Friday 21 September 2018

கவிக்குயில் (சிறுகதை)


siragu kuyil1
ஒரு ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினார்கள். அப்போது தற்செயலாய் அவர்கள் மரத்தில் இருந்த குயிலைப் பார்த்தார்கள். அவர்கள் இருவரின் பேச்சும் குயிலைப் பற்றித் திரும்பியது.
“தன்னோட முட்டையக் கூடக் குயில் தானே அடைகாத்துக் குஞ்சு பொறிக்குறதுல்லை! திருட்டுத்தனமாகாகத்தோட கூட்டுல முட்டைய இட்டுட்டு வந்துரும்! காகம்தான் குயிலோட முட்டையையும் சேர்த்து அடை காக்குது! குயில் சரியான சோம்பேறிப் பறவை!”–என்றார்கள் அந்த வழிப்போக்கர்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த குயிலின் முகம் வாடிவிட்டது. “என்னோட முட்டையை நான் அடை காக்குறதில்லைங்குறது உண்மைதான்! ஆனா இத எப்படி மாத்துறது? இந்த வழிப்போக்கர்கள் சொல்றமாதிரி நான் சோம்பேறிப் பறவை தானா?”–என்று குயில் வருத்தப்பட்டது. மற்ற பறவைகளைப் பற்றி மனிதர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பியது அந்த அப்பாவிக்குயில்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment