Thursday 2 January 2020

சாதி எனும் மாயை (சிறுகதை)


siragu saadhi1
“அம்மா… வந்துட்டீங்களா, என்ன ஐயா, பாப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று கேட்டபடியே வள்ளி வீட்டினுள் நுழைந்தாள். அவள் வந்ததும், கேட்டதும் எதுவுமே காதில் விழவில்லை சுந்தரத்திற்கு. சிந்தனை முழுவதும் மகள் பூங்குழலி பற்றித்தான் ஓடிக்கொண்டிருந்தது.
அடுப்பாங்கரை உள்ளே நுழைந்த வள்ளி, அங்கே புளி கரைத்தபடியே ஏதோ யோசனையில் இருந்த பாரதியைப் பார்த்து, “அம்மா… பாப்பாவுக்கு உடம்பு தேவலையா?” என்று கேட்டாள். பதில் வராததால், மீண்டும், “அம்மா…” என்று கூப்பிட்டாள்.
உடனே, சுயநினைவிற்கு வந்தவளாய், “வா.. வள்ளி, நல்லா இருக்கியா? குழலிக்கு தான் உடம்பு சரியில்லை, அதான் உங்கிட்ட கூட சொல்லமுடியாம போயிட்டோம்..” என்றாள்.

“எனக்கு என்னமா, நல்லா தான் இருக்கேன். பரவாயில்ல அம்மா, அதனால் என்ன, நேத்து வந்து பாத்தா வீடு பூட்டியிருந்தது, அதான், பக்கத்துல கௌரி அம்மாவை கேட்டேன். அவங்க தான், பாப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்தது, அதனால் அவசரமா போயிட்டீங்கனு சொன்னாங்கமா….
என்னாச்சு மா திடீர்னு, இப்ப உடம்பு எப்படி இருக்கு, அழைச்சுக்கிட்டு வந்திட்டிங்களா.. பாப்பாவ?” என்று கேட்டாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment