Wednesday 23 January 2019

காதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் !!


siragu aanavakolai1
உலகில் உயிர் தோன்றக் காரணமாய் அமையும் உணர்ச்சி காதல்!! இயற்கையின் பேரன்பு உயிர்களிடத்தில் காதலாய் மலர்கின்றது. மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் காதலில் இயல்பாய் எந்த குறுக்கீடும் இல்லாமல் ஒன்றினையும் நல்வாய்ப்பு பெற்றது. மனிதனுக்கு மட்டுமே காதல் பாலின தகுதி தவிர்த்து பணத்தகுதியும், நம் நாட்டை பொறுத்தவரையில் மதமும், சாதியும் தகுதிகளாக வைக்கப்படுகின்றன.

நாம் அறிந்த காதல் கதைகள் எல்லாம் இரு இணைகள் பிரிவில் மட்டுமே இன்று வரை காதலின் ஆழத்தையும் – காதலின் உன்னதத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு அனார்கலி – சலீம், லைலா – மஜ்னு, அம்பிகாபதி- அமராவதி போன்ற கற்பனைக் காதல் கதைகளில் கூட காதல் இணையர்கள் வாழ்க்கையில் சேர்வதில்லை. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ – ஜூலியட் வரை அதுதான் நிலை. சிறந்த காதல் காவியங்கள் என மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் கற்பனையானது, சோக முடிவு கொண்டது. அந்த வகையில் நம் நடைமுறை வாழ்க்கையிலும் கூட அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment