Thursday 31 January 2019

தொகுப்பு கவிதை (அன்பு.. மனிதம்.. சமத்துவம்.., இறந்துகொண்டிருக்கும் இயற்கை!!)


அன்பு.. மனிதம்.. சமத்துவம்..

- மகேந்திரன் பெரியசாமி
sirau maanudam1
உண்டு உறங்கிப் பரிசெனும் வாழ்வை
வீணாய்த் துறக்கும் வீரத் துரும்பே!
இயற்கை நடத்தும் இலவசப் பாடம்
தயக்கம் தவிர்த்துப் பயின்றிட வாராய்!
வானும் புவியும் வலம்வரும் கதிரும்
தண்மை பரப்பும் வெண்மை நிலவும்
விண்ணில் வரபிட்டு மோதி நாம் பார்த்ததுண்டா?
மண்ணில் மனதில் மட்டும் வரப்புகள் ஏனோ?

மேற்புவி மண்ணுக்காய் மாய்ந்திடும் மானிடர்
உட்புவியைப் பாதியாய் உடைத்திட முடியுமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 30 January 2019

கலப்புத் திருமணமும் பார்ப்பனர்களும்


iragu kalappu thirumanam2
பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் துடிப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருந்த காலங்களில் கலப்புத் திருமணம் என்ற பேச்சைக் கேட்டாலே உயர்சாதிக் கும்பலினருக்குச் சினம் பொங்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று கலப்புத் திருமணங்கள் அந்த அளவிற்கு எதிர்க்கப்படுவது இல்லை. உயர்சாதியினருக்கும் இடை நிலை சாதியினருக்கும் இடையே ஆங்காங்கே கலப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இது சாதிக் கருத்தியலுக்கு எதிரான பெரும் முன்னேற்றமாகச் சித்தரிக்கப்படுகிறது.
ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் மற்ற வகுப்பினருக்கும் கலப்பு ஏற்படும் போது, அதுவும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆணுக்கும் ஆதிக்க சாதிப் பெண்ணுக்கும் திருமணம் என்றால் அதற்குக் கடும் எதிர்ப்பு தோன்றுகிறது. அது மட்டும் அல்ல, சில / பல சமயங்களில் அது ஆணவக் கொலைகளிலும் முடிகிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்று நடக்கும் கலப்புத் திருமணங்கள் வளர்ச்சியா? வீக்கமா?. வளர்ச்சி என்றால் அதை மேற்கொண்டு தொடரவும், வீக்கம் என்றால் அதை வளர்ச்சியாக மாற்றவும் நாம் என்ன செய்ய வேண்டும்?

சாதி / வருணக் கலப்புத் திருமணங்கள் இன்று நேற்று இருந்து அல்ல, அது தோன்றிய காலம் தொட்டே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மனு அநீதி வெளிப்படையாக ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில், ஒரு பார்ப்பனன் நான்கு வருணத்தைச் சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்து கொள்வது ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையாகவே இருந்தது. அது போல் ஒரு சத்திரியன் பார்ப்பனர் அல்லாத மூன்று வருணப் பெண்களையும், ஒரு வைஷ்யன் பார்ப்பனர், சத்திரியர் தவிர்த்த இரண்டு வருணப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். சூத்திரனோ சூத்திரப் பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 28 January 2019

உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி!


Siragu ida odhukkeedu1
இடஒதுக்கீடு என்பது ஒரு சமூகநீதி, சமத்துவம் என்ற கருத்தியலை அடிப்டையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு ஏற்பாடு. காலங்காலமாக, சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு எதிலும் உரிமையில்லாத, கேட்டாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னேற்றி மேலே கொண்டுவந்து சமநிலையை எட்டுவதற்காக எழுதப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம். அதில் சமூகரீதியாக, கல்வி ரீதியாக என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. ஆனால், மத்தியில் ஆளும் பா.ச.க அரசு, திடுதிப்பென்று, இரண்டே நாட்களில், நாடாளுமன்ற இரு அவைகளிலும், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு’ என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதிலும் இந்த ஆண்டே அதாவது வரும் கல்வியாண்டு அமல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறது.

இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. 1928 – ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட வகுப்புவாரி உரிமை செல்லாது என்று உச்சநீதிமன்றம் 1950-ல் தீர்ப்பளித்தது. அப்போது இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட நிலையினை எதிர்த்து, தந்தை பெரியார் தலைமையில், மாபெரும் போராட்டங்கள், கிளர்ச்சிகள் எழுந்தன. அதன் காரணமாக, முதலாவது அரசியல் சட்டத்திருத்தம் 1951-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்த அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர். அம்பேத்கார் மற்றும் பல உறுப்பினர்களுடன் விவாதித்து, அதற்கு முன்னர், அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விரிவான 340 -ல் எந்தெந்த வரையறை சொற்கள் போடப்பட்டதோ, அதே சொற்களை “Socially and Educationally” “சமூக ரீதியாக, கல்விரீதியாக” என்பதை அப்படியே பயன்படுத்தி, 15(4) என்றே பிற்படுத்தப்பட்டவர்களுக்காக புதுப்பிரிவை, இடஒதுக்கீட்டிற்கான சட்டத் திருத்தத்திலும் இடம்பெற செய்தனர். அப்போதும் சிலர், Economically என்று பொருளாதார ரீதியாக சேர்க்க வலியுறுத்தினார். அப்போது, அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் மிகத் தெளிவாகக் கூறினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

பெண்ணிய பாதை


Siragu penniyam1
பெண்ணியம் என்ற சொல் 1960க்குப் பிறகே இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பெண்ணியம் பற்றி சிந்திப்பது பல தளங்களில் விரிவடைந்து வளர்ந்து வருகிறது. எனினும் பெண் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டாளா? என்பதை இக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது.
பெண்ணியம் பல லட்சக்கணக்கான சிந்தனைகளால் ஆன சமூக அமைப்பு. இது ஆணுக்கு எதிரானதல்ல. இல்லற வாழ்க்கைக்கு எதிரானதுமல்ல. நீயும் நானும் ஒன்றுபட்டுத் தோழமை உணர்வோடு வாழ்க்கை நடத்துவோம் என்ற எண்ணம் உடையது. புதுமைப்பெண் ஆணை தனது தோழனாகக் கருதுகிறாள்.
சங்ககாலத்தில் பெண்கள் மனைக்கு விளக்கமாக புலமைமிக்கவராக, வீர உணர்வுடையோராக, அரசியல் தூதுவராக விளங்கிய போதிலும்
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய.” (தொல்.களவு -15)
என்ற தொல்காப்பியரின் சிந்தனை மூலம் பழங்காலந்தொட்டே பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க பண்பாட்டு உருவாக்கத்தை இதன்முலம் உணர்ந்து கொள்ளலாம்.

“உண்டிசுருங்குதல் பெண்டிற்கு அழகு” என்று பெண்களின் உணவிலேயே சில வரையறைகள். “முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல” என்று போற்றும் நிலைகள். “மண்மகள் அறியா வண்ணசீறடிகள்” என்று வீட்டிலேயே அடைத்து வைக்கும் சிறைக்கைதிகள். இப்படியாக பெண்களின் உணர்வுகள் ஒவ்வொன்றும் மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெண் அஞ்சி வாழவேண்டியவள். அதிர்ந்து நடக்ககூடாது, ஊரத்தக் குரலில் பேசக் கூடாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 24 January 2019

நன்முறை


Religious Leader Mahatma Gandhi 1869 - 1948
வன்முறையற்ற வாழ்க்கை முறையே நன்முறையான வாழ்க்கைமுறை. காந்தியடிகள் ஒரு முறை கவிமுனிவர் இரவிந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்திற்குச் சென்றார். அங்கு மாணவர்களுடன், ஆசிரியர்களுடன் சில நாட்கள் தங்கிக் கலந்து பழக வேண்டிய வாய்ப்பு வந்தது. அப்போது அவர் மாணவர்களுக்கான உணவு மற்றவர்களால் சமைக்கப்பட்டு வருவதை அறிந்தார். நமக்கான நமது உணவை நாமே சமைத்து உண்டால் நலமாக இருக்குமே என்று அவர்களிடம் கூறினார் காந்தியடிகள். நமக்கான உணவை நாமே சமைத்து உண்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஒன்று நாமும் சமைக்கக் கற்றுக்கொள்கிறோம். நம் இயல்புக்குத் தேவையான, மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பற்ற வகையில் சமைத்துக்கொள்ள இயலும். இவை போன்ற பல நன்மைகள் நாமே சமைத்து உண்பதில் கிடைக்கின்றன.
இதனை மகாத்மா சொன்னதும் அந்த மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தமக்கான உணவைத் தாமே சமைத்து உண்ணத் தொடங்கினார்கள். அவர்களின் குணங்களில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. உணவிற்கும் எண்ணத்திற்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறது என்பது அறியப்பட வேண்டிய உண்மையாகும்.

வன்முறையற்ற வாழ்க்கை வாழ வன்முறையற்ற வகையில் தயாரிக்கப்படும் உணவைத் தயாரித்து உண்ண வேண்டும். காந்தியடிகள் அக்கால ஆங்கில அரசிற்கு, அதன் கடுமையான போக்கிற்கு எதிராக பல கட்டுரைகளை எழுதினார். இதன் காரணமாக இவரை எந்நேரமும் சிறையில் அடைக்கலாம் என்ற நிலை உருவானது. தன்னைச் சிறையில் அடைத்தால் என்ன நடைபெறவேண்டும் என்பதையும் காந்தியடிகள் சிந்தித்து அதனை ஒரு கட்டுரையாக எழுதினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை

siragu marayon1
பூம்புகாரில் இருந்து மதுரையை நோக்கிச் செல்லும் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோர் காவிரியின் கரையோரமாக நடந்து உறையூரை அடைந்து அங்கு தங்குகிறார்கள். பிறகு வைகறையில் உறையூரை விட்டு நீங்கி தென்திசை நோக்கிப் பயணமாகிறார்கள். வழியில் மதுரையில் இருந்து திருவரங்கத்திற்கும் திருவேங்கடத்திற்கும் செல்ல விரும்பிப் பயணிக்கும் மாங்காட்டு மாமுது மறையோன் என்ற வழிப்போக்கன் ஒருவனை எதிர் கொள்கிறார்கள். அவன் மாங்காட்டில் வாழும் பாண்டிய நாட்டுக் குடிமகன். அவன் மதுரையில் இருந்து வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட கோவலன், ‘மாமறை முதல்வ! மதுரைச் செந்நெறி கூறு’ (58-59) என மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி கூறுவாயாக என்று மறையவனிடம் வினவுகிறான்.
மாங்காட்டு மாமுது மறையோன்,
“….. வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் …..” (63-67)

என வெயில் சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில், முல்லை நிலப்பகுதியும், குறிஞ்சி நிலப்பகுதியும் தம் இயல்பை விட்டொழித்து, பசுமை குன்றி பாலை நிலமாக மாறும் இக்காலத்தில் பயணிக்கிறீர்களே எனக் கூறுகிறான். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 23 January 2019

காதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் !!


siragu aanavakolai1
உலகில் உயிர் தோன்றக் காரணமாய் அமையும் உணர்ச்சி காதல்!! இயற்கையின் பேரன்பு உயிர்களிடத்தில் காதலாய் மலர்கின்றது. மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் காதலில் இயல்பாய் எந்த குறுக்கீடும் இல்லாமல் ஒன்றினையும் நல்வாய்ப்பு பெற்றது. மனிதனுக்கு மட்டுமே காதல் பாலின தகுதி தவிர்த்து பணத்தகுதியும், நம் நாட்டை பொறுத்தவரையில் மதமும், சாதியும் தகுதிகளாக வைக்கப்படுகின்றன.

நாம் அறிந்த காதல் கதைகள் எல்லாம் இரு இணைகள் பிரிவில் மட்டுமே இன்று வரை காதலின் ஆழத்தையும் – காதலின் உன்னதத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு அனார்கலி – சலீம், லைலா – மஜ்னு, அம்பிகாபதி- அமராவதி போன்ற கற்பனைக் காதல் கதைகளில் கூட காதல் இணையர்கள் வாழ்க்கையில் சேர்வதில்லை. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ – ஜூலியட் வரை அதுதான் நிலை. சிறந்த காதல் காவியங்கள் என மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் கற்பனையானது, சோக முடிவு கொண்டது. அந்த வகையில் நம் நடைமுறை வாழ்க்கையிலும் கூட அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 21 January 2019

தொகுப்பு கவிதை (அறியாமையை நீக்கிய ‘மழை’, நகர்வு, மணம்)

அறியாமையை நீக்கிய ‘மழை’

  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌                                                                -  அனஸ் ஹக்கீம்
siragu mazhai1
வேரற்ற பூமியின் வேதனைக் கண்ட
வேலியற்ற வானத்தின் அழுகைக் கண்ணீர் மழையே! – உன்னை
அழகற்றத் தோட்டத்தின் அழகிலாமை நீக்க
பரித்து வீசிய பஞ்சபூத்ததின் மு த்தெனவென்றி-நான்
துக்கமற்ற இமையுடன் துயரமற்ற உள்ளத்துடன்
தூக்கத்தில் தொங்கினேன்- மழையே! நீ என் நண்பன்

பதிவற்ற ஒலியின்,அபாயத்தை யறிந்து

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அழகாய்ப் பளிச்சிடும் பிம்பம்(சிறுகதை)


siragu bimbam1
அண்ணே “இவள் என்னுடைய பிரண்டு” என்று அறிமுகப்படுத்தியபோது போது கதிரவனின் மனம் உறைந்து போனது. அதை வெளிக்காட்டாமல் வலிய முயற்சித்து வரவைத்த சிரிப்புடன் சங்கீதா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
இல்லை!  கேட்பது போல் பாவனை செய்துகொண்டிருந்தான்.
கல்லூரி காலத்தின்அழகிய காட்சிகள் அவன் வெற்றுத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. அதைத் தவிர்க்கப் போராடிக்கொண்டிருந்தான். அதற்குள் சங்கீதா அகஸ்டியாவைப் பற்றி அனைத்தையும் கூறி முடித்திருந்தாள்.
“சரிண்ணே! அகஸ்டியாவைப் பத்திரமாய்ப் பாத்துக்குங்க” என்று கூறிவிட்டு, அவளை உடன் அழைத்துக் கொண்டு அவளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்தாள்.
“வர்ரேன் சார்” என்று கையாட்டிச் சென்றாள் அகஸ்டியா, சங்கீதாவின் பின்னால் துள்ளி குதித்து வேகமாக!
அவளது பார்வை மறையும் வரை அப்படியே நின்ற கதிரவனுக்குத் தன்நெஞ்சில் மறைந்திருந்த பிரைசியின் நினைவுகள் பீரிட்டு வெளிப்பட்டன.

“அவளைக் கடைசியாக எப்போது பார்த்தேன்” என்ற விவரத்தைத் தேடிக்கொண்டிருந்தான் அவன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 18 January 2019

காந்தி சிலையை அகற்றிய பல்கலைக் கழகம்


siragu ghana university2
ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது காணா (Ghana) எனும் நாடாகும். அந்நாட்டின் தலைநகரான அக்ராவில் (Accra) அந்நாட்டில் மிகப் பெரிய பல்கலைக்கழகமான காணா பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகம் 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இன்று இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 40,000 மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு 2016ஆம் ஆண்டில் இந்தியா – காணா இரு நாடுகளின் நட்புறவுக்கு அடையாளமாக அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காந்தியாரின் சிலையைத் திறந்து வைத்தார். அவ்வாறு காந்தியாரின் சிலையைத் திறப்பதை அந்நாட்டின் அறிவுலக மக்கள் விரும்பவில்லை. ஏன்?

காந்தியார் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபொழுது இந்தியர்கள் கருப்பின மக்களை விட மிகவும் உயர்ந்தவர்கள் கூறியதைச் சுட்டிக்காட்டி அவர்கள் காந்தி சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்நாட்டு அரசோ அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இந்தியாவுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்ற முனைப்பில் காந்தி சிலையைத் திறக்க அனுமதித்து விட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 16 January 2019

பெண்ணிய பாதை


Siragu penniyam1
பெண்ணியம் என்ற சொல் 1960க்குப் பிறகே இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பெண்ணியம் பற்றி சிந்திப்பது பல தளங்களில் விரிவடைந்து வளர்ந்து வருகிறது. எனினும் பெண் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டாளா? என்பதை இக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது.
பெண்ணியம் பல லட்சக்கணக்கான சிந்தனைகளால் ஆன சமூக அமைப்பு. இது ஆணுக்கு எதிரானதல்ல. இல்லற வாழ்க்கைக்கு எதிரானதுமல்ல. நீயும் நானும் ஒன்றுபட்டுத் தோழமை உணர்வோடு வாழ்க்கை நடத்துவோம் என்ற எண்ணம் உடையது. புதுமைப்பெண் ஆணை தனது தோழனாகக் கருதுகிறாள்.
சங்ககாலத்தில் பெண்கள் மனைக்கு விளக்கமாக புலமைமிக்கவராக, வீர உணர்வுடையோராக, அரசியல் தூதுவராக விளங்கிய போதிலும்
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய.” (தொல்.களவு -15)
என்ற தொல்காப்பியரின் சிந்தனை மூலம் பழங்காலந்தொட்டே பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க பண்பாட்டு உருவாக்கத்தை இதன்முலம் உணர்ந்து கொள்ளலாம்.

“உண்டிசுருங்குதல் பெண்டிற்கு அழகு” என்று பெண்களின் உணவிலேயே சில வரையறைகள். “முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல” என்று போற்றும் நிலைகள். “மண்மகள் அறியா வண்ணசீறடிகள்” என்று வீட்டிலேயே அடைத்து வைக்கும் சிறைக்கைதிகள். இப்படியாக பெண்களின் உணர்வுகள் ஒவ்வொன்றும் மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெண் அஞ்சி வாழவேண்டியவள். அதிர்ந்து நடக்ககூடாது, ஊரத்தக் குரலில் பேசக் கூடாது, பொறுமையும் தியாகமுமே அவளது அணிகலன் என்று நாள்தோறும் அறிவுறுத்தி வளர்க்கப்படுகிறாள். அதிகாரமற்ற பொம்மைகளாகவே அலங்கரிக்கப்படுகிறாள். இவை அனைத்தும் சமூகத்தால் ஏற்படுத்தபட்ட கட்டமைப்புகள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 10 January 2019

ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்


Siragu Ruth Bader Ginsburg1
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதியாகப் பதவியேற்றவர் ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் (Ruth Bader Ginsburg). முற்போக்கு எண்ணங்கள் கொண்டவரான இவர் 1993 ஆம் ஆண்டில் அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் பரிந்துரைக்கப்பட்டு, நாட்டின் ஆட்சிமன்றத்தின் பலத்த வாக்கு ஆதரவுடன் (ஆதரவு: 96 – மறுப்பு: 3) பதவியேற்றார். 85 வயதாகும் ஜஸ்டிஸ் கின்ஸ்பர்க் அவர்களது பணியின் கால்நூற்றாண்டு நிறைவுறும் 2018 ஆம் ஆண்டு அவரைப் பெருமைப்படுத்தி மதிப்பளிக்கும் விதத்தில் ஒரு ஆவணப்படமும், அவர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றும் வெளியாயின.

ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் சட்டத்தின் கீழ் அனைவரும் சமம், மக்கள் பாலினசமத்துவ அடிப்படையில் பேதமின்றி நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். கல்லூரியில், பணி வாய்ப்பில், குழந்தை இருந்த காரணத்தால் பணிபுரியும் இடத்தில் பதவி நிலை தாழ்த்தப்பட்டது, கிடைத்த பணியிலும் அவரது தகுதிக்கான ஊதியம் தராமல் நல்ல வசதி வாய்ப்புடன் வருமானம் உள்ள கணவர் உள்ளவருக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் தேவையில்லை என்று குறைந்த ஊதியம் கொடுக்கப்பட்ட நிலை என அவரே பல வகையில் பாலினபேத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர். பாலினசமத்துவம் இல்லாமையால் ஏற்படும் பாதிப்புகளை நன்கு உணர்ந்தவர் என்பதால், அவரது பணியும் தீர்ப்புகளும் அமெரிக்க சட்டத்தில் ஆண்பெண் பாலினபேதம் இருக்கக்கூடாது என்ற வகையிலேயே இருந்து வந்திருக்கிறது. ஆகவே திரைப்படத்திற்கும் அதனை எதிரொலிக்கும் வண்ணம் “ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்” (On the Basis of Sex) என்ற தலைப்பு சூட்டப்பட்டுக் கடந்த கிறிஸ்துமஸ் அன்று நாட்டின் சில இடங்களில் மட்டும் படம் திரையிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 9 January 2019

நெடுநல்வாடை -ஒரு அறிமுகம் !!


siragu-nedunalvaadai1
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து!
பத்துப்பாட்டில் ஏழாவதாக திகழும் நூல் நெடுநல்வாடை. இது தலைவன் போர்ப் பாசறையில் இருக்கும்போது தலைவி அவன் வரவுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது. இந்த நூலில் அகப்பொருள் பற்றிய செய்திகள் நிறையாக இருப்பினும் இது புறப்பொருள் நூலாயிற்று. ஏனெனில் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப்பொருள் நூலாயிற்று.

இந்த நூலை இயற்றியவர் நக்கீரனார் எனும் நல்லிசைப் புலவர். இவரை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பர். இவர் தந்தையார் மதுரை மாநகரத்தே சிறந்த ஆசிரியத் தொழில் நடத்தயவர் என்று அறியப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 8 January 2019

உயிரைக் குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை, இனியும் அனுமதியோம்!


siragu sterlite2
உலகின் பல நாடுகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது என்றால், என்றைக்கும் இந்தியாவில், மனித உயிருக்கு மதிப்பு இருப்பதில்லை, மனித வளத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை அதிலும் ஏழை, எளிய மக்களின் பாதிப்புகள் என்றால் அரசும், அரசைச் சார்ந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது.!

மக்களின் உயிரை குடிக்கும் தொழிற்சாலைகள் நாட்டிற்குத் தேவை தானா, இதன் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறதா என்ற பல கேள்விகள் நம்முள் எழத்தான் செய்கிறது. தூத்துக்குடியில் நிறுவப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை ஒரு உயிர்கொல்லி நிறுவனம். இதை ஆரம்பிக்கும்போதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இது இயற்கைக்கு மாறானது, மண், நீர், காற்று, என அனைத்தையும் மாசுபடுத்தக் கூடியது என்று கடுமையாக எதிர்த்தனர். இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்படும் தாமிரத் தாதுக்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் ஸ்டெர்லைட் ஆலை தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தை நடத்தும் வேதாந்த குழுமத்தின் தலைவர் அணில் அகர்வால் வசிக்கும் இங்கிலாந்திலும் கூட ஸ்டெர்லைட் ஆலை தடைச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 3 January 2019

மரத்தை நோக்கி விரைந்த முகிலன் (சிறுகதை)


Siragu tree1
தீக்குச்சியும் பட்டாசும் புணர்ந்ததன் விளைவாய் பிறந்த வெடிச்சசத்தத்துடன் உடன்பிறந்த நாற்றமும் காற்றில் தவழ்ந்தன. மறுபுறம் வானவேடிக்கைகள் வின்னை அதிரச்செய்து கொண்டிருந்தன. மங்கலமாய்த் தொடங்கியது மணமக்கள் ஊர்வலம். வரவேற்பில் கலந்துகொள்ள வந்திருந்த சுற்றத்தினர் சாலையை ஆக்கிரமித்து இருந்தனர்.
திருமணமண்டபம் பிரதான சாலையை ஒட்டியிருந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணமக்கள் மண்டபத்தில் நுழைந்த பின்னரும் சாலையில் சலசலப்பு அடங்க சற்று நேரமானது.
தாம்புலம் முடிந்தபின்னர் வெள்ளைவேட்டி வெள்ளைச் சட்டை அணிந்த கூட்டத்தில் ஒரே சலசலப்பு. காரணம் இதுதான் மண்டபத்தின் அருகில் இருப்பது புளிய மரமா? ஆலமரமா?  தொடங்கியது விவாதம். தொடக்கி வைத்தவர் யார் என்பதை மறந்தனரா? அல்லது யார் என்பதை யாரும் அறியவில்லையா? என்பன கேள்விகளாய் மிஞ்சி இருந்தன கூட்டத்தில் சிலரிடம்.
மணமக்களின் மகிழ்ச்சியைப் பறித்துக்கொண்டோடியது விருந்துக்கு வந்த உறவினர் கூட்டம்.
ஒரு வழியாய் வழிதேடி அலைந்துதிரிந்து மண்டபத்தைக் கண்டுபிடித்த முகிலன் மகிழ்ச்சியை விழுங்கியது மண்டபத்தின் அமைதி. கலவரம் தொற்றிய முகத்துடன் மண்டபத்தை நோக்கி விரைந்தான்.

யாருமின்றி வெறிச்சோடிக்கிடப்பதன் காரணம் அறியும் ஆவலைக் காட்டிலும் ஒரு வேளை மண்டபம் மாறி வந்துவிட்டோமா என்ற ஐயமே அவனை அலைக்கழித்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 2 January 2019

பிரார்த்தனை


Religious Leader Mahatma Gandhi 1869 - 1948
பிரார்த்தனை வலிமை வாய்ந்தது. பிரார்த்தனை கடவுள் சார்ந்த விசயம் என்று கருதுபவர்கள் ஒரு புறம் இருக்க, பிரார்த்தனை என்பது நம்பிக்கை சார்ந்த விசயம் என்பது உறுதி. ஒருவரின் மீது நம்பிக்கை வைக்கிறோம். நாளை இதனை இவர் செய்து தருவார் என்று நம்பிக்கை வைக்கிறோம். நாளை அந்த நேரம் வரும் வரை இந்த நம்பிக்கை மட்டுமே நம்மிடம் உள்ளது. செயல் செய்து முடித்தபின்புதான் நம்பிக்கை செயல் வடிவம் பெற்று வெற்றி பெறுகிறது.
உலக வாழ்வில் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையை ஏற்படுத்தி ஆன்மபலத்தைத் தருவது பிரார்த்தனை. கடவுளின் மீது அசையாத நம்பிக்கையை ஏற்படுத்துவது பிரார்த்தனை.

காந்தியடிகளின் மொழிகளில் சொன்னால் ‘‘பிரார்த்தனை வாக்கு வன்மையைக் காட்டுவதற்கு உரியதன்று. உதட்டிலிருந்து எழும் வணக்கமும் அல்ல அது. இருதயத்திலிருந்து எழுவதே பிராத்தனை. ஆகையால் அன்பு ஒன்றைத் தவிர வேறு எதுவுமே அங்கே இல்லாதவாறு உள்ளத்தூய்மையை நாம் அடைந்து விடுவோமாயின் எல்லாத் தந்திகளையும் தக்க சுருதியில் கூட்டி, வைத்துவிடுவோமாயின் தானே இனிய கீதும் எழுந்து இளைவன் அருளைக் கூட்டுவிக்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.