Tuesday, 10 July 2018

“ஔவைப்பாட்டி”

siragu avvai1
தமிழ்ப்புலவர் ஔவையாரை அறியாத தமிழரே இருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பள்ளி செல்லும் வயது வராத சின்னஞ்சிறு மழலையர் பட்டாளம் மட்டுமே. அகரமுதல என அ, ஆ, இ  என்ற எழுத்து வரிசையைப் படிக்கத் தொடங்கும் வயதில் ‘ஔ’ என்ற எழுத்துக்கு எடுத்துக்காட்டாக அனைவரும் படித்து வருவது ஒரு மூதாட்டியாகக் காட்டப்படும் ஔவையாரையே. அதற்கு மேல் அவரைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்த அந்த வயது முதற்கொண்டும் பின்னர், ‘ஆத்திச்சூடி’ என்ற நீதி நூல் கூறும் “அறம் செய விரும்பு” “ஆறுவது சினம்” “இயல்வது கரவேல்” என்று அவர் பாடல்களைப் படிக்கத் தொடங்கி விடுவோம். ஆக, ஔவையாரின் பாடல்கள் தெரியாத தமிழரே கிடையாது என்றும் உறுதியாகச் சொல்லலாம்.
பொதுவாகப் பலரும் அவரைப் பற்றி கொண்டிருக்கும் கருத்து:

“ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது” (ஔவையார்: https://ta.wikisource.org/s/34) என்பதையே ஒட்டியிருக்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 5 July 2018

கந்தரலங்கார நூலில் உபதேச மொழிகள்


siragu arunagirinaadhar1
அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அலங்காரக் கோல அழகினை வியக்கும் நிலையில்  பாடிய நூல் கந்தர் அலங்காரம் ஆகும். இவ்வலங்காரப் பாடல்கள் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்என்று புகழப்பெறுகின்றன. பாதாதிகேசமாக முருகப்பெருமானின் அழகு இந்நூலில் அலங்காரமாகக் காட்டப்பெறுகிறது. மேலும் கந்தனின் ஊர்தி, படை, கொடி போன்றனவும் புகழப்பெறுகின்றன. இந்நூல் கந்தனின் அலங்காரத்தை மட்டும் சொல்லாமல் அவனை நம்பினால் உயிர் முக்தி நிலை பெறும்என்ற கருத்தை உறுதிபட மொழிகின்றது. இந்நூலில் முருகன் தனக்கு உரைத்த உபதேச மொழிகளையும், உலகம் உய்ய தான் அருளும் உபதேச மொழிகளையும் இணைத்துப் பாடுகின்றார் அருணகிரிநாதர்.

முருகப்பெருமான் அருணகிரிநாதப்பெருமானுக்கு “ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின்மேல் அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேன்” (8) போன்ற அரிய உபதேசத்தை அருளினார் என்று கூறப்படுகிறது. அவ்வுபதேசப் பொருள் வானன்று, காலன்று, தீயன்று, நீரன்று, மண்ணுமன்று, தானன்று, அசரீரி அன்று, சரீரி அன்று. (9). ஐம்பூத எல்லை கடந்து, உருவமுடையதாகவும் உருவம் அற்றதாகவும் இல்லாமல் தனிப்பெருவெளியாக முருகப்பெருமான் அருணகிரிநாதருக்குக் காட்சி தந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 4 July 2018

தொகுப்பு கவிதை (வா பகையே வா!, பேசும் மௌனம்)


வா பகையே வா!

-

Siragu-eththunai2
யாது கேட்டனர் எம் மக்கள்?
பொன் வீதிகளா? வைர அணிகளா?
வறுமை ஒழிக்கவா? பசி ஆற்றவா?
மூச்சை நிறுத்தும் புற்றின் வேரறுக்க
போர்த்தொடுத்தனர் அமைதி வழியில்
ஓநாய் கனவான்களே, குற்றமோ அது?
காற்றும், நீரும் உயிர்க்கொல்லும் கோடரி
ஆவதை தட்டிக் கேட்டதற்கா பொட்டில்



சுட்டீர்கள்? சிட்டுப் பெண்ணின் உதட்டை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5/

தொகுப்பு கவிதை (வா பகையே வா!, பேசும் மௌனம்)


வா பகையே வா!

-

Siragu-eththunai2
யாது கேட்டனர் எம் மக்கள்?
பொன் வீதிகளா? வைர அணிகளா?
வறுமை ஒழிக்கவா? பசி ஆற்றவா?
மூச்சை நிறுத்தும் புற்றின் வேரறுக்க
போர்த்தொடுத்தனர் அமைதி வழியில்
ஓநாய் கனவான்களே, குற்றமோ அது?
காற்றும், நீரும் உயிர்க்கொல்லும் கோடரி
ஆவதை தட்டிக் கேட்டதற்கா பொட்டில்



சுட்டீர்கள்? சிட்டுப் பெண்ணின் உதட்டை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5/

Tuesday, 3 July 2018

நண்பனாய், சீடனாய், குருவாய்……


siragu nanbanaai1
நாஞ்சில் நாடன் கட்டுரை வன்மை மிக்க கதைசொல்லி. அவரது படைப்புகளில் தமிழ் இலக்கியப் புகுத்தல்கள், குறிப்பாக சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற மரபுசார் இலக்கியப் புகுத்தல்களுக்கும், புதுமைப்பித்தன், ஜெயமோகன், சுந்தரராமசாமி போன்ற எழுத்தாளர்களின் நவீன எழுத்துக்களின் மதிப்பீடு சார்ந்த, எடுத்துக்காட்டத்தக்க குறிப்புகள் சார்ந்த புகுத்தல்களும் இருக்கும். ஒன்றின் ஒன்று தொடர் சங்கிலியாய், செய்திகளை, உவமைகளை, நிகழ்வுகளை அடுக்குவதில் கைதேர்ந்த படைப்பாளி நாஞ்சில் நாடன் ஆவார். இவரது நாஞ்சில் தமிழில் பம்பாய் நாகரீக வாழ்வின் எச்சங்களைக் கண்டுகொள்ள இயலும். சவம் – இதுவே பல இடங்களில் நாஞ்சில் நாடனின் எழுத்தில் காணப்படும் உச்சப்புள்ளி.
இவரின் படைப்புகளில் தனியார் குழுமங்களில் எந்திரங்கள் விற்கும் விற்பனைப் பிரதிநிதியின் அல்லல்கள், குடும்பத்தைத் துறந்து உணவிற்கும், இருப்பிடத்திற்கும் படும் துயரங்கள் எடுத்துரைக்கப்பெறுகின்றன. சொந்த ஊரைவிட்டுத் தூர தேச மாநிலம் செல்லும் மகன் தாயின் இறப்பிற்குக் கூட வரமுடியாத சூழல், தன் கல்யாணத்திற்கும் யாரும் முனையாவிட்டாலும் மற்றவர்கள் நடத்தும் திருமணங்களுக்கு வருகைதரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சொந்த ஊர் வந்ததும் தன்னூர் சொத்துக்களைப் பாதுகாத்து நிறைவாழ்வு வாழ வேண்டும் என்ற ஏக்கம் போன்றன ஒரு விரக்தி மனப்பான்மையுடன் எடுத்துரைக்கப்பெறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 2 July 2018

மெல்லின மேகங்கள் (கவிதை)


siragu megangal1

மேகங்கள்-
நட்சத்திர முட்டைகளை
அடைகாக்கும்
குளிர்ப்பதனக் கூடுகள்-

வான் கடல் எங்கும்
உள்ளே புகுந்து
வெண்மணல் பரப்பிய
பேரழகுக் கடற்கரைகள்-

தொங்கும் தூரத்து



வெள்ளி மலைக் குன்றுகள்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

சி.மணியின் -’யாப்புடைத்த” கவிதைகள்

siragu c.mani2
தமிழில் புதுக்கவிதையின் காலத்தை மூன்று பிரிவுகளில் வகைசெய்யலாம். பரிசோதனைக் காலம்(1934-1947), மறுமலர்ச்சிக் காலம் (1959-1969), செல்வாக்கு காலம் (1970க்கு மேல்). என்று புதுக்கவிதையின் வளர்ச்சியை அப்துல் ரகுமான் இவ்வாறு குறிப்பிடுக் காட்டுகிறார். இது மறுமலர்ச்சிக் கால கவிஞர்களின் செயற்பாட்டைஅறிந்து கொள்ள உதவுகிறது.
தமிழுக்குப் புதுக்கவிதையை அறிமுகம் செய்து பரிசோதித்தது என்பது மணிக்கொடிக் காலம் என்றாலும், அதன் வளர்ச்சிக்கும் அதனுடைய சமூக அங்கீராத்தை உறுதி செய்து கொள்வதற்கும், மறுமலர்ச்சி காலம் மிகத் தீவிரமாக பணியாற்றியது. எனினும், மறுமலர்ச்சிக்குப் பின் சிலகாலம் அதாவது எழுத்து காலத்திற்கு பின் தொய்வு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.

மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் தோன்றிய கவிஞர்கள் பலரும் பலவித வகைகளில் கவிதைகளை மேற்கொண்டு வெற்றி கண்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சி.மணி. எழுத்து இதழில் ந.பி-யின் கவிதையை விமர்சித்த சி.சு.செ அதற்கு பின் பலருடைய கவிதைகளை அவ்வளவாக பொருட்படுத்தவில்லை. ந.பி-க்கு பின் அவர் கொண்டாடியது சி.மணியின் கவிதைகளைத்தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.