Monday 13 January 2020

சிறு காப்பியத் தமிழ்


siragu ilakkiyam1
தமிழ்க் காப்பியங்களை, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என்று இரு நிலைகளில் பிரிக்கமுடிகின்றது. இவற்றில் பெருங்காப்பியங்கள் பெருங்காப்பிய இலக்கணம் பொருந்தி நிற்பனவாகும். இவற்றில் சற்று குறைந்தவை சிறு காப்பியங்கள் ஆகின்றன. இச்சிறு காப்பியங்களின் கதை நெறியும் சற்று முரண்பாடு உடைய காரணத்தினாலும் இவை சிறு காப்பியங்கள் என்று வகைமை செய்யப்பட்டுள்ளன.
ஐஞ்சிறு காப்பியங்களின் கதை பொதுமரபு, ஒழுங்கு சார்ந்தனவாக இல்லை. உதயண குமார காவியம் பெருங்கதை என்ற நூலைத் தழுவிய கதை அமைப்பினை உடையது. இதனுள் இரு கதைத்தலைவர்கள் அமைகின்றனர். நாக குமார காவியம் என்பதும் நாக பஞ்சமி என்ற வழிபாட்டு முறையை முன் நிறுத்துவது. சமண சமயத்தாருக்குமட்டும் இது சிறப்பானது என்ற நிலையில் இதுவும் சிறு காப்பியமாக்கப்பட்டுவிட்டது. சூளாமணியும் இரு கதைத் தலைவர்களை உடையது. நீலகேசி என்பது குண்டலகேசியின் மறுப்பு நூல். யசோதர காவியம் நம்ப முடியாத அளவில் உயிர் பிறப்பு, மறு பிறவி போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது. மேலும் இக்காப்பியத்தின் கதை சற்று முரண்போக்கு உடையது. கணவனை விட்டுவிட்டு, யானைப்பாகனுடன் நேசம் கொள்ளும் மனைவி பற்றிய கதை இதுவாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment