Monday 6 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11


siragu-panjathandhira-kadhaigal

நான்காவது யுக்தி
அர்த்தநாசம் அல்லது லப்தஹானி (அதாவது, பொருளின் அழிவு, பெற்ற பேறின் அழிவு)
சோமசர்மா, அரசகுமாரர்களுக்கு, நான்காவது தந்திர உபாயத்தைக் கற்பிக்க முனைந்தான். “துன்பம் வந்தபோது, அறிவு குறையாமல் இருப்பவன், குரங்கு முதலையிடமிருந்து விடுபட்டது போலப் பெரிய துன்பத்திலிருந்தும் மீளுவான்” என்று ஒரு கதையைச் சொல்லலானான்.
அரசகுமாரர்கள்: அது எப்படி ஐயா, சொல்லுங்கள்.
(குரங்கும் முதலையும் கதை)
pancha thandhira kadhaigal2


ஆசிரியன்: ஓர் ஆற்றங்கரையில் நாவல் மரத்தின்மேல் சுமுகன் என்னும் ஒரு குரங்கு வசித்து வந்தது. அப்போது ஒரு முதலை பசியோடு மரத்தின் அடிப்பகுதிக்கு வந்தது. “நீ என் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கிறாய். ஆகவே உன் பசியைப் போக்கச் சில கனிகளைத் தருகிறேன்” என்று நாவற் பழங்களைக் கொய்துபோட்டது குரங்கு. அது முதலாக தினந்தோறும் முதலை அந்த இடத்திற்கு வந்து சில கனிகளைச் சாப்பிடுவது வழக்கமாயிற்று. இரண்டும் பேசிக்கொண்டு அந்நியோன்யமாக இருந்தன. ஒருநாள், முதலை, சில நாவற் பழங்களைக் கொண்டு சென்று தன் மனையாளாகிய முதலையிடம் கொடுத்தது. அது மிக இனிப்பாக இருப்பதைக் கண்ட பெண்முதலை, தன் கணவனிடம், “இதனை நீ எங்கிருந்து கொண்டு வந்தாய்?” என்று கேட்டது. “சுமுகன் என்ற குரங்கு என் நண்பன். அவன் தினந்தோறும் எனக்குச் சில கனிகள் அளிப்பது வழக்கம், இன்று தின்றதுபோக மிகுந்ததை உனக்குக் கொண்டுவந்தேன்” என்றது முதலை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment