Wednesday, 26 April 2017

தமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்


05_D_Jayakanthan_vg

எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியாத உயரங்களை, தனித்தன்மைகளை, புதுமைகளை  வல்லமைகளை அவர் செய்தார் அல்லது அவரின் எழுத்துகள் செய்தன.


சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. சிலப்பதிகாரக் கதையின் தொடர்ச்சி மணிமேகலைக் காப்பியம். சிலப்பதிகாரக் கதையில் கோவலன், கண்ணகி ஆகியோர் வாழ்நாளின் இறுதியைத் தொட்டுவிடுகின்றனர். முக்கியப் பாத்திரங்களுள் ஒன்றான மாதவி மட்டும் என்ன ஆனாள் என்பது தெரியாமல் சிலப்பதிகாரம் முற்றுப் பெற்றுவிடுகிறது. கோவலன், கண்ணகி இறப்பிற்குப் பின்னான மாதவியின் வாழ்க்கையை விரிக்க முயன்று மணிமேகலையின் கதையை வளர்க்கிறது மணிமேகலைக் காப்பியம். ஒரு பாத்திரம் அழிந்து கரைந்து போகும்வரை படைப்பாளனால் அப்பாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81/

Tuesday, 25 April 2017

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


ஏப்ரல் மாதம் இரு பெரும் கவிஞர்களின் பிறந்த நாள். ஆசிரியருக்கும், மாணவருக்கும் ஒரே மாதத்தில் பிறந்த நாள்!! அவர்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் அவரின் மாணவராகிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்!

Siragu-pattukottai-kalyanasundaram2

இருவரும் புரட்சிகரக் கருத்துகளை இந்தத் தமிழ் மண்ணில் தங்கள் கவிதைகள் மூலம் ஆழமாக ஊன்றிவிட்டுச் சென்றவர்கள். திராவிட இயக்க கருத்துகளின் மறுவடிவமே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகள் என்றால் அது மிகையன்று. அதேப்போல பொதுவுடமை தத்துவங்களின் ஊற்றாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள் இருந்தது என்றால் அது மிகையன்று.


பட்டுக்கோட்டை அவர்கள் புரட்சிக்கவிஞர் அவர்களின் மாணவர். 1952 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சென்று பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 23 April 2017

இந்தித்திணிப்பு ஒரு சர்வாதிகாரம்


Siragu hindhi1

இந்தியாவின் சிறப்பே, அதனுடைய பன்முகத்தன்மை தான். அதனை அழிக்கும் வேலையில், பாசக அரசு மும்முரமாக இறங்கி இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. மத்திய அரசு மறுபடியும் எடுத்திருக்கும் இந்த இந்தித்திணிப்பு மீண்டும் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திடும் என்பதே உண்மை. நாடு முழுவதும் இந்தியை கட்டாயமாக்குவோம் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறது மத்திய பாசக அரசு. 1968 -ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது மதவாத அரசு.


நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ மொழிகள் பற்றி பரிந்துரைகள் அளிப்பதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த காங்கிரசு ஆட்சியில் அமைக்கப்பட்டது என்றாலும், தற்போது 117 பரிந்துரைகளை தற்போது கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை குடியரசுத் தலைவர் நிராகரித்து இருக்கிறார். சிலவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 19 April 2017

எளியோர் இனமே எழுக! (கவிதை)


Siragu-tamilan


வலியோர் கொடுஞ்செயல் அறவே ஒழிந்திட
எளியோர் இனமே எழுக!
வலியார் கரங்குவியு மதிகார மதனை
உடைத்திட வீறுடன் எழுக!
எளியோர் எளிமை தனைஎடை போட்டு
ஏய்க்கும் அதிகார வர்க்க
அரசியல் நிலைமை அறவே ஒழிந்திட
எளியோர் இனமே எழுக!

சனநாயக போர்வையில் ஏதேச் சதிகாரம்
புரியும் அரசினை எதிர்த்து
சனநாயக முறையினை மீட்கும் “மக்கள்

புரட்சியை” நோக்கி எழுக!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://siragu.com/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday, 18 April 2017

புரிதல் (சிறுகதை)


Siragu-mannichchidunga-article-fi.jpg

நேற்று இரவிலிருந்தே அகிலனுக்கு மனம் சரியில்லை, மனைவி செல்வி மருத்துவரிடம் சென்று வந்தவுடன் சொன்ன விசயம் தான் காரணம்,
‘ஏங்க, நான் டாக்டரிடம் போய் வந்தேன், உங்களை வந்து பாக்க சொன்னாங்க..’
‘ ஏன் … என்னாச்சு..இப்படி தலை கால் புரியாம சொல்லாதே, விவரமா சொல்லு’
‘ ஒண்ணுமில்லையாம், கொஞ்சம் பலகீனமாக இருக்கேனாம். இரும்புச்சத்து குறைவா இருக்காம், டானிக், மாத்திரை எல்லாம் கொடுத்திருக்காங்க… அவ்வளவு தான், நான் நேத்தே உங்களை கூப்பிட்டேன்.. நீங்க ஆபிசல வேலை அதிகம், நீயே போயிட்டு வந்துடுனு சொன்னீங்க, டாக்டர் என்னான்னா, தனியாவா வந்தீங்க… யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாமே, சரி.. நாளை நீங்கள் வர வேண்டாம், உங்கள் கணவரை வந்து என்னைப் பாக்கச் சொல்லுங்க.. அப்படினு சொன்னாங்க..! ‘

‘ ஓ.. ஏன் அப்படி சொன்னாங்க… நாளை காலையில போலாமா’

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 17 April 2017

காலம் கனியும்!


siragu-image1

எந்த ஒரு செயலாக இருந்தாலும் சரி, நாம் அதில் எதிர்பார்ப்பது வெற்றி ஒன்றை மட்டும்தான். புதிதாகத் துவங்கிய தொழிலாக இருக்கட்டும், முதற் முயற்சியிலேயே சென்ற வேலைக்கான நேர்முகத் தேர்வாக இருக்கட்டும், பணியில் முன்னேற்றம், இப்படி எல்லாவிதமான செயல்களிலும் மனம் விரும்புவது வெற்றியைத்தான். வெற்றி கிடைக்கவேண்டும் என்பதே எல்லாருடைய எண்ணமும் அதில் தவறேதும் இல்லை, ஆனால் எனக்கு இன்றிரவே வேண்டும்! அடுத்த நொடியே வேண்டும்! என்று எண்ணுவது தான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 16 April 2017

ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் தமிழருக்கும் தொடர்புண்டா?

தொல்லியல் மற்றும் மானுடவியல் துறையினர் குறிக்கும் வரலாற்றுக் காலம் என்பது, பொதுவாக இறுதியான உறைபனிக் காலத்தின் (last glacial period) முடிவான சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ள காலம். இக்காலத்தில் இருந்து நமக்கு காலக்குறிப்புகளைக் கொண்டு கணக்கிட்டு, மனித வரலாற்றைக் கட்டமைக்க உதவும் காலக்குறிப்புத் தடயங்களை ஏதோ ஒருவகையில் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டு வாழ்ந்தவர்களைப்  பற்றி நாம் அறிவதற்கு,  தங்கள் வாழ்வின் எச்சங்களாக அவர்கள் விட்டுச் சென்றவையாக அகழாய்வின் போது கிடைக்கும் சான்றுகளை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating); வெப்பஒளிர்வு காலக்கணிப்பு (thermoluminescence dating) போன்ற அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி காலத்தைக் கணிக்க வேண்டியுள்ளது. தொல்லியல்  தடயங்களையும், ஆய்வின் முடிவாகக் கிடைக்கும் காலத்தையும் இணைத்து அவர்களது வாழக்கைமுறையைக் குறித்து நாம் அறிய முயல்கிறோம்.

மனித வரலாறு அறிவதில் மரபணுவியலின் பங்கு:

Close View of a DNA Strand


தொல்லியல் அகழாய்வுத் துறையினர் போலவே உயிரியல் ஆய்வாளர்களும் மரபணு ஆய்வு போன்ற அறிவியல் ஆய்வுகள் வழியாக வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தினர் குறித்த தகவல்களை அறியத் தருகிறார்கள்.  இத்தகைய மரபணு ஆய்வுகளில், ஆணின் Y – குரோமோசோம் (chromosome) டி.என்.ஏ. வழியாகக் கண்டறியப்படுவது ‘தந்தை வழி மரபு’ (patrilineal line studied by Y – DNA) என அறியப்படுகிறது. பெண்கள் வழியில் மூதாதையர் குறித்து அறிய ‘மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.’ (mitochondrial DNA/mtDNA) ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.