரிவில் இணைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் எதிர்த்து வந்தனர் என்கிறார் நூலாசிரியர். மேலோட்டமாக நாம் அறிந்திருக்கும் வலங்கை இடங்கை சாதிப் பிரிவினை என்ற வேறுபாட்டை ஊடுருவி ஆய்வு செய்துள்ளார். பொருள்முதல்வாத அடிப்படையில், உற்பத்தி உறவுகளின் அடிப்படையில், ‘தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்ட கருத்துகள்’ மற்றும் ‘தமிழ்மன்னரும் சாதிப்பிரிவினைகளும்’ எனும் இரு கட்டுரைகளின் மூலம் இந்நூலில் விளக்குகிறார் நா. வானமாமலை. தமிழ்நாட்டில் சாதி சமத்துவ ஆய்வில், குறிப்பாக வலங்கை இடங்கை சாதிப் போராட்டங்களின் ஆணிவேர் குறித்து ஆய்வு செய்ய விரும்பும் எவரொருவருக்கும் நா. வானமாமலை குறிப்பிடும் தகவல்கள் விரிந்த ஒரு பார்வையை வழங்கும் என்பது திண்ணம். தி. நா. சுப்பிரமணியன் தொகுத்த தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் மூன்றாவது தொகுப்பு, பேராசிரியர் கே. கே. பிள்ளையின் தென்னிந்திய வரலாறு போன்ற நூல்களில் இருந்து வரலாறு தொல்லியல் சான்றுகளையும் தருகிறார் நூலாசிரியர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தாயன்பு (சிறுகதை)


siragu thaayanbu1

“அம்மா என்னைப் பள்ளிக்கூடத்திலே கொண்டு விடுமா” சிணுங்கிய மோகனை, ”வாடா போகலாம்” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் பவித்ரா. அவன் ஒரு பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறான். அவன் அம்மாவின் கையை கெட்டியாய் பிடித்துக்கொண்டு தான் வைத்திருக்கும் புத்தகப் பையுடன் நடந்து சென்றான்.
அவள் அம்மா விமலா சென்னையில் இருந்தவரை பவித்ராவுக்கு மிகவும் செளகரியமாய் இருந்தது. அவள் அண்ணன் ராம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹீஸ்டன் நகரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பத்து வருடமாய் வேலை செய்கிறான். அமெரிக்க நாட்டு குடிமகன் ஆகி கீரின் கார்ட் வைத்திருக்கிறான். அம்மா போன வருடம் அமெரிக்கா போனபோது அம்மாவுக்கும் கிரின் கார்ட் கிடைத்துவிட்டது.. அம்மாவுக்கு கிரீன் கார்ட் வாங்குவதில் விருப்பம் இல்லை. அமெரிக்காவிலேயே அதிக நாட்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிவிடும் என்பதால் தயங்கினாள். ஆனால் ராம் பிடிவாதமாய், ”அம்மா, எனக்குச் சொந்த வீடு இங்கு இருக்கிறது. நீயும் எங்கூடத்தான் இருக்கவேண்டும்” என்று ஆசைப்பட்டதால் அம்மாவால் மறுக்க முடியவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.