Monday, 27 August 2018

தொகுப்பு கவிதை (கொடூரம், ஆண்டாள்)

கொடூரம்


siragu kodooram1

எண்ணங்களையும் எதிர்பார்ப்பையும்
கனவுகளாக்கினாய்!
அழகையும் ஆசையையும்
காதலாக்கினாய்!
அறிவையும் ஆக்கத்தையும்
கல்வியாக்கினாய்!
பந்தத்தையும் பாசத்தையும்
உறவுகளாக்கினாய்!

உணர்வையும் காமத்தையும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/

Thursday, 23 August 2018

தமிழும் அறிவியலும்


Dec-23-2017-newsletter1
தமிழ்மொழி தொன்மை வாய்ந்த மொழி. அதனுள் பல்வகை, பல்வேறு இலக்கியங்கள் எழுந்துள்ளன. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கால அளவில் வளர்ந்துவரும் தமிழ்மொழியில்  அதன் இலக்கியங்களில் பல்வேறு பதிவுகள் காணப்படுகின்றன. மொழியியல், இலக்கணவியல், இலக்கியவியல்,  அழகியல்,  அறவியல், பண்பாட்டியல், அறிவியல் போன்ற பல்துறை சார் பதிவுகள் தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. குறிப்பாக செம்மொழி இலக்கியங்கள் காலத்தாலும், கருப்பொருளாலும், வெளிப்பாட்டுத் தன்மையாலும், பல்துறை இயல் சார் அறிவின் பதிவுகளாலும் தனித்திறம் பெற்று விளங்குகின்றன.

‘‘முதலாவதாகத் தமிழ்மொழி மிகுந்த பழமைச் சிறப்பு வாய்ந்த மொழி. ஏனைய தற்கால இந்திய மொழிகளின் இலக்கியங்களுக்கெல்லாம் காலத்தால் மிகவும் முற்பட்ட, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதற்கு மேலும் முற்பட்ட பேரிலக்கியங்களைக் கொண்டது தமிழ்மொழி. தமிழில் மிகப் பழம்பெரும் நூல் தொல்காப்பியம். தொன்மைக்காலக் கல்வெட்டுக்களிலிருந்து இந்நூலின் பகுதிகள் காலத்தால் மிக முற்பட்டவை எனவும், ஏறத்தாழ கி.மு. 200க்கு முன்பே இந்நூல் எழுந்துள்ளது எனவும் தெரிகிறது. பழந்தமிழரின் பேரிலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் ஆகும். அவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூல்களும் பிறவும் ஆகும். அவை ஏறத்தாழ கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளில் எழுந்தவை எனக் கொள்ளலாம். அவை வடமொழியில் காளிதாசரின் பேரிலக்கியங்கள் தோன்றுவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னமே தோன்றிவிட்டன. மதச் சார்பற்ற இந்தியாவில் முதன் முதலில் எழுந்த மதச் சார்பற்ற பெருங்கவிதைத் தொகுப்பு சங்கஇலக்கியங்கள் என்றால் அது மிகையாகாது” என்ற ஜார்ஜ் எல். ஹார்டுவின் கருத்துத் தமிழ்ச்செம்மொழி இலக்கியங்களின் தன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 22 August 2018

உலகளாவிய வணிகத்தில் முன்னோடிகளாய் விளங்கிய பழந்தமிழ் வணிகர்கள்


Siragu ulagalaaviya1
நூலும் நூலாசிரியரும்:
இந்திய அளவில் உலகளாவிய கடல்வணிகத்தில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் பண்டைத்தமிழர் என்ற தனது ஆய்வின் முடிவை “The World of the Tamil Merchant: Pioneers of International Trade” என்ற நூலாக வெளியிட்டுள்ளார் இந்திய வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் கனகலதா முகுந்த். குர்சரண் தாஸ் வழங்கிய அணிந்துரையுடன் பெங்குவின் பதிப்பகத்தாரால் இந்த நூல் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலுக்குத் தமிழில் “பழந்தமிழ் வணிகர்கள், சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்” எனத் தலைப்பிட்டு, எஸ். கிருஷ்ணன் அவர்களின் மொழிபெயர்ப்பில், டிசம்பர் 2016 இல் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூலின் ஆசிரியரான முனைவர் கனகலதா முகுந்த் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மும்பை, போபால் பல்கலைக்கழகங்களிலும், ஐதராபாத் பொருளாதார – சமூக ஆய்வு மையத்திலும் பணியாற்றியவர். தென்னிந்திய வணிக வரலாறு குறித்தும்,  வரலாற்றில் பெண்களின் உரிமைகள் மற்றும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தவர். பழந்தமிழ் வணிகம், கோவில்கள், ஆங்கிலேய வர்த்தகர்களின் துவக்ககாலத் தமிழகம் ஆகியவற்றைக் குறித்தும் மேலும் சில ஆய்வு நூல்களை எழுதியுள்ளார் இவர்.

சங்ககாலம் முதற்கொண்டு சோழப்பேரரசு முடிவுக்கு வரும்வரை இருந்த நீண்ட காலகட்டத்தில் தமிழிலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள் ஆகியவற்றின் மூலம் தமிழகவணிகர்கள் உலகளாவிய கடல் வணிகத்தில் பங்கேற்றதற்கும், உள்நாட்டு வணிகத்தை வளர்த்தமைக்கும், அவர்களது வணிகக்குழுக்கள் பலவற்றைக் குறித்தும் சான்றுகளுடன் நிறுவியுள்ளார் கனகலதா முகுந்த். தமிழக வணிகக் குழுவினர், குறிப்பாக வளமிக்க செல்வந்தர்களான வணிகர்கள், உற்பத்தியாளர்களுக்கும், நெசவாளர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் என அவர்களின்  தேவையறிந்து பணம் கடன் வழங்கியும், ஒப்பந்த அடிப்படையில் உதவியும்,  வாணிபத்தின் மூலம் பொருளாதாரம் வளர்வதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் என்று தனது ஆய்வுகளின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/

தொகுப்பு கவிதை (ஓயாது உழைத்த கலைஞர், கலைஞருக்கு கவிதாஞ்சலி!)

ஓயாது உழைத்த கலைஞர்

- தேமொழி
siragu karunanidhi5
உயிருடன்  தண்டவாளத்தில்  படுத்துப்
போராடியதெல்லாம்  ஒரு போராட்டமா
உயிரிழந்தும் இறுதியாகப் படுத்தவாறே
போராடி வென்றதற்கு  அது  ஈடாகுமா
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்றவரை
மக்கள் தேர்தலில் அன்று  ஆதரிக்கவில்லை
படுத்துக்கொண்டே போராடி வென்றவரை
மக்கள் என்றும் மறக்கப் போவதுமில்லை
கிழக்கே உதிக்கும் சூரியன்
மேற்கே உதிக்காது ஒருநாளும்
சொல்லியிருக்கிறோம் நாம்
இயற்கை மாறாது என்பதற்காக

மேற்கே மறையும் சூரியன்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 17 August 2018

எப்போ வருவாரோ … ? (சிறுகதை)


siragu eppa varuvaro1
”வைதேகி, வைதேகி” என்று சிவகாமி கத்தியது சமையல் அறையில் கூட்டுக்குத் தாளித்துக் கொண்டிருந்த வைதேகி காதில் விழுந்தது. அடுப்பை அணைத்துவிட்டு வந்து ”என்னம்மா வேண்டும் உங்களுக்கு?”  என்று மாமியாரைக் கேட்டாள்.
சிவகாமி படுத்தப் படுக்கையாய் இருக்கும் ஒரு நோயாளி. வயசு எழுபத்து ஆறு. போன வருடம்வரை கோலோடு நடமாடிக் கொண்டிருந்தாள். இப்போது டையாபர் கட்டும் நோயாளியாய் மாறி விட்டாள். வைதேகிதான் மாமியாருக்கு  டையாபர் மாற்றி, குளிப்பாட்டி, வேளாவேளைக்கு மருந்து கொடுத்து சாப்பிடக் கொடுத்து கவனித்துக் கொள்கிறாள்.
மாமனார் சம்பத் எண்பது வயது ஆகிறது. அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை டெம்னிஷியா என்று சொல்லப்படும் ஞாபக மறதிதான். வெளியே போனால் வீட்டு முகவரியை மறந்து விடுவார். ஏன் அவர் பெயரையே சில சமயம் மறந்து விடுவார். அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வது கடினமென்றாலும் பக்கத்தில் உள்ள தெரிந்தவர்கள் உதவியுடன் வைதேகி  எப்படியோ அவரைப் பார்த்துக்கொள்கிறாள்.

கிருஷ்ண குமாருக்கும் வைதேகிக்கும் ஜாதகம் பொருத்தம் பார்த்து சாஸ்திர சம்பிரதாயப்படி கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு மதுரையில்  வங்கியில் வேலை. கை நிறையச் சம்பளம். பத்து மணியிலிருந்து ஐந்து மணி வரை வேலை. மாலை ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார். வைதேகி மிகவும் மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்தினாள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக அக்‌ஷயா பிறந்தாள். மழலை தரும் இன்பத்தில் வாழ்க்கைப் படகு ஆனந்தமாய் போய் கொண்டிருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 15 August 2018

மானமிகு சுயமரியாதைக்காரருக்கு வீரவணக்கம் !!


siragu karunanidhi1
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இந்தப் பாடலை காதல் கொண்டோருக்காக எடுத்துக்காட்டுவது உண்டு. ஆனால் முதல் முறையாக எம் தமிழ் நாட்டின் திராவிடத் தலைமகனுக்காக இதை கையாள்கின்றேன்! ஆகஸ்ட் 7 தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில், இணையத்தில் பார்த்த போது, கடல் கடந்து வாழும் என்னைப் போன்றவர்களுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தலைவரை நேரில் சந்திக்காத பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவள் என்ற போதும், அந்த தலைவரின் கருத்தியல் மீது ஈர்ப்புக் கொண்டு நம் நெஞ்சங்கள் செம்மண்ணில் கலந்திடும் நீர் எப்படி அதன் நிறத்தைப் பெற்று பாய்கின்றதோ அதேப் போல்தான் அந்தத் தலைவரின் மீதான அன்பு நமக்கு.

எந்த நிலையில் கலைஞர் இந்த அன்பைப் பெற முடிந்தது? ஏழு ஆண்டுகள் ஆட்சிகள் இல்லை, இறுதி 1.5 வருடங்கள் அரசியலிலும் இல்லை, ஆனால் கலைஞர் மீது மக்களுக்கு எத்துணை பேரன்பு எதற்கு? எதன் அடிப்படையில் சாத்தியம் எனச் சிந்தித்துப் பார்த்தால் அதற்கு காரணம் அவரின் 80 ஆண்டு கால அரசியல் தொண்டு என்று மட்டுமே சொல்ல முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அந்தத் தருணங்கள்! (கவிதை)


Siragu ovvoru nodiyilum
“அது நடந்துவிடுமோ?”
அச்சத்தில் பலர்..
“அது மட்டும் நடக்கக்கூடாது!”
பரிதவிப்பில்-
பதைபதைப்பில் பலர்..
அது நடந்தாலும்
எது நடந்தாலும்
எல்லாவற்றையும்
விமர்சிக்கும் பலர்-
எதிலும் கவனமில்லாது
விமர்சனங்களைக்
கடந்துபோகும் சிலர்-
விமர்சனங்களை உள்வாங்கி
விவகாரமாக்கிக் கொள்வர் பலர்-
எண்ணிய எண்ணியாங்கு
எய்தத் துடிப்பர் சிலர்-

இவ்வாறு பலவாறாய்த்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/