Thursday 30 January 2020

தூரத்தில் நான் கண்ட உன் முகம்


siragu ilakkiya kaadhal1
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணி பாடும் ராகம்
என்று நிழல்கள் படத்தில் பாடகி ஜானகி அவர்களின் ஒரு பாடல் உண்டு. தன் காதலனை எண்ணி பாடப்படுவதாக அந்தப் பாடல் இருக்கும், அதைப் போலவே புறநானூற்றில் நக்கண்ணையார் என்பவர் தன் காதலனை எண்ணி பல பாடல்கள் பாடியுள்ளார்.
யார் இந்த நக்கண்ணையார் ?

நக்கண்ணையார் சங்ககால பெண்பாற் புலவர். புறநானூறு, அகநானூறு, நற்றினையில் ஒரு சில பாடல்களை எழுதி உள்ளார். இவரின் புறநானூற்றுப் பாடல்களை, படிக்கின்றபோது நக்கண்ணையார் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி மீது வைத்திருந்த காதல் நமக்கு நன்று புலப்படும். இந்தக் காதல் பாடல்களை ஏன் புறநானூற்றில் வைத்தனர் என அய்யம் எழலாம். ஏனெனில் புறநானூற்றுப் பாடல்கள் வீரத்தை, கொடையை, போர் பற்றிய செய்திகளைத் தான் மிகுந்து கொண்டிருக்கும். இதில் தலைவன் தலைவி பெயர்கள் வெளிப்படையாக இருப்பதாலும், இது கைக்கிளை துறையை (ஒருதலைக் காதல்) சார்ந்து இருக்கின்ற காரணத்தாலும் இந்த காதல் பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது என்பர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/

No comments:

Post a Comment