Wednesday 1 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10


siragu-panjathandhira-kadhaigal

அரிமர்த்தனனிடம் பிரகாரநாசன் என்னும் மந்திரி சொல்கிறது:
“ஒரு வனத்தில் ஒரு வேடன், கையில் புறாக்கூடும், கண்ணியும், தடி முதலிய வேட்டைக் கருவிகளும் எடுத்துக்கொண்டு அலைந்தான். அப்போது பெருமழையும் காற்றும் வந்து பிரளயம் போல வீசலாயின. வேடன் பயந்துபோய் ஒரு மரத்தடியில் நின்றான். “கடவுளே, இந்த வேளையில் என்னைக் காப்பாற்றக்கூடியவர் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று வேண்டினான். அந்தச் சமயத்தில், அந்த மரத்தின் மேல் வசிக்கும் ஒரு ஆண்புறா, தனது பெட்டை வரவில்லை என்று மிகவும் துக்கமாக இருந்தது. “இன்றைக்கு என் மனைவி வரவில்லையே, அவளை யாரேனும் பிடித்துக் கொண்டார்களோ தெரியவில்லையே. அவள் இல்லாத இந்த வீடு எனக்குச் சுடுகாட்டைப் போலத் தோன்றுகிறது. அவள் கற்பும் கணவன் இன்புறக்கூடிய செயலும் உள்ளவள். அப்படிப்பட்டவளை அடைந்த நான் பாக்கியவான்” என்று புலம்பிக்கொண்டிருந்தது.

அப்போது அந்த வேடனின் புறாக்கூண்டிலிருந்த பெண் புறா, மிகவும் துக்கத்துடன்: “முன்பிறப்பில் தீவினை செய்தவர்களுக்குப் பலவகைப்பட்ட துன்பங்களும் சிறையும் நோயும் வந்து நேர்கின்றன. அது ஒருபுறம் இருக்க, எந்தச் சமயத்தில் எது நேருமோ அதை யாராலும் தடுக்க ஆவதில்லை” என்றது. பிறகு, மரத்தின் மேலிருந்த தன் கணவனை நோக்கி, “அன்புள்ளவரே, நமது வீட்டுக்கு வந்த விருந்தாளியாகிய இந்த வேடனுக்கு உதவி செய்வது நமது கடமை. குளிர் முதலியவற்றை நீக்கி விருந்தோம்ப வேண்டும். இவன் நம் மனைவியைப்பிடித்துவிட்டானே என்று துக்கம் கொள்ளாமல் இவனுக்கு உதவுங்கள்” என்றது. பெண்புறா கூறியதைக் கேட்ட

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment