Wednesday, 9 December 2015

438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 3

438 days fi
காற்றைக்கிழித்துக் கொண்டு கடல் நீரோட்டத்துடன் மென்மையாக அவர் படகு மிதந்துகொண்டிருந்தபொழுது, திடீரென வானில் கடலோரத்தில் வாழும் பறவைகள் கூட்டம் தென்பட்டது. ஆல்வரெங்கா உற்றுப்பார்த்தார். அவரது கழுத்துத் தசைகள் இறுகின. வெப்பமண்டலத் தீவு ஒன்று மூடுபனியில் இருந்து வெளிப்பட்டது. பசிபிக் கடலின் பவளப்பாறைத் திட்டுகள், சிறிய மலையைச் சூழ்ந்த பசுமையான நிலம், அதைச் சுற்றி நீலநிற நீர் சூழ்ந்து பலவண்ணக் காட்சியாகத் தோன்றியது.
பிரமை இவ்வளவு நேரம் நீடிக்காதே, எனது வேண்டுதல்களுக்குப் பதில் கிடைத்துவிட்டதா? என்று எண்ணிய ஆல்வரெங்காவின் மனதில் வேகமாகப் பல மோசமான கற்பனைகளும் விரிந்தன. அவர் கரையில் இருந்து விலகிச் சென்றுவிடக்கூடும், கடலை நோக்கிப் பின்னோக்கி போய்விடவும் கூடும்… முன்னர் அவ்வாறுதானே நடந்தது, கரை ஒதுங்கும் நேரத்தில் மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அந்தத் தீவையே கூர்ந்து கவனித்து கடற்கரை ஓரம் தோன்றுவதை வைத்து மேலும் அதைப்பற்றிய விவரங்கள் அறிய முயன்றார். அது ஒரு குட்டித்தீவு. அவர் கணிப்பின்படி ஒரு கால்பந்தாட்ட மைதானத்தைவிடப் பெரிதானது அல்ல. அது இயற்கையுடன் ஒன்றி சாலைகளோ, ஊர்திகளோ, வீடுகளோ இல்லாமல் இருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சான் ஓசேயில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு


maaveerar6

“நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.” – வேலுப்பிள்ளை பிரபாகரன்
உங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்.. – இராஜ் சுவர்ணன்
உலகம் முழுதும் தத்தம் நாட்டு விடுதலைக்காகப் போராடி மரணித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். அமெரிக்காவில் மே மாதத்தில் அந்த அஞ்சலி நிகழ்வு நடைபெறும். இங்கிலாந்து, ஆத்திரேலியா, கனடா போன்ற பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளில் நவம்பர் 11-ம் நாள் இறந்த வீரர்களுக்கு (The Glorious Dead) அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தமிழீழ மக்களுக்கும், உலகெமெங்கும் பரந்துபட்டு வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் நவம்பர் 27-ம் நாளில் ஈழமண்ணிற்காக தம் இன்னுயிரை ஈன்ற மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செய்யப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது. அந்நாள் செ. சத்தியநாதன் எனும் லெப்டினெண்ட் சங்கர் தம் உயிரை தமிழ்மண்ணிற்காக தியாகம் செய்த நாள்.

1982-ம் ஆண்டு அக்தோபர் திங்கள் அதிகாலையில் ஒரு இளைஞன் முற்றுகையிட்டிருந்த சிங்கள வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டு ஓடுகிறான், அப்பொழுது சிங்கள் காடையனின் குண்டொன்று அவனது வயிற்றை கிழிக்க, அங்கிருந்த தோழர்கள் அவனைக் காப்பாற்றி மருத்துவ சிகிச்சைக்காக தாய்த்தமிழகத்திற்கு அழைத்து வருகின்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கண் கலங்கி நின்ற தலைவரின் முன்னிலையிலும், தோழர்களின் முன்னிலையிலும் 1982 நவம்பர் 27-ம் நாள் மாலை 6:05 மணியளவில் லெப்டனெண்ட் சங்கர் நம்மை விட்டு பிரிகிறான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்களப்பலி இவன். இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூறப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 8 December 2015

மாசுநீக்கி மாண்புறுவோம் (கவிதை)

water pollution

அகமாசோ   அனைத்துவகை   தீமை   கட்கும்
அடித்தளமாய்   அமைகின்ற   கொடிய   மாசு
முகம்பார்த்து   அறிவதற்கும்   முடிந்தி   டாது
முயன்றாலும்   எளிதாகத்   தெரிந்தி   டாது
நகம்போல   வெட்டியதை   எறியா   விட்டால்
நாகம்போல்   கொத்திவிடும்   நஞ்சைக்   கக்கி
தகவாழ்வு   நாம்பெறவே   எண்ணத்   தூய்மை

தாயன்பு     இரக்கமனம்   அமைய   வேண்டும் !

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19126

இறவா வரங்களே! (கவிதைகள்)


eelam
இனி ஒருபோதும்
தமிழர் வரலாற்றில்
எழுதப்படமுடியா…….
எம் இனத்தின்
வீர காவியங்களே!
வரையப்படமுடியா……
எம்இனத்தின்
உயிர் ஓவியங்களே!

உம் குருதியால்
தமிழர் தேசத்தை
உலக வரைபடத்தில்

வரைந்தவர்களே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19125

சங்கப் பாடல்களை அறிவோம் புறநானூறு-185

sanga paadalgal3
தொண்டைமான் இளந்திரையனின் பாடல் இது. இடையூறின்றி செலுத்த வேண்டியது வண்டி மட்டுமல்ல; நாட்டின் ஆட்சியையும்தான் என்பதை நயமோடு சொல்லுகின்ற பாடல்.
கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ் அள்ளற்பட்டு
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.
பொதுவியல் திணையில், பொருண்மொழிக் காஞ்சித்துறையில் அமைந்த பாடல்.

வண்டியினுடைய சக்கரமும் அச்சும் இணைந்தது போல்தான் இவ்உலகத்து இயக்கமும். நாடு காவலாகிய வண்டியைச் செலுத்துகின்றவன் திறமையானவனாக இருந்தால் வண்டியானது, தடையின்றிச் செல்லும். அதைச் செலுத்துகின்றவன், வண்டியைச் செலுத்துகின்ற முறைமை குறித்துத் தெளிவில்லாதவனாக இருந்தால் அவ்வண்டி ஒவ்வொரு நாளும் பகையாகிய சேற்றில் அகப்பட்டு மிகப்பலவாகிய தீய துன்பத்தினை மேன்மேலும் உண்டுபண்ணும் என்கின்றார் தொண்டைமான் இளந்திரையன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 7 December 2015

438 நாட்கள் கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 2

438 days1
கடலில் வீசி எறிந்துவிட்டதால், தூண்டிலோ தூண்டில் இரையோ இல்லாமல், மீன்பிடிப்பதற்கு ஆல்வரெங்கா ஒரு துணிச்சலான முறையைக் கையாண்டார். சுறாக்கள் வருகின்றனவா என்பதில் எச்சரிக்கையுடன் ஒரு கண் வைத்துக்கொண்டே, படகின் ஓரத்தில் மண்டியிட்டு அமர்ந்து, இருகைகளையும் தோள்வரை நீரில் கவனமாக நீட்டினார். தனது மார்பு படகின் பக்கவாட்டில் அழுந்தியிருக்க, கைகளை அசைக்காமல் சிறிது இடைவெளிவிட்டுக் காத்திருந்தார். ஏதேனும் ஒரு மீன் அவரது இருகரங்களுக்கு இடையே அகப்பட்டால், விரைவாக அமுக்கி, அதன் செதில்கள் மீது நகத்தால் அழுந்தப் பிடித்துக் கொள்வார். பல மீன்கள் தப்பிவிட்டன, ஆனாலும் ஆல்வரெங்கா விரைவில் இவ்வாறு மீன் பிடிப்பதில் திறமைசாலியாகிவிட்டார், மீனைப்பிடித்து அது கடிக்கும்முன் படகினுள் வீசலானார்.
கோர்டபா மீன் வெட்டும் கத்தியினால் திறமையாக மீனைச் சுத்தம் செய்து வெட்டி, விரலளவு சிறு துண்டங்களாக்கி வெய்யிலில் காயவைத்தார். இருவரும் மீன்களையே மாற்றி மாற்றித் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆல்வரெங்கா பச்சைமீனையும் காய்ந்த மீனையும் சேர்த்தே விழுங்கத் தொடங்கினார். வித்தியாசம் தெரியாத அளவிற்கு அவருக்குச் சுவையே தெரியாமல் மரத்துப்போய்விட்டது, அதனால் சுவை பற்றி அவர் கவலைப்படவில்லை. மிகவும் அதிர்ஷ்டம் இருந்தால் அவர்களால் ஆமைகளைப் பிடிக்க முடிந்தது. சிலசமயம் தானே பறந்து வந்து படகில் விழும் பறக்கும் மீன்களும், அவர்களுக்குக் கிடைத்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தற்காலக் கல்வி முறை -9

kalvimurai12
மாணவர்கள் திறன் வளர்த்தலில் பாடத்திட்டம் பெரும் பங்காற்றுகிறது.
மெக்காலே கல்விமுறைதான் தற்போதைய குறைபாட்டிற்குக் காரணம் என்று கூறிக்கொண்டிருக்காமல், இந்தியக் குழந்தைகளுக்கேற்ற கல்விமுறையை இந்தியாவின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டங்களைக் கொண்ட கல்விமுறையை உருவாக்க வேண்டும்.
புரிந்துகொண்டு படிக்கும் கல்வி முறையும், புரிந்து கொண்டு படைப்புகளை உருவாக்கும் கல்விமுறையும் தற்காலத் தேவையாக உள்ளது.
அறநூல்களைப் பயிலுவதும், பாடமாக வைப்பதும், பயன்படுத்துவதும் இன்று குறைந்துவிட்டது. வாழ்க்கையின் நிலைகெடும் ஒவ்வொரு நிலையிலும், தக்க அறிவுரை அளித்துக் காக்கக்கூடியவை அற நூல்கள். இவை பழைய அனுபவங்களின் சாரங்கள். இவற்றை மறக்காமல் பயின்று போற்ற வேண்டும், மாணவர்களுக்குக் குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.

kalvimurai8
மாணவர் கற்கும் பாடங்கள் அறிவு சார்ந்து மாணவனின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவதாக அமையவேண்டும். அறிவு நுட்பமுடையவனாக ஒவ்வொரு மாணவரும் உருவாகவேண்டுமெனில் சிறந்த ஆளுமைக்கான பண்புகள், மனவெழுச்சியைக் கட்டுப்படுத்துதல் முதலானவற்றைத் தரக்கூடிய பாடத்திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். அறநெறிப் பாடங்களே தன்னம்பிக்கை, சுய-மதிப்பு, சுய முன்னேற்றம், ஒழுக்க வளர்ச்சி போன்ற பண்புகளை மாணவர்களிடம் தரக்கூடியவை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.