Tuesday 20 November 2018

தொடரும் பாலியல் வன்புணர்வு கொலைகளும், அரசின் அலட்சியமும்!


Siragu thodarum paaliyal vanpunarvu1
நம் மாநிலத்தில் தற்போது நடந்துவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன என்பது மிகவும் வருந்தத்தக்க, வேதனைப்படவேண்டிய, வெட்கப்படவேண்டிய ஒரு விசயமாக இருக்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு, பாலியல் வற்புறுத்தலுக்கு, கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றால், (எத்தனை சாதனைகளை நாம் சாதித்தாலும்) இந்த சமூகம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது நம் முன் வைக்கப்படும் மிகப் பெரிய கேள்விக்குறி. உலகளவில் இது, நம் ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமான மிகப்பெரிய இழிவாகப் பார்க்கப்படும். பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி வாழ்ந்தால் தான் அது ஒரு சுதந்திரமான வளர்ச்சியை நோக்கிய சமுதாயமாக இருக்க முடியும்.
பெண்களுக்கு இது மாதிரி கொடுமைகள் நடக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நம் பெண் குழந்தைகளுக்கு நடக்கிறதென்றால், இந்த அரசாங்கம் இதனை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்பது இன்றியமையாதது அல்லவா.!

ஆனால், தண்டிக்க வேண்டிய அரசாங்கமே, இம்மாதிரி கொலைகளை செய்யும் குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறது, காலம் தாழ்த்துகிறது என்றால், குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்துவிடும் என்ற அபாயம் அவர்களுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழத்தானே செய்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment