Tuesday, 14 February 2017

தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட தமிழிலக்கியங்களின் வழியாக மறுக்க முடியாத சான்றுகளுடன் தெரியவருவது தமிழரின் தொன்மை. இருந்தும் தாம் தமிழர் என்ற  மேலான ஒற்றுமையைப் புறந்தள்ளிவிடுவது தமிழரின் பண்பாக இருக்கிறது.  இன்றும் தமிழர் தங்கள் அடையாளங்களைப் பிறப்புடன் ஒட்டிக்கொண்டுவிடும் சாதிப்பிரிவினைகளில் தேடிப் பிரிவினை பேசி வருவதும் கலவரங்களில் ஈடுபடுவதும் மடமையன்றி வேறில்லை. ஆய்வாளர்கள் பலர் சாதிகள் என்ற கருத்தாக்கம் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருவதா அல்லது வெளியில் இருந்து தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவிய ஒரு கருத்தாக்கமா என்றும்; அவ்வாறு சாதி என்ற கருத்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டிருந்தால் அது நிகழ்ந்தது  எந்தக் காலமாக இருந்திருக்கக் கூடும் என்றும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் அயல் நாட்டுத் தமிழறிஞரும் அடங்குவர்.

Siragu tamilagaththin saadhi2


இந்த ஆய்வாளர்கள் தமிழின் தொல் இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அக்காலச் சமூக அமைப்பை ஆராய முற்படுகிறார்கள். காலத்தால் முற்பட்டு நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் பாட்டும் தொகையும் என்று அறியப்படும் பத்துப்பாட்டு மற்றும்  எட்டுத்தொகை நூல்களை உள்ளடக்கிய சங்க இலக்கியங்கள் ஆகும். இந்நூல்களின் தொன்மை காரணமாக ஆய்வாளர் சங்க இலக்கியங்களில் அக்காலத் தமிழ்ச் சமூகம் சாதியைக் கடைப்பிடித்துள்ளதா என்று ஆராய்வது வழக்கம். சங்கஇலக்கிய காலம் என்பது எக்காலம் என்று வரையறுப்பதில் பல்வேறு கோணங்கள் இருப்பினும் பொது ஆண்டுகளுக்கு முன்னர் (பொ.மு. அல்லது கி.மு.) 300 ஆண்டுகளும் பொது ஆண்டுகளுக்குப் பின்னர் (பொ.பி. அல்லது கி.பி.) 300 ஆண்டுகளும் சங்ககாலம் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவது உண்டு. சங்க இலக்கிய நூல்களில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினர், உயர்வு தாழ்வுகள் உள்ள மக்கள் பிரிவினரைக் குறிக்கும் சொற்களும் கருத்தாக்கங்களும் உள்ளனவா என ஆராயப்படுவதுடன் சாதியின் தொடர்ச்சியாக, தூய்மையின்மை அல்லது துப்புரவின்மை ஆகிய காரணங்களால் “தீட்டு”  “விழுப்பு” என்பதன் அடிப்படையில் ஒரு சில பிரிவினரைத் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதும்  “தீண்டாமை” என்பது கடைப்பிடிக்கப்பட்டதா என்றும் ஆராயப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 12 February 2017

நெஞ்சு பொறுக்குதில்லையே.!


Siragu-nandhini1

இப்போது தமிழகம் சந்திக்கும் பல்வேறு அரசியல் சூழல்களில், இதுவும்கடந்து போகும் என்று நம்மால் எளிதாகக் கடக்க முடியாத ஒரு கொடுமையான மனவேதனை ஒன்று இருக்கிறதென்றால், அது குழந்தை ஹாசினியின் மன்னிக்கவே முடியாத படுகொலை.!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமி நந்தினியின் கொடூர படுகொலை நடந்த ஒருமாத காலத்திற்குள், மீண்டும் கடந்த வாரத்தில், ஒரு ஏழு வயது குழந்தைக்கு இந்தக் கொடுமை நடந்தேறி இருக்கிறது என்பது, நம் சமூகம் எப்படி புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான சான்றாக இருக்கிறது. பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு செய்யப்படவில்லை என்றால், நாம் எவ்வளவுதான் முன்னேறினாலும் அது முன்னேற்றமாகாது… வாழ்வியலில் பின்தங்கி தான் இருக்கிறோமென்று பொருள்.!


நம்நாட்டில், பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் சீண்டல்கள், வன்கொடுமை, பலாத்காரங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை. பெண்களைப் பற்றி சரியான புரிதலை ஆண் பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க தவறி விட்டோமென்று தான் தோன்றுகிறது. முதல் ஆசிரியர்களாக பெற்றோர்கள் தான் இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 7 February 2017

கவிதைச் சோலை (தமிழாய் எழுவோம்!, தமிழால் பிறவிப் பலன்)

தமிழாய் எழுவோம்!

- ராஜ் குணநாயகம்

Siragu Jallikattu_struggle8

எங்கள் சுதந்திர போராட்டம்
மௌனிக்கப்பட்டது
முள்ளிவாய்க்காலிலே…
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்
நசுக்கப்பட்டது
மெரீனாவிலே….
மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும்
எட்டப்பன்களே

நம் தமிழ் இனத்தின் சாபக்கேடு!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25572

Monday, 6 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11


siragu-panjathandhira-kadhaigal

நான்காவது யுக்தி
அர்த்தநாசம் அல்லது லப்தஹானி (அதாவது, பொருளின் அழிவு, பெற்ற பேறின் அழிவு)
சோமசர்மா, அரசகுமாரர்களுக்கு, நான்காவது தந்திர உபாயத்தைக் கற்பிக்க முனைந்தான். “துன்பம் வந்தபோது, அறிவு குறையாமல் இருப்பவன், குரங்கு முதலையிடமிருந்து விடுபட்டது போலப் பெரிய துன்பத்திலிருந்தும் மீளுவான்” என்று ஒரு கதையைச் சொல்லலானான்.
அரசகுமாரர்கள்: அது எப்படி ஐயா, சொல்லுங்கள்.
(குரங்கும் முதலையும் கதை)
pancha thandhira kadhaigal2


ஆசிரியன்: ஓர் ஆற்றங்கரையில் நாவல் மரத்தின்மேல் சுமுகன் என்னும் ஒரு குரங்கு வசித்து வந்தது. அப்போது ஒரு முதலை பசியோடு மரத்தின் அடிப்பகுதிக்கு வந்தது. “நீ என் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கிறாய். ஆகவே உன் பசியைப் போக்கச் சில கனிகளைத் தருகிறேன்” என்று நாவற் பழங்களைக் கொய்துபோட்டது குரங்கு. அது முதலாக தினந்தோறும் முதலை அந்த இடத்திற்கு வந்து சில கனிகளைச் சாப்பிடுவது வழக்கமாயிற்று. இரண்டும் பேசிக்கொண்டு அந்நியோன்யமாக இருந்தன. ஒருநாள், முதலை, சில நாவற் பழங்களைக் கொண்டு சென்று தன் மனையாளாகிய முதலையிடம் கொடுத்தது. அது மிக இனிப்பாக இருப்பதைக் கண்ட பெண்முதலை, தன் கணவனிடம், “இதனை நீ எங்கிருந்து கொண்டு வந்தாய்?” என்று கேட்டது. “சுமுகன் என்ற குரங்கு என் நண்பன். அவன் தினந்தோறும் எனக்குச் சில கனிகள் அளிப்பது வழக்கம், இன்று தின்றதுபோக மிகுந்ததை உனக்குக் கொண்டுவந்தேன்” என்றது முதலை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 5 February 2017

புதுமைப்பித்தனின் கவிதைகள்


Siragu pudhumai piththan1

தமிழ்ச் சிறுகதை உலகில் புதுப்புது முயற்சிகளையும் புதுமைகளையும் கையாண்ட சொ.விருத்தாசலம் எனும் வித்தகரை தமிழ் இலக்கிய உலகம் புதுமைப்பித்தன் என அழைத்துக் கொண்டது, பெருமை கொண்டது.
மணிக்கொடி இதழில் எழுதியவர்கள் பலர் மேலை நாட்டு இலக்கிய அறிவினை கற்று அவற்றினை தமிழுக்குப் பழக்கிக் கொண்டு தங்களது முயற்சிகளை மேற்கொண்டனர். இக்குழுவினர் செய்த சோதனை முயற்சிகளை அக்கால இலக்கிய மரபியலாளர்கள் ஏற்கவில்லை என்பதும் அவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் “இம்முறை தமிழுக்கு ஏற்றதல்ல, இவை இலக்கண இலக்கிய மரபுகளை மீறியவை” என பல கடுமையான விமர்சனங்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

புதுமைப்பித்தன் கதைகள் பலவிதமான புதுமை நோக்கும் பார்வையும் கொண்டனவாக விளங்குவன. அவற்றிற்கு உதாரனமாக “செல்லம்மாள்” மற்றும் “பொன்னகரம்” ஆகிய கதைகளே சான்றாக விளங்குகின்றன என்பதை தமிழ் இலக்கிய உலகினர் யாவரும் அறிந்ததே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 2 February 2017

இது தொடக்கமாகவே இருக்கட்டும்! (கவிதை)


Siragu Jallikattu_struggle3

ஏறு தழுவுதல்
தரணியாண்ட தமிழனின்
பண்டைய பாரம்பரிய வீர விளையாட்டு
தமிழும்
கலை, கலாச்சாரம்
பாரம்பரியம், பண்பாடு
எங்கள் உயிர் மூச்சு!
ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள்
பீட்டாவோ
வீட்டோவோ

யார் இவர்கள்?
எங்கள் உயிர் மூச்சை
நிறுத்த சொல்ல………

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25397

Wednesday, 1 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10


siragu-panjathandhira-kadhaigal

அரிமர்த்தனனிடம் பிரகாரநாசன் என்னும் மந்திரி சொல்கிறது:
“ஒரு வனத்தில் ஒரு வேடன், கையில் புறாக்கூடும், கண்ணியும், தடி முதலிய வேட்டைக் கருவிகளும் எடுத்துக்கொண்டு அலைந்தான். அப்போது பெருமழையும் காற்றும் வந்து பிரளயம் போல வீசலாயின. வேடன் பயந்துபோய் ஒரு மரத்தடியில் நின்றான். “கடவுளே, இந்த வேளையில் என்னைக் காப்பாற்றக்கூடியவர் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று வேண்டினான். அந்தச் சமயத்தில், அந்த மரத்தின் மேல் வசிக்கும் ஒரு ஆண்புறா, தனது பெட்டை வரவில்லை என்று மிகவும் துக்கமாக இருந்தது. “இன்றைக்கு என் மனைவி வரவில்லையே, அவளை யாரேனும் பிடித்துக் கொண்டார்களோ தெரியவில்லையே. அவள் இல்லாத இந்த வீடு எனக்குச் சுடுகாட்டைப் போலத் தோன்றுகிறது. அவள் கற்பும் கணவன் இன்புறக்கூடிய செயலும் உள்ளவள். அப்படிப்பட்டவளை அடைந்த நான் பாக்கியவான்” என்று புலம்பிக்கொண்டிருந்தது.

அப்போது அந்த வேடனின் புறாக்கூண்டிலிருந்த பெண் புறா, மிகவும் துக்கத்துடன்: “முன்பிறப்பில் தீவினை செய்தவர்களுக்குப் பலவகைப்பட்ட துன்பங்களும் சிறையும் நோயும் வந்து நேர்கின்றன. அது ஒருபுறம் இருக்க, எந்தச் சமயத்தில் எது நேருமோ அதை யாராலும் தடுக்க ஆவதில்லை” என்றது. பிறகு, மரத்தின் மேலிருந்த தன் கணவனை நோக்கி, “அன்புள்ளவரே, நமது வீட்டுக்கு வந்த விருந்தாளியாகிய இந்த வேடனுக்கு உதவி செய்வது நமது கடமை. குளிர் முதலியவற்றை நீக்கி விருந்தோம்ப வேண்டும். இவன் நம் மனைவியைப்பிடித்துவிட்டானே என்று துக்கம் கொள்ளாமல் இவனுக்கு உதவுங்கள்” என்றது. பெண்புறா கூறியதைக் கேட்ட

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.