Thursday 24 January 2019

மறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை

siragu marayon1
பூம்புகாரில் இருந்து மதுரையை நோக்கிச் செல்லும் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோர் காவிரியின் கரையோரமாக நடந்து உறையூரை அடைந்து அங்கு தங்குகிறார்கள். பிறகு வைகறையில் உறையூரை விட்டு நீங்கி தென்திசை நோக்கிப் பயணமாகிறார்கள். வழியில் மதுரையில் இருந்து திருவரங்கத்திற்கும் திருவேங்கடத்திற்கும் செல்ல விரும்பிப் பயணிக்கும் மாங்காட்டு மாமுது மறையோன் என்ற வழிப்போக்கன் ஒருவனை எதிர் கொள்கிறார்கள். அவன் மாங்காட்டில் வாழும் பாண்டிய நாட்டுக் குடிமகன். அவன் மதுரையில் இருந்து வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட கோவலன், ‘மாமறை முதல்வ! மதுரைச் செந்நெறி கூறு’ (58-59) என மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி கூறுவாயாக என்று மறையவனிடம் வினவுகிறான்.
மாங்காட்டு மாமுது மறையோன்,
“….. வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் …..” (63-67)

என வெயில் சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில், முல்லை நிலப்பகுதியும், குறிஞ்சி நிலப்பகுதியும் தம் இயல்பை விட்டொழித்து, பசுமை குன்றி பாலை நிலமாக மாறும் இக்காலத்தில் பயணிக்கிறீர்களே எனக் கூறுகிறான். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment