Thursday 24 January 2019

நன்முறை


Religious Leader Mahatma Gandhi 1869 - 1948
வன்முறையற்ற வாழ்க்கை முறையே நன்முறையான வாழ்க்கைமுறை. காந்தியடிகள் ஒரு முறை கவிமுனிவர் இரவிந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்திற்குச் சென்றார். அங்கு மாணவர்களுடன், ஆசிரியர்களுடன் சில நாட்கள் தங்கிக் கலந்து பழக வேண்டிய வாய்ப்பு வந்தது. அப்போது அவர் மாணவர்களுக்கான உணவு மற்றவர்களால் சமைக்கப்பட்டு வருவதை அறிந்தார். நமக்கான நமது உணவை நாமே சமைத்து உண்டால் நலமாக இருக்குமே என்று அவர்களிடம் கூறினார் காந்தியடிகள். நமக்கான உணவை நாமே சமைத்து உண்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஒன்று நாமும் சமைக்கக் கற்றுக்கொள்கிறோம். நம் இயல்புக்குத் தேவையான, மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பற்ற வகையில் சமைத்துக்கொள்ள இயலும். இவை போன்ற பல நன்மைகள் நாமே சமைத்து உண்பதில் கிடைக்கின்றன.
இதனை மகாத்மா சொன்னதும் அந்த மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தமக்கான உணவைத் தாமே சமைத்து உண்ணத் தொடங்கினார்கள். அவர்களின் குணங்களில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. உணவிற்கும் எண்ணத்திற்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறது என்பது அறியப்பட வேண்டிய உண்மையாகும்.

வன்முறையற்ற வாழ்க்கை வாழ வன்முறையற்ற வகையில் தயாரிக்கப்படும் உணவைத் தயாரித்து உண்ண வேண்டும். காந்தியடிகள் அக்கால ஆங்கில அரசிற்கு, அதன் கடுமையான போக்கிற்கு எதிராக பல கட்டுரைகளை எழுதினார். இதன் காரணமாக இவரை எந்நேரமும் சிறையில் அடைக்கலாம் என்ற நிலை உருவானது. தன்னைச் சிறையில் அடைத்தால் என்ன நடைபெறவேண்டும் என்பதையும் காந்தியடிகள் சிந்தித்து அதனை ஒரு கட்டுரையாக எழுதினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment