Thursday 3 January 2019

மரத்தை நோக்கி விரைந்த முகிலன் (சிறுகதை)


Siragu tree1
தீக்குச்சியும் பட்டாசும் புணர்ந்ததன் விளைவாய் பிறந்த வெடிச்சசத்தத்துடன் உடன்பிறந்த நாற்றமும் காற்றில் தவழ்ந்தன. மறுபுறம் வானவேடிக்கைகள் வின்னை அதிரச்செய்து கொண்டிருந்தன. மங்கலமாய்த் தொடங்கியது மணமக்கள் ஊர்வலம். வரவேற்பில் கலந்துகொள்ள வந்திருந்த சுற்றத்தினர் சாலையை ஆக்கிரமித்து இருந்தனர்.
திருமணமண்டபம் பிரதான சாலையை ஒட்டியிருந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணமக்கள் மண்டபத்தில் நுழைந்த பின்னரும் சாலையில் சலசலப்பு அடங்க சற்று நேரமானது.
தாம்புலம் முடிந்தபின்னர் வெள்ளைவேட்டி வெள்ளைச் சட்டை அணிந்த கூட்டத்தில் ஒரே சலசலப்பு. காரணம் இதுதான் மண்டபத்தின் அருகில் இருப்பது புளிய மரமா? ஆலமரமா?  தொடங்கியது விவாதம். தொடக்கி வைத்தவர் யார் என்பதை மறந்தனரா? அல்லது யார் என்பதை யாரும் அறியவில்லையா? என்பன கேள்விகளாய் மிஞ்சி இருந்தன கூட்டத்தில் சிலரிடம்.
மணமக்களின் மகிழ்ச்சியைப் பறித்துக்கொண்டோடியது விருந்துக்கு வந்த உறவினர் கூட்டம்.
ஒரு வழியாய் வழிதேடி அலைந்துதிரிந்து மண்டபத்தைக் கண்டுபிடித்த முகிலன் மகிழ்ச்சியை விழுங்கியது மண்டபத்தின் அமைதி. கலவரம் தொற்றிய முகத்துடன் மண்டபத்தை நோக்கி விரைந்தான்.

யாருமின்றி வெறிச்சோடிக்கிடப்பதன் காரணம் அறியும் ஆவலைக் காட்டிலும் ஒரு வேளை மண்டபம் மாறி வந்துவிட்டோமா என்ற ஐயமே அவனை அலைக்கழித்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment