Monday 15 April 2019

பெத்தவன் -நூலும் வாசிப்பும்


siragu peththavan1
தலித்தியம் பற்றிய புரிதல் ஏற்படுவது எப்போது?
நெடுங்காலமாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்ளுடைய மேடைகளில் பேசிவருகிற சமூக நீதி, சமூக சமத்துவம், சமூகத்தில் புரையோடியுள்ள சாதியத்தின் தன்மையானது பெரியாரின் காலத்திற்குப் பின்னும் தற்போது மாறிவரும் அரசியல் சூழலில் எத்தகைய நிலையில் உள்ளன என்பதை ஆழ அழுத்தமாக எவ்விதக் கறார் தன்மையிலிருந்தும் விலகிவிடாது, விமர்சனம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏன்? என்ற தேவைக்கான அளவீடுகளாக நாம் எவற்றையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டும் என்றுகூட சில திராவிட ஆய்வாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். அல்லது திராவிடத்தின் கொள்கைகள் பரிதாப நிலையில் உள்ளனவா? அல்லது நாம் அவற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய கட்டத்தின் பேரில் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதையாவது நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ளமறுக்கக் கூடாது.

தலித்திய இலக்கியங்கள் திராவிடக் கூறுகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஒருவாறு மகிழ்ந்து வரவேற்கிறோமா என்பதை வாசகர்களிடத்தில் எழுப்ப வேண்டிய கேள்வி. அல்லது தமிழ் இலக்கியங்களில் எழுந்துள்ள பல இசங்கள் தமிழின் சமூகக் கட்டமைப்பிற்கு துணை செய்கின்றனவா என்பதை தீவிரமாக விவாதம் செய்யவேண்டும். சிலர் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றும் செய்கின்றனர். என்றாலும் தற்காலத்தில் தீவிரமடைந்து விட்ட தலித்திய படைப்புகளை சேர்ப்பதிலும் எங்கோ ஒரு மூலையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் தான் என்ன என்பதையாவது நாம் விவாதிக்கத் தவறிவிடக் கூடாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment