Sunday 5 February 2017

புதுமைப்பித்தனின் கவிதைகள்


Siragu pudhumai piththan1

தமிழ்ச் சிறுகதை உலகில் புதுப்புது முயற்சிகளையும் புதுமைகளையும் கையாண்ட சொ.விருத்தாசலம் எனும் வித்தகரை தமிழ் இலக்கிய உலகம் புதுமைப்பித்தன் என அழைத்துக் கொண்டது, பெருமை கொண்டது.
மணிக்கொடி இதழில் எழுதியவர்கள் பலர் மேலை நாட்டு இலக்கிய அறிவினை கற்று அவற்றினை தமிழுக்குப் பழக்கிக் கொண்டு தங்களது முயற்சிகளை மேற்கொண்டனர். இக்குழுவினர் செய்த சோதனை முயற்சிகளை அக்கால இலக்கிய மரபியலாளர்கள் ஏற்கவில்லை என்பதும் அவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் “இம்முறை தமிழுக்கு ஏற்றதல்ல, இவை இலக்கண இலக்கிய மரபுகளை மீறியவை” என பல கடுமையான விமர்சனங்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

புதுமைப்பித்தன் கதைகள் பலவிதமான புதுமை நோக்கும் பார்வையும் கொண்டனவாக விளங்குவன. அவற்றிற்கு உதாரனமாக “செல்லம்மாள்” மற்றும் “பொன்னகரம்” ஆகிய கதைகளே சான்றாக விளங்குகின்றன என்பதை தமிழ் இலக்கிய உலகினர் யாவரும் அறிந்ததே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment