Thursday, 17 May 2018

“ஆசிபா” (கவிதை)


siragu baby1


குருதிக் குழம்பில்
உயிர் உறைந்து போன
கருவறை ஓவியம்
பால் மனம் மாறா
சிறு முத்து,
மதம் எனின்
என்னென்றே அறியாத
வெண்மனச் சிறுமி ;
மதம் பிடித்த வேழம்
காடுகளைக் கடந்து
ஊருக்குள் ஓடிவர
கண்டதுண்டு
ஊருக்குள் ஒளிந்திருக்கும்
மதம் கொண்ட மனங்கள்

முனிகளும் ரிஷிகளும்
கடவுளர் அவதாரங்களும்
பெண்களை காமப்
பிண்டங்களாய் கருதியே
சிதைத்த கதைகளை
படிப்போன் நெஞ்சு
குறள் நெறியிலா
நடைபோடும்?
கோயில் இருக்கின்ற ஊரில்
குடியிருக்க கூடாதென
சட்டம் வரின்

குற்றங்கள் குறையலாமோ!?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

வ.உ.சி.யும் சமூக நீதியும்


siragu voc1
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று வ.உ.சிதம்பரனாரைப் பற்றிக் கல்விக் கூடங்களில் நமக்குப் பாடம் சொல்லித் தந்து இருக்கிறார்கள். அவர் ஒரு தொழிற்சங்கவாதி என்று பள்ளிகளில் சொல்லித் தருவது இல்லை. ஆனால் பொதுவுடைமை இயக்கங்களின் பரப்புரைகள் மூலம் அச்செய்தி ஓரளவிற்குத் தெரிகிறது. ஆனால் அவர் சமூக நீதிக்காக விட்டுக் கொடுக்காத போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற செய்தி அடர்ந்த இருளுக்குள் திட்டமிட்டே மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்திய வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கையில் மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பிற தலைவர்களின் தலைமையில் சமூக நீதிப் போராட்டங்களும் நடந்து கொண்டு தான் இருந்தன. அப்படிப்பட்ட போராட்டங்களில் ஒன்று தான் சேலம் நகரில் 5.11.1927 அன்று வ.உ.சி. தலைமையில் நடந்த ஒரு மாநாடு. இம்மாநாட்டில் தலைமை உரையை ஆற்றுகையில் நாட்டு மக்களிடையே பிளவுகளும் பகைமைகளும் இருப்பதற்குக் காரணமே கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாமையே (அதாவது பார்ப்பனர்கள் மேல் நிலை வேலைகளில் கொடூரமான அளவில் நிரம்பி வழிவது தான்) என்று பின் வரும் சொற்களில் வ.உ.சி. தெளிவாக விளக்குகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 8 May 2018

பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லா ஆட்சி, தற்போதைய பா.ச.க ஆட்சி.!


siragu baby3
கடந்த காலங்களில், நாம் சொல்லிக்கொண்டிருந்தது என்னவென்றால், பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்திக்கொண்டும் இருந்தோம். ஆனால், தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக அல்லவா சென்று கொண்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பது போக, இந்த பா.ச.க ஆட்சி, பெண்குழந்தைகளை பாதுகாப்பது என்பதை கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறது என்பதுதானே நிதர்சனமான உண்மை.

கடந்த மாதத்தில், உத்திர பிரதேச மாநிலத்தில், ஒரு 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறாள், அதற்கு காரணமானவர், அந்த மாநில அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் ஒரு எம்.எல்.ஏ என்பது நம் எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதிலும், தங்களுக்கு நியாயம் வேண்டி போராடிய அந்த குடும்பத்தைத் தாக்கி, அந்தப் பெண்ணின் தந்தையை விசாரணை என்ற பெயரில் கொன்றிருக்கிறார்கள் என்ற செய்தி நம்மை அதிக வேதனைக்கு உள்ளாகியது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள், காசுமீரில், ஆசிபா என்ற 8 வயது இசுலாமிய ஆடு, மாடு மேய்த்து பிழைக்கும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, கோவிலுக்குள் அடைத்து வைத்து, 8 நாட்கள் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருக்கிறாள் என்ற செய்தியை நம் எல்லோரையும் உலுக்கி எடுத்துவிட்டது. அது மட்டுமல்ல, இந்த வெறி செயலுக்கு பின்னாலும், பா.ச.க பிரமுகர்கள் இருக்கின்றனர். அங்கு குடியிருக்கும் இசுலாமிய குடும்பங்களை வெளியிருவதற்காக, செய்யப்பட்டசெயல் என்று சொல்லப்படுகிறது. மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, உணவின்றி, நீரின்றி, 8 நாட்கள் 8 பேர்களால், (தேட வந்த காவல்துறையைச் சேர்ந்த நபர் உட்பட) பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, காலை வளைத்து, உடைத்து, விலா எலும்பை உடைத்து, தலையில் கல்லால் அடித்து கொன்றிருக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 4 May 2018

தொகுப்பு கவிதை (நாடோடியின் ஏக்கம், ஐக்கூவும் தமிழ்வார்ப்பே)



நாடோடியின் ஏக்கம்

                                    -இல.பிரகாசம்
siragu naadodi1
நெஞ்சமோ ஏக்கம் கொள்ளுதடி –என்
கண்ணிலோ துன்பம் கசியுதடி!

உழைச்சு வாழுங் குடிநாம் இருப்பதற்கோ
ஒருவீடு இல்லை யடியே!
ஊரோடு வாழக் குடிசையு மின்றி
தெருவே வீடென வாழவோ

ஏழை என்ற பெயரொடு நாம்வாழ
தனிதே சமொன்று உண்டோ?
கூழ்குடிப் பதற்கும் பஞ்சம் பொழப்பு

கூடிபெற்ற பிள்ளையும் பாவமோ?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 3 May 2018

சிறுகதை மன்னன் எஸ். எஸ். தென்னரசு


siragu-thennarasu3
இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பங்களிப்பிற்குத் திராவிட இயக்கம் சார்ந்த இலக்கிய வாணர்கள் குறிக்கத்தக்க பணிகளை ஆற்றியுள்ளனர். தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களை முன்னவர்களாகக் கொண்டு தமிழ் இனத்தின் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பணிகளை இதழ்கள் வாயிலாகவும், படைப்புகள் வாயிலாகவும், ஆய்வுகள் வாயிலாகவும் திராவிட இலக்கிய வாணர்கள் திறம்பட செய்தனர். இவர்களுக்கு குறிப்பிடத்தக்க படைப்பாளர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்த எஸ். எஸ். தென்னரசு ஆவார். இவரின் வாழ்வினை எடுத்துரைத்து இவர் படைத்த சேதுநாட்டுச் செல்லக்கிளி என்ற நாவலை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

எஸ். எஸ். தென்னரசு பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகும். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டராக விளங்கியவர். அறிஞர் அண்ணாவின் அரவணைப்பினைப் பெற்றவர். கலைஞர் மு. கருணாநிதியுடன் இவர் இலக்கியத் தோழமை பெற்றிருந்தார். சிறுகதை மன்னன் என்று போற்றப்பெறும் அளவிற்கு சிறுகதைப் படைப்புகளை அளித்தவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 2 May 2018

சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை”


oct25முன்னுரை:
சி.என். அண்ணாதுரை எழுதிய நூல்களுள் மிகவும் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும், அதையும்விட அவருக்கு ஆறு  மாதங்கள் சிறைதண்டனையும்,  700 ரூபாய் அபராதத்தையும் சென்னை மாநில அரசு விதிப்பதற்குக் காரணமாக இருந்த நூல் “ஆரியமாயை”.  சுமார் அறுபது பக்கங்களைக் கொண்ட மிகச் சிறிய நூல் இது. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்களை அண்ணாதுரை மிகக் கடுமையாகச் சாடுவதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. நூல் முழுவதும் அவர் அக்கால (1940 களில்) எதிரணியில் இருந்த ஆரியச் சார்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் பலரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மறுமொழி அளிக்கும் விதத்திலும், தமிழர்களை நோக்கி எழுதியிருப்பதையும் காணலாம். அவ்வாறே, நூலின் சில பகுதிகளில் மாணவர்களை நோக்கியும், சில பகுதிகளில் தமிழறிஞர்களை நோக்கியும் எழுதியிருப்பதையும் காணமுடிகிறது.

மக்களிடையே கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காக வழக்கு தொடரப்பட்டு அவர் பலமுறை நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதை, “ஆரிய மாயை வழக்குக்காகப் பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரியமாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரியமாயை, இலட்சிய வரலாறு, இராவணகாவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  அண்ணாதுரை உள்ளதைத்தான் எழுதினான் என்று அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது” என்று அவர் வாயிலாகவே அவரது மேடைப்பேச்சு ஒன்றின் மூலம் அறியவும் முடிகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 1 May 2018

அணிபெறும் திரையிசை


siragu thirai isai1
தமிழ் இலக்கணம் ஐவகைப்படும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவையாகும். ஒரு படைப்பாளன் படைக்கும்போது பாடுபொருள் ஒன்றை முதலில் தேர்ந்து கொள்கிறான். அதன்பின் அதற்காக வடிவத்தைத் தேர்ந்து கொள்கிறான். வடிவத்தைத் தேர்ந்தபின் அவ்வடிவத்திற்கான சொற்களை இணைக்கிறான். இவையெல்லாம் மனதில் உருவாகி எண்ணத்தில் கிளை பரப்பி, எழுத்துவண்ணமாக வருகின்றன. ஆனால் படைப்பாளன் எண்ணாமலே வருவது அணி. அது படைப்பிற்று அணி செய்கிறது. அணி இலக்கணத்தைப் படைப்பாளன் படைக்கவேண்டும் என்று எண்ணிப் படைப்பதில்லை. தானாகவே அது இடம்பெற்று விடுகிறது. படைப்பாளன் திட்டமிடாமலே படைப்பிற்குள் அணியிலக்கணம் அமர்ந்து கொண்டு, அணிசெய்கிறது.

குறிப்பாகத் திரையிசைப் பாடல்களைப் புனையும்போது படைப்பாளன் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிறான். காலம், அடி வரையறை, இசைக்கான இசைவு, பாடல் இடம் பெறுவதற்கான சூழல், அதனைப் பாடுவோர்க்கானப் பாத்திர இயல்பு இவற்றையெல்லாம் எண்ணத்தில் ஏற்றிக் கொண்டுப் படைப்பாளன் படைத்தாக வேண்டும். இந்நேரத்தில் அணியிலக்கணத்தைக் கொண்டு வந்துச் சேர்க்கவேண்டும் என்று கவிஞன் எண்ண இயலாது. தானாக வந்து அமர்ந்து கொள்கிறது அணியிலக்கணம். எனவே மற்ற இலக்கணங்களை விட நுட்பமானது அணியிலக்கணம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.