Tuesday 13 November 2018

ராஜலட்சுமி


siragu rajalakshmi1
ராஜலட்சுமி முதலும் அல்ல இறுதியும் அல்ல என்பதே இந்தச் சமூக அமைப்பின்  குற்றம். 12 வயது சிறுமியை கழுத்தறுத்து கொல்லத் துணியும் மனம், கவ்வியிருக்கும் சாதி இருளுக்கு சாட்சி; பெற்றத் தாய் முன் அவர் மகளை கழுத்தறுக்கும் இந்த சாதிய ஆணாதிக்க மரபில் என்ன நியாயத்தை இந்தச் சட்டமும் நீதியும் வழங்கிட முடியும்? சட்டங்கள் கடுமையானதாகவே உள்ளன. ஆனால் தண்டனை பல நேரங்களில் ஆதிக்க சாதியினருக்கு வலிக்காமல் இருக்கின்ற காரணத்தால் சட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே நியாயங்களை செப்புகின்றன. இந்த மண்ணில் தேடினாலும் சமூக நீதி கானல் நீர் என்பதை தொடர்ந்து கொண்டிருக்கும் இது போன்ற பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
சிறுமியிடம் பாலியல் வன்முறை, அதை வீட்டில் அந்தக் குழந்தை சொன்னக் காரணத்தால் கழுத்தறுத்து கொலை. வேடிக்கையான சமூக அமைப்பு அல்லவா? ராஜலட்சுமியின் தாய் தன் மகளின் முண்டம் தனியே துடிப்பதை கண்டு விம்மி விம்மி அழுவதைத் தவிர வேறு வழியில்லா நிலை, ஒடுக்கப்படும் மக்களின் நிலையே அது தானே? சாதியை தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு கண்டங்கள் தாண்டும் தண்டங்களுக்கு இவர்களின் பகட்டு சாதி கொலை செய்யத் தூண்டுகிறது என்ற உண்மை உரைக்கப்போவது இல்லை.  இதை சாதிக் கோணத்தில் பார்க்க முடியாது வெறும் சிறுமியை பாலியல் தொல்லை தந்ததாக மட்டுமே பார்க்க இயலும், என அரிதான முத்துகள் உதிர்க்கும் கனவான்கள், அந்த கொலைகாரன் பறத் தேவடியா என ராஜலட்சுமியின் தாயை தள்ளிவிட்டு, மகள் கழுத்தை அறுத்ததை வசதியாக மறந்துவிடுகின்றனர். 21 ஆம் நூற்றாண்டில் தான் தமிழ்நாடு இருக்கின்றதா? பழம் பெறுமை பேசுவது, அதில் சாதியை நிலை நிறுத்துவது, என சாதியம் மீண்டும் தலைதூக்குவது, நாம் 10 நூற்றாண்டுகள் பின்னோக்கி நகர்கிறோம் என்றே பறைசாற்றுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-2/

No comments:

Post a Comment