Tuesday 30 April 2019

கலைக்காக ஒரு கதை


siragu-ravichantrika-book--cover1
நூலும் நூலாசிரியரும்:
படைப்பாளரும் பத்திரிக்கையாளருமான மீ. ப. சோமசுந்தரம் (மீ. ப. சோமு, 1921 – 1999) அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். “அக்கரைச் சீமையிலே” என்ற பயண நூலுக்குச் சாகித்திய அகாதெமி பரிசுடன், படைப்பிலக்கியத்திற்காக மேலும் பல பரிசுகளும் பெற்ற இலக்கியவாதி. கல்கி இதழின் ஆசிரியராக இரு ஆண்டுகள் (1954-1956) பொறுப்பேற்றதுடன், நண்பன் என்ற இதழையும் தொடங்கி நடத்தினார். கட்டுரை, ஆய்வுக்கட்டுரை, பயணக்கட்டுரை, புதினம், சிறுகதை, நாடகம், கவிதை, சித்தர் இலக்கியம் (ஆய்வு நூல்) என இலக்கியத்தின் பல துறைகளிலும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்தியதுடன் சொற்பொழிவாளராகவும் இருந்துள்ளார். இவரது புகழ்பெற்ற புதினம் ரவிசந்திரிகா.

‘சர்ப்ப கந்தி’ என்ற மூலிகை பாம்பின் நச்சு முறிவுக்கான மருந்து, அது மனநோய்க்கும் ஒரு மருந்து, அதற்கு ‘சந்திரிகா’ என்ற பெயருமுண்டு என்ற தகவலுடன் நூல் துவங்குகிறது. கதையின் நாயகி சந்திரிகா அவளது நாட்டிய ஆசிரியரான புல்லாங்குழல் கலைஞர் ரவீந்திரனுக்கு மன ஆறுதல் தந்து, அவனது வாழ்வுக்கு நிலவாக ஒளி கொடுத்தாள் என்று கதை குறித்த அறிமுகம் கொடுக்கப்படுகிறது. கதை மலைக்கோட்டையில் அவளது நாட்டிய அரங்கேற்றத்துடன் தொடங்குகிறது. அவளுக்கு விழாவில் பரிசளிக்கத் தனது புல்லாங்குழலை அடைமானம் வைத்து பரிசு வாங்குகிறார் அவளது ஆசிரியர் ரவீந்திரன். கதையின் நோக்கம் கலைக்கும் கலைஞர்களின் வாழ்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்புவது என்பது தெளிவு. ரவிசந்திரிகா என்ற ராகமும் ஒன்று உண்டு. வானதி பதிப்பகம் வெளியிட்ட (நான்காம் பதிப்பு -1989) இந்த நூலின் முதல் அத்தியாயம் ‘மலைக்கோட்டை’ என்று துவங்கி, 45 ஆவது அத்தியாயமாக  ‘மங்களம்’ என்ற தலைப்புடன் மங்களம் பாடி முடிக்கப்படும் இந்த நூலின் பக்கங்கள் 500க்கும் மேல் விரிகிறது. முதல் பதிப்பு எப்பொழுது என்ற குறிப்பில்லை. இக்கதை அக்காலத்தில் கல்கியில் தொடராக வந்ததாக அறிய முடிகிறது. மேலும், இது மிகவும் வரவேற்கப்பட்ட கதை என்பதால் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 29 April 2019

பட்டினப்பாலை ஒரு அறிமுகம் !!


siragu pattinapaalai2
“குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்துக்” காவிரிப்பூம் பட்டினத்துக் காவலனான” சோழன் கரிகாற் பெருவளத்தானை பெரும்பாணாற்றுப்படை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய இப் பனுவலுக்குப் பட்டினப்பாலை எனப்பெயர் குறித்தார்.
பட்டினப்பாலை என்பது, பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்தினைச் செய்யுள் நூல் என விரியும்.

புலவரின் நோக்கம் கரிகாற் சோழனை சிறப்பித்துப் பாட வேண்டும் என்பது தான். ஆனால் நேரே பாடினால் அது புறத்திணை ஏழனுள் ஒன்றாகிய வாகைத்திணை வகையில் வரும். அவ்வாகைத்திணைப் பொருள் அமையப் பாடி இப்பாட்டினுள் அகத்திணை ஏழனுள் ஒன்றாகிய பாலைத்திணை பொருள்பட இதனை அகப்பொருட் பாடலாக பாடியதே இந்நூலின் சிறப்பு. பாலை என்பது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் அகத்திணை ஒழுக்கங்களுள் ஒன்று. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பற்றிக் கூறுவது. இப்பட்டினப்பாலை வஞ்சியடிகள் பெருவரவினவாக ஆசிரிய அடிகளும் விரவப்பெற்ற ஓரின்னிசைப் பாடலாகும். இதனை வஞ்சி நெடும்பாட்டெனவும் வழங்குவர். தன் தலைவியைவிட்டு பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது. இது செலவழுங்குதல் துறையின் பாற் வரும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/

Thursday 25 April 2019

நான் யார்? என்னைத் தெரியுமா?? (கவிதை)


Dec-23-2017-newsletter1
குயில் கூவதற்கு நான் வேண்டும்
மயில் அகவுதற்கு நான் வேண்டும்
குரங்கு தாவுதற்கு நான் வேண்டும்
மனிசிதலை சிவுதற்கும் நான் வேண்டும்
அவர இவர் மேவுதற்கும் நான் வேண்டும்
வயலில் ஒன்றை தூவுதற்கும் வயிற்றில்
ஒன்றைக் காவுதற்வும் நான் வேண்டும்
அப்படி என்றால் நான் யார்?

தீவுக்கு என்ன வேண்டும் தீர்வு வேண்டும்?
ஒரு நல்ல தீர்வுக்கு என்ன வேண்டும்??
தீவுக்கும் தீர்வுக்கும் நான் வேண்டும்
கதவிலும் நான் இருப்பேன் மதவிலும் நான் இருப்பேன்
இரவிலும் நான் வருவேன் உங்கள் கனவிலும் நான் வருவேன்
நிலவிலும் நானிருப்பேன் உங்கள் நினைவிலே நான் நிச்சயம் இருப்பேன்
நான் உண்மையில் ஆர்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 24 April 2019

தூக்கில் தொங்கிய மாலை (சிறுகதை)


siragu birds
சூரியன் மெல்ல தன் ஒளிக்கதிர்களை விடுவித்தான். நீர் நிரம்பிய குளத்தில் அழகிய தாமரைமுகம் சிவந்தாள். பறவைகள் விழித்த செய்தி மரங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அப்போது இரண்டு காகங்கள் மட்டும் கண் விழிக்காமல் கூட்டில் உறங்கிக் கொண்டிருந்தன. புறாக்களும், கொக்குகளும் யானை வடிவத்தையுடைய நீர் கோர்த்த மேகத்தைத் தொட்டுவிடும் அளவிற்கு உயர்ந்து பறந்தன.
சூரியஒளி கூட்டில் பட்டதும் திடீரென அலறி அடித்தடி பதற்றத்துடன் எழுந்தன அவை. சுற்றும் முற்றும் அலைந்து திரிந்து பார்த்தன. ஒரு பறவையும் கண்ணில் தென்படவில்லை. ”ஐயோ நம்மைத் தன்னந் தனியாக விட்டுட்டுப் போயிட்டாங்களே! நாம எப்படி இறை தேடுவது” என்று கவலையுடன் ஒன்றையொன்று பார்த்தன.

முடிவாக, சரி நீ ஒரு பக்கம் போ! நான் ஒரு பக்கம் போறேன்! என மூக்கு உடைந்த காக்காவும் ஒரு கால் உடைந்த காக்காவும் முடிவெடுத்து பறக்க ஆரம்பித்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 22 April 2019

சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள்


siragu paguththarivu1
பகுத்தறிவுக் கொள்கை இன்றைய காலத்தில் தோன்றியவை அல்ல, மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றே உண்டானவையாகும். பகுத்தறிவு என்ற பெயர்தான் பிற்காலத்தில் வந்ததே தவிர அதன் பொருண்மை அல்லது அதன் பொருள் எனப்படும் பகுத்து ஆராயும் முறை சிந்திக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இருந்து வருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனை நல் வழிப்படுத்த சில பகுத்தறிவுக் கூறுகள் எடுத்துக் கூறபட்டன. அந்த வழிமுறையில் பகுத்தறிவுக் கொள்கையினை மனிதனுக்கு உணர்த்துவதில், சங்க இலக்கியத்தின் பங்கு என்ன என்பதனை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்குகிறது.

மனித மூளையின் ஆற்றலினால் தோன்றுகின்ற சிந்தனை சக்தியின் விளைவால் அவனது மனதிலே நன்றும் தீதுமாய் எண்ணங்கள் கலந்திருக்கின்றன. இவற்றுள் நல்லது எது தீயது எது என அறியும் நுண்ணியல் ஆற்றலே பகுத்தறிவாகும். எந்த ஒரு கொள்ளைகையையும் கோட்பாட்டையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதோ அல்லது ஏற்காமல் விட்டு விடுவதோ பகுத்தறிவு ஆகும். எந்த ஒன்றின் உண்மைத் தன்மையை அறிவதுதான் பகுத்தறிவு. இது ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதன் மூலமே தெளிவுபடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 19 April 2019

சிலை அல்ல அவர் சித்தாந்தம் (கவிதை)


siragu election-commission3

சிலை அல்ல அவர் சித்தாந்தம்
சீறியெழும் அலைகளாய்
ஆர்ப்பரிக்கும் சிந்தனை
சில்வண்டுகளின் ஆணவத்தை
அழிக்கும் சினத்தீ!
செறுப்பொன்று வீழ்ந்தாலே
முளைத்திடும் சிலையாய்
சிலையொன்றை உடைத்தால்
சித்தாந்தம் சீறாதோ?
உடைத்து விளையாடும்
உஞ்சி விருத்திகளே
உதைகள் உண்டு

உங்களுக்கு காத்திருங்கள்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

Thursday 18 April 2019

காவிரிக்கு உரியவர் யார்?


siragu kaavirikku2
காவிரிக்கு உரியவர் யார்? என்ற கேள்வி இக்காலத்தில் மாநில அரசுகளுக்கிடையில் நிகழும் காவிரிநீர் பங்கீடு பற்றியஉரிமைப் போராட்டம் குறித்து எழுந்த கேள்வியல்ல. மாறாக, காவிரி யாருக்குரியவள் என்று தமிழிலக்கியப் பாடலும், வடமொழி கல்வெட்டுப்பாடல் ஒன்றும் குறிப்பிடும் செய்தியை மீள்பார்வை செய்யும் முயற்சி.
 திங்கள் மாலை வெண்குடையான்,
  சென்னி,செங்கோல் அது ஓச்சி,
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,
  புலவாய்; வாழி, காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,
  புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று
  அறிந்தேன்; வாழி, காவேரி! [புகார்க் காண்டம்: 7. கானல் வரி; 21-28]
 உரை:

மாலையால் அலங்கரிக்கப்பட்ட முழுமதி போன்ற அழகிய வெண்கொற்றக் குடையைக் கொண்ட சோழன், தனது செங்கோல் ஆட்சியின் கீழ் கொணர்ந்த கங்கையுடன் கூடினாலும், காவேரி பெண்ணே நீ அவனை வெறுக்க மாட்டாய், உன் பண்பு வாழ்க. அவ்வாறு வெறுப்பதை ஒழித்தது, கயல் கண்கள் கொண்டவளே, உனது தலைவன் மீது நீ கொண்ட காதலால் விளைந்த கற்பு என அறிந்தேன், நீ வாழ்க.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 17 April 2019

பொறுப்புள்ள குழந்தைகளும் பொறுப்பற்ற பெரியவர்களும்.


siragu poruppulla3
மனித இனம் தோன்றியதில் இருந்து முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றிய நாள் வரைக்கும் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விட, முதலாளித்துவம் தோன்றிய ஒரு நூற்றாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் அளவு பல்லாயிரம் மடங்கு அதிகம் என்று ஒரு கருத்து உண்டு.
முதலாளித்துவத்தின் தொடக்க காலத்தைவிட இப்பொழுது உற்பத்தித்திறன் மிகப் பல மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் இந்த நவீன உற்பத்திப் பண்டங்கள் மனித வாழ்க்கை நலத்திற்குத்தானா என்பது ஆழந்த பரிசீலனைக்கு உரியதாக இருக்கிறது.

அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த, அண்மையில் (18.2.2019 அன்று) காலமான வாலஸ் ஸ்மித் ப்ரோய்க்கர் (Wallace Smith Broecker) என்ற அறிவியல் அறிஞர் நவீனகாலத்துப் பண்டங்கள் பெருமளவு கரியமில வாயுவை (carbon di oxide) உமிழ்வதைக் கண்டு, இது புவி வெப்பத்தை உயர்த்தும் என்றும், அதனால் பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் என்றும் 1975ஆம்ஆண்டிலேயே தெரிவித்தார். 1990ஆம்ஆண்டு வரையிலும் யாரும் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 16 April 2019

ஏப்ரல்- 18 – 2019


 Siragu-By-election
வருகின்ற ஏப்ரல் 18 நம் நாட்டுக்கு முக்கியமான தினம். அது என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும். இந்தத் தேர்தலிலாவது நாம் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். குறிப்பாக பணம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் நபர்களை நமக்கு தெரிந்தால், ஓட்டின் உரிமை, அதன் மதிப்பை எடுத்து சொல்லி ஓட்டுக்கு பணம் பெறுவதைத் தடுக்க வேண்டும். நமக்குத் தேவையான நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கும் நல்ல நேரம் இது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகப்படியான இலவசம், ஓட்டுக்கு பணம் என்று உள்ளது.

அரசியலுக்கு வருகிறவர்கள் அனைவரும் இந்த சினிமா துறையை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு நடிக்க தெரியும், ஆனால் நாட்டை ஆளும் திறமை உள்ளதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 15 April 2019

பெத்தவன் -நூலும் வாசிப்பும்


siragu peththavan1
தலித்தியம் பற்றிய புரிதல் ஏற்படுவது எப்போது?
நெடுங்காலமாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்ளுடைய மேடைகளில் பேசிவருகிற சமூக நீதி, சமூக சமத்துவம், சமூகத்தில் புரையோடியுள்ள சாதியத்தின் தன்மையானது பெரியாரின் காலத்திற்குப் பின்னும் தற்போது மாறிவரும் அரசியல் சூழலில் எத்தகைய நிலையில் உள்ளன என்பதை ஆழ அழுத்தமாக எவ்விதக் கறார் தன்மையிலிருந்தும் விலகிவிடாது, விமர்சனம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏன்? என்ற தேவைக்கான அளவீடுகளாக நாம் எவற்றையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டும் என்றுகூட சில திராவிட ஆய்வாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். அல்லது திராவிடத்தின் கொள்கைகள் பரிதாப நிலையில் உள்ளனவா? அல்லது நாம் அவற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய கட்டத்தின் பேரில் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதையாவது நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ளமறுக்கக் கூடாது.

தலித்திய இலக்கியங்கள் திராவிடக் கூறுகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஒருவாறு மகிழ்ந்து வரவேற்கிறோமா என்பதை வாசகர்களிடத்தில் எழுப்ப வேண்டிய கேள்வி. அல்லது தமிழ் இலக்கியங்களில் எழுந்துள்ள பல இசங்கள் தமிழின் சமூகக் கட்டமைப்பிற்கு துணை செய்கின்றனவா என்பதை தீவிரமாக விவாதம் செய்யவேண்டும். சிலர் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றும் செய்கின்றனர். என்றாலும் தற்காலத்தில் தீவிரமடைந்து விட்ட தலித்திய படைப்புகளை சேர்ப்பதிலும் எங்கோ ஒரு மூலையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் தான் என்ன என்பதையாவது நாம் விவாதிக்கத் தவறிவிடக் கூடாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 12 April 2019

இந்திய பாராளுமன்றம் – 2019


siragu election-commission3
இன்றைய கமல்ஹாசன், நேற்றைய விஜயகாந்த் என போட்டி போட, தேசிய கட்சிகள் மாநில கட்சிகளுடன் கூட்டணியமைக்க, மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்குகிறது. ஏழு தேசிய கட்சிகள் உட்பட மொத்தம் 2000 கட்சிகள் போட்டியிடுகின்றன. 90 கோடி வாக்காளர்களைக் கொண்ட உலகின் மாபெரும் சனநாயகத்தின் 543 தொகுதிகளுக்கு சுமார் 8000 வேட்பாளர்கள் களமிறங்குகிறார். இதில் 272 என்ற மாயாஜால எண்ணை அடையும் கட்சிக்கே அடுத்த ஐந்து ஆண்டுகள் பாரத துணைக்கண்டத்தை கட்டியாளும் அரிய வாய்ப்பு வழங்கப்படும்.

இதில் எந்த ஒரு தனிக் கட்சியும் அறுதிப்  பெரும்பான்மை பெறுவதாகத் தெரியவில்லை. எனவே, மீண்டும் ஒரு கூட்டாட்சியயை நோக்கியே 2019 தேர்தல் செல்வது உறுதியாகிறது. குறைந்தபட்ச அரசாங்கத்தில் சில குழப்பங்கள் இருந்தாலும் அதில் பல நன்மைகளும் இருக்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 11 April 2019

தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்படட்டும்!


siragu election-commission1
உலகிலேயே மக்கள்தொகையின் அடிப்படையில், மிகப்பெரிய சனநாயக நாடு, நம்முடைய நாடு இந்தியா என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளல் வேண்டும். இந்த 2019 – ஆம் ஆண்டு, 17 – வது மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறப்போகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்தேர்தலை நாம் பெருமையுடன் சந்திக்க இருக்கிறோம். இந்தியா விடுதலைப்பெற்று முதல் தேர்தலின் போது, உலகத்தின் பார்வை நம்மீது பரவலாகக் காணப்பட்டது. அப்போதே, எவ்வித கட்டமைப்பும் இன்றி, ஊடக வசதிகளின்றி நாம் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி, மக்களவை உருவாக்கி மிகச்சிறந்த சனநாயக நாடு என்பதை மெய்ப்பித்திருக்கிறோம். இதற்காக நாம் ஒவ்வொருவரும் இந்தியன் என்ற வகையில் பெருமைகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

நடந்து முடிந்திருக்கும் 16 மக்களவைத் தேர்தல்களும், சில குறைகள் இருந்தாலும், பல நிறைகளோடு மிக நன்றாகவே நடந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை 2019 மக்களவைத் தேர்தல், மக்களின் மனதில், சிறிது ஐயத்தை கொடுத்திருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை. ஏனென்றால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. இதில் மத்திய அரசோ, மாநில அரசுகளோ எந்த விதத்திலும் குறுக்கீடு செய்ய முடியாது என்பது தான் அதனுடைய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாகும். ஆனால் 2014 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, பா.ச.க மோடியின் ஆட்சியில், பல குற்றசாட்டுகள் எழுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில், பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டன. பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தேர்தல் தேதியையே தள்ளிவைக்கக் கூடியளவிற்கு புகார்கள் குவிந்தன. வருமானவரி சோதனைகள், அ.தி.மு.க அமைச்சர் வீட்டிலேயே நடந்தது. இன்னும் பல இடங்களில் சோதனைகள் நடந்தன. மூன்று கண்டெய்னர் லாரிகளில் 560 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது யாருடைய பணம் என்றே தெரியாத நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரத வங்கி தங்களுடையது என்று கூறியது. அ.தி.மு.க அமைச்சர்களின், எம்.எல்.ஏ-க்களின் வீடுகளிலும், அவர்களின் பினாமி வீடுகளிலும் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் அவைகள் பற்றி எந்த தகவலும் அதன்பிறகு வரவில்லை. விசாரிக்கப்படவுமில்லை. அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகவும் தெரியவில்லை!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Wednesday 3 April 2019

மார்த்தா (சிறுகதை)


siragu maarththaa1
சாலையோரம் படுத்துறங்கிய மார்த்தா இடுப்பின் பின் எலும்பில் ஊசிக்குத்துவது போன்ற வலியால் துடித்தெழுந்தாள். கிழக்கே உள்ள மணிக்கூண்டில் மணி 6-ஐ தொட்டுக்கொண்டிருந்தது. டிசம்பர் மாத குளிர், வரலாறு காணாத அளவு சிகாகோவை வாட்டிக்கொண்டிருந்தது. குளிரில் நடுங்கியபடி கால்களை இறுக்கக் கட்டிக்கொண்டு முட்டியில் முகம் புதைத்துப் படுத்துக்கொண்டாள். மீண்டும் இடுப்பெலும்பை உருவி வெளி எடுப்பது போன்ற வலி. தன் பையை அருகிழுத்து தேடிப்பார்த்தாள். அவள் தேடியது அகப்படவில்லை. என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டே சாலைகளில் வேகமாக சீறிப்பாயும் மகிழுந்துகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மார்த்தாவிற்கு வயது 20. மார்த்தாவின் அம்மா குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு மனநிலை பிறழ்ந்து அரசு நடத்தும் விடுதியில் இருக்கிறார். தன் 17 வயதில் அம்மா மனநல காப்பகத்தில், அப்பா வேறு ஒரு துணையுடன் வாழ்க்கை என சென்றுவிட, வீட்டிற்கு வாடகை கட்ட பணமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் மார்த்தா. இந்த மூன்று ஆண்டுகளில் தெருவோரமே அவள் வீடானது. மகிழுந்துகள் சமிக்ஞைகிற்கு நிற்கும் போது, ஒவ்வொரு மகிழுந்துவின் கதவருகில் நிற்பாள். யாரவது பணம் தந்தால் starbucks சென்று காலை காபி குடிப்பாள். மதியம் ஏதாவது ஒரு சிறு உணவு விடுதியில், இருக்கும் பணத்தில் ஒரு சிறு ரொட்டித் துண்டை வாங்கிக்கொள்வாள். அதுவே அவளுக்கு பல நேரங்களில் நாள் முழுவதற்குமான உணவு. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் community hall இல் இலவசமாக பலர் சேர்ந்து சமைத்து வழங்கும் உணவை வாங்கிக்கொண்டு வருவாள். அதை பத்திரப்படுத்தி செவ்வாய்க்கிழமை வரை கூட வைத்துக்கொள்வாள். சில நேரங்களில் எங்காவது வேலைக்குச் செல்வாள்; ஆனால், அங்கு யாரேனும் அவளிடம் வரம்பு மீறி நடந்தால் அவளுக்கு பிடிப்பதில்லை, அதனால் வேலையும் நிலைப்பதில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 2 April 2019

காவிரிப்படுகையின் மொழி


Siragu tanjaore1
தஞ்சை என்றாலே எப்போதும் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது. அதற்குக் காரணங்களும்ஏராளம் இருக்கின்றன. சிலர் நினைப்பது போல் இராஜராஜ சோழன், அவருடைய மகன் இராஜேந்திரசோழன், சுங்கம் தவிர்த்த சோழனான குலோத்துங்க சோழன் முதல் பல சோழர்கள் பல்லாண்டுகளாகதங்களது ஆட்சியை நடத்தினார்கள். தமிழர்களின் சிறந்த கட்டடக் கலையான பெரிய கோபுரம் கொண்டபிரகதீஸ்வரர் கோயிலும், புகழ்பெற்று விளங்கி வருகிற அரண்மனையும் அதனுள் மராட்டிய மன்னர் இராஜாசரபோஜியின் காலத்தில் அமைக்கப்பட்ட நூலகமும் ஓவியங்களும் கலைச் சிற்பங்களும், சிவகங்கைப் பூங்காவும் அதனுள் இருக்கும் அகழியும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அவர்களைக்கண்டு புன்னகை செய்யும் மக்களும் அவர்களின் சிரிப்பும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதாலும் அத்தகைய புத்துணர்ச்சி வரவே செய்கிறது.


நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதையில் தடம்பதித்த ந.பி, கு.பரா-வின் தஞ்சையும், தமிழ் நாவல் வரலாற்றில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்ட தி.ஜானகிராமனின் “மோகமுள்” நாவலில் சித்திர எழுத்துக்களால் வரைந்த தஞ்சையும் காவிரியும் அக்கதையில் வரும் பாபுவும் அவனுடைய யமுணாவின் மீதான காதலும் இசையும் தம்புராவும், பாபுவின் மீது காதல் கொள்ளும் தங்கத்தின் அன்பும் ஒருசேர இழைந்து கொண்டே இருக்கிறதோ என்ற பிம்பம். “மீனின் சிறகுகள்”, “கரமுண்டார் வீடு” போன்ற நூல்களையும் எழுதி வாழ்ந்த தஞ்சை பிரகாஷின் இயல்பான தஞ்சை. இவையெல்லாம் இலக்கியத்தில் ஒன்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 1 April 2019

நாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன்


Siragu katherine2
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான உலகப் புகழ்பெற்ற நாசா நிறுவனம் சமீபத்தில் தனது நிறுவனத்தின் பகுதி ஒன்றுக்கு புதிய பெயரைச் சூட்டியது. நூறுவயதான ‘காத்தரைன் ஜான்சன்’ என்ற கறுப்பின விஞ்ஞானியை கௌரவிக்கும் பொருட்டு இந்த மாற்றம் முன்னெடுக்கப்பட்டது.
காத்தரைன் கணிதத்தில் வல்லவர். அமெரிக்கா முதன்முதல் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பிய ராக்கெட்டின் பாதையைக் கணக்கிடுவதில் பெரும்பங்காற்றியவர். அதன் பிறகு பல அப்பல்லோ ராக்கெட் பயணங்களிலும் இவரின் கணித உதவி அமெரிக்க விண்வெளி வீரர்களுக்கு உதவியது. அவர்கள் வெற்றியுடன் புவிக்குத் திரும்ப பயணப்பாதையை வகுத்தவர் காத்தரைன். சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் நிலவில் காலடி வைக்க வகுத்த பயணத்தின் பாதையை கணக்கிடுவதிலும் இவர் உதவி செய்துள்ளார். முப்பத்தைந்து ஆண்டுகள் இவர் நாசாவின் கணிதத்துறை விஞ்ஞானியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது பணியைப் பாராட்டி, 2015 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘மெடல் ஆஃப் ஃப்ரீடம்” என்ற விருதை அதிபர் ஒபாமா அளித்து இவரை சிறப்பித்தார்.

‘ஹிடன் ஃபிகர்ஸ்’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு ஒரு நூலாகவும், திரைப்படமாகவும் 2016ம் ஆண்டு வெளிவந்தது. இவர் நாசாவில் பணிபுரியத் துவங்கிய காலம் 1950களில். அக்காலத்தில் அமெரிக்காவில் நிறவெறியும் இனவெறியும் கறுப்பர்களை ஒடுக்கி இருந்தது. அறிவியல் கல்வி, உயர்கல்வி, அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பணிகளும் பெண்களுக்குக் கிடைக்காது. தவறி வேலையே கிடைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியமும் வழங்கப்பட்டதில்லை. அறிவியல் துறையில் உள்ள பணிகளில் பெண்கள் வரவேற்கப்பட்டதுமில்லை. இந்த சூழ்நிலையில் நிறபேதம், பாலின பேதம் என இருவகையிலும் பாதிக்கப்பட்டிருந்தனர் அமெரிக்காவின் கறுப்பினப் பெண்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மலர்கள்


siragu malargal1
மலர்கள் என்றாலே மங்கையர் சூடுவதும், மணம் தருவதும் மட்டுமல்ல. அதில் பல்வேறு குணங்கள், தன்மைகள் பொதிந்துள்ளன என்று சங்க இலக்கியங்களில் தங்கள் பாடல் வரிகளில் பதிவு செய்துள்ளனர் பண்டைத் தமிழ் புலவர்கள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அவர்கள் தங்கள காலத்தில் நிலவிய காலச்சூழல்களையும் இயற்கை தன்மையையும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் குறிப்பாக நற்றிணையில் காணலாகும் மலர்கள் குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் உறுப்பாகும். ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில் காணப்படும். மலருக்கு ஏழுவகை பருவங்கள் உண்டு. அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் ஆகும். மலர்கள் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு. மலர்கள் மனித வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சுப நிகழ்வு முதல் துக்க நிகழ்வு வரை முதல் இடம் பெறுவது மலர்கள்.
தமிழர்களின் சிறப்பாக ஒழுக்கத்தை கூறுவர். அவ்வொழுக்கம் அகவொழுக்கம், புறவொழுக்கம் என இரண்டாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விரு ஒழுக்கங்களின் இன்றியமையா கூறாக மலர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவன் தலைவி இருவரிடை முகிழ்க்கும் உறவையும் மேற்கொள்ளும் இல்வாழ்க்கையையும் பிறர்க்கு அறிவிக்கவொண்ணாப் பேரின்பத்தை அகம் என்பர். அந்த அகத்திணையை அன்பின் ஐந்திணையாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற திணைகளின் பெயர்களிலே பூக்களும் உள்ளன. அதனால்தான் சங்க கால புலவர்கள் கருப்பொருள்களில் ஒன்றாக மலரையும் சேர்த்துள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.