Wednesday 9 December 2015

சான் ஓசேயில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு


maaveerar6

“நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.” – வேலுப்பிள்ளை பிரபாகரன்
உங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்.. – இராஜ் சுவர்ணன்
உலகம் முழுதும் தத்தம் நாட்டு விடுதலைக்காகப் போராடி மரணித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். அமெரிக்காவில் மே மாதத்தில் அந்த அஞ்சலி நிகழ்வு நடைபெறும். இங்கிலாந்து, ஆத்திரேலியா, கனடா போன்ற பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளில் நவம்பர் 11-ம் நாள் இறந்த வீரர்களுக்கு (The Glorious Dead) அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தமிழீழ மக்களுக்கும், உலகெமெங்கும் பரந்துபட்டு வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் நவம்பர் 27-ம் நாளில் ஈழமண்ணிற்காக தம் இன்னுயிரை ஈன்ற மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செய்யப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது. அந்நாள் செ. சத்தியநாதன் எனும் லெப்டினெண்ட் சங்கர் தம் உயிரை தமிழ்மண்ணிற்காக தியாகம் செய்த நாள்.

1982-ம் ஆண்டு அக்தோபர் திங்கள் அதிகாலையில் ஒரு இளைஞன் முற்றுகையிட்டிருந்த சிங்கள வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டு ஓடுகிறான், அப்பொழுது சிங்கள் காடையனின் குண்டொன்று அவனது வயிற்றை கிழிக்க, அங்கிருந்த தோழர்கள் அவனைக் காப்பாற்றி மருத்துவ சிகிச்சைக்காக தாய்த்தமிழகத்திற்கு அழைத்து வருகின்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கண் கலங்கி நின்ற தலைவரின் முன்னிலையிலும், தோழர்களின் முன்னிலையிலும் 1982 நவம்பர் 27-ம் நாள் மாலை 6:05 மணியளவில் லெப்டனெண்ட் சங்கர் நம்மை விட்டு பிரிகிறான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்களப்பலி இவன். இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூறப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment