Wednesday 19 September 2018

“நான் யார்?” — பெரியார் தன்னைப்பற்றி கொடுத்த விளக்கம்


periyar
பெரியார் யார்? அவர் தமது வாழ்க்கையின் குறிக்கோளாக எவற்றைக் கருதினார்? அவரது கொள்கைகள் யாவை? இது போன்ற கேள்விகள் பெரியார் வழி நடக்க விரும்புவோருக்குத் தெளிவாக அவரது எழுத்தின் மூலம் புரிந்தாலும், அவரைக் குறித்து அவரே என்ன சொல்கிறார் என்பதை அறியாமல், அவற்றை அறிவதிலும் அக்கறை கொள்ளாமல், பலர் பலவிதமாகப் பேசுவதைக் கேட்டு தங்கள் கருத்தை வளர்த்துக் கொள்வோரே இந்நாளில் பலர்.

அவர் பிறந்து 139 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பெரியாரின் 140 ஆவது பிறந்த தினம் துவங்கிய இந்த ஆண்டில் அவரது வாழ்வையும், அவரது நோக்கத்தையும், அவரது கொள்கைகளையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்காகக் கொச்சைப்படுத்திப் பேசும் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகரிக்கின்றனர். ஒருவர் இன்று மறைந்தால் அடுத்த மாதம் அவரை யாரும் நினைத்திருக்கும் நிலை கிடையாது என்பதே இன்றைய உலக வழக்கு. இருப்பினும், பெரியாரின் பெயரைக் கேட்டாலே இன்றும் கதிகலங்கும் கூட்டத்தைப் பார்க்கும்பொழுது, சிலிர்த்துக்கொண்டு எதிர் விவாதத்திற்குக் கிளம்புவோரைக் காணும் பொழுது அவரது ஆதரவாளர்களுக்கு ஒருவகையில் உள்ளூர மகிழ்ச்சியே ஏற்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment