Tuesday 14 February 2017

தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட தமிழிலக்கியங்களின் வழியாக மறுக்க முடியாத சான்றுகளுடன் தெரியவருவது தமிழரின் தொன்மை. இருந்தும் தாம் தமிழர் என்ற  மேலான ஒற்றுமையைப் புறந்தள்ளிவிடுவது தமிழரின் பண்பாக இருக்கிறது.  இன்றும் தமிழர் தங்கள் அடையாளங்களைப் பிறப்புடன் ஒட்டிக்கொண்டுவிடும் சாதிப்பிரிவினைகளில் தேடிப் பிரிவினை பேசி வருவதும் கலவரங்களில் ஈடுபடுவதும் மடமையன்றி வேறில்லை. ஆய்வாளர்கள் பலர் சாதிகள் என்ற கருத்தாக்கம் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருவதா அல்லது வெளியில் இருந்து தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவிய ஒரு கருத்தாக்கமா என்றும்; அவ்வாறு சாதி என்ற கருத்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டிருந்தால் அது நிகழ்ந்தது  எந்தக் காலமாக இருந்திருக்கக் கூடும் என்றும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் அயல் நாட்டுத் தமிழறிஞரும் அடங்குவர்.

Siragu tamilagaththin saadhi2


இந்த ஆய்வாளர்கள் தமிழின் தொல் இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அக்காலச் சமூக அமைப்பை ஆராய முற்படுகிறார்கள். காலத்தால் முற்பட்டு நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் பாட்டும் தொகையும் என்று அறியப்படும் பத்துப்பாட்டு மற்றும்  எட்டுத்தொகை நூல்களை உள்ளடக்கிய சங்க இலக்கியங்கள் ஆகும். இந்நூல்களின் தொன்மை காரணமாக ஆய்வாளர் சங்க இலக்கியங்களில் அக்காலத் தமிழ்ச் சமூகம் சாதியைக் கடைப்பிடித்துள்ளதா என்று ஆராய்வது வழக்கம். சங்கஇலக்கிய காலம் என்பது எக்காலம் என்று வரையறுப்பதில் பல்வேறு கோணங்கள் இருப்பினும் பொது ஆண்டுகளுக்கு முன்னர் (பொ.மு. அல்லது கி.மு.) 300 ஆண்டுகளும் பொது ஆண்டுகளுக்குப் பின்னர் (பொ.பி. அல்லது கி.பி.) 300 ஆண்டுகளும் சங்ககாலம் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவது உண்டு. சங்க இலக்கிய நூல்களில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினர், உயர்வு தாழ்வுகள் உள்ள மக்கள் பிரிவினரைக் குறிக்கும் சொற்களும் கருத்தாக்கங்களும் உள்ளனவா என ஆராயப்படுவதுடன் சாதியின் தொடர்ச்சியாக, தூய்மையின்மை அல்லது துப்புரவின்மை ஆகிய காரணங்களால் “தீட்டு”  “விழுப்பு” என்பதன் அடிப்படையில் ஒரு சில பிரிவினரைத் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதும்  “தீண்டாமை” என்பது கடைப்பிடிக்கப்பட்டதா என்றும் ஆராயப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment