Wednesday, 4 March 2020

குமரிக்கண்டமா? அது எங்கே இருக்கிறது?


siragu kumarikandam11
தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தின் காலத்தில் தமிழகத்தின் எல்லைகளாக வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் எல்லைகளாக இருந்தன எனத் தெரிகிறது. இதனைத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் தந்த பனம்பாரனார், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” எனக் குறிப்பிட்டு தமிழ்கூறும் நல்லுலகம் வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும் இடையில் பரந்துகிடந்ததை (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3) விளக்குவார்.
   “தென்குமரி வடபெருங்கல்
   குணகுட கடலா எல்லை”
என்ற குறுங்கோழியூர் கிழார் (புறநானூறு:17:1-2); மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி:70-71) சங்கப்பாடல்களிலும்,
  “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
   தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு”
என இவ்வாறே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் வேனிற் காதையிலும் (வேனிற்காதை:1-2) குறிப்பிடுவதால் பண்டையத் தமிழகத்தின் எல்லையை நாம் அறிகிறோம்.
தென்குமரி:
இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழகத்தின் தென் எல்லையான குமரிமுனையைக் கடல் கொண்டது என்பதை,
  “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
   பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
   குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” (சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22)

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 3 March 2020

தூண்டிவிடப்படும் மதவெறியும், துண்டாடப்படும் மக்களும்!


siragu caa1
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களாக அறவழியில் அமைதியாகப் போராடிவந்த தலைநகர் தில்லி மக்கள், இன்று திடீரென்று தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதில்,  உலக அரங்கில் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற வகையில் மிகவும் வெட்கப்படவேண்டியவர்களாக, தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பது வருந்தத்தக்க ஒரு நிகழ்வாக நடந்திருக்கிறது. வடகிழக்கு தில்லியில், கடந்த மூன்று தினங்களாக நடந்த வெறித்தனமான வன்முறையில் இதுவரை ஒரு தலைமை காவலர் உட்பட 38 பேர்கள் உயிரிழந்துள்ளனர். 300 பேர்களுக்கும் மேலாக காயமடைந்துள்ளனர் என்ற செய்தி நம்மை மிகவும் வேதனைக்குள்ளாக்க வைக்கிறது.
siragu caa2

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் சில இந்துத்துவ அமைப்புகள், வடகிழக்கு தில்லியிலுள்ள மாஜ்பூர், ஜபராபாத், சீலம்பூர், சந்த்பாக் ஆகிய இடங்களில் தங்களின் போராட்டத்தை நடத்தின. அதில், இச்சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராடிய இரு தரப்பினர்கிடையே வன்முறை வெடித்தது. அதில், ஆதரவாக போராடியதாக கூறப்படுவோர், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினர். தீ வைத்து கொளுத்தினர். கடைகள், வீடுகள், கார்கள் என அனைத்தும் நாசமாக்கப்பட்டன. இவையனைத்தும் மத சிறுபான்மையினரான இசுலாம் மக்களை குறிவைத்தே தாக்கப்பட்டன. அதிகப்படியான அராஜகங்கள் நடந்தேறியது. தாக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாதபடி அடித்து வழிமறிக்கபட்டன. வீடு புகுந்து உள்ளே இருக்கும் இசுலாமிய மக்களைத் தாக்கியிருக்கிறார்கள். இது எல்லாம் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே இசுலாம் வீடுகள் அடையாளம் கண்டு வைத்துக் கொண்டு, கலவரம் போது, மிகச்சரியாக அவர்களின் இல்லங்கள் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. மசூதிகளும் இதற்குத் தப்பவில்லை. தீவைக்கப்பட்டு, உள்ளே புனித நூல்கள் உட்பட அனைத்தும் எரிக்கப் பட்டிருக்கின்றன. சிசிடிவி கேமராக்கள் உட்பட உடைத்து ஒரு கொடூர வன்முறையை இசுலாம் மக்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 27 February 2020

அன்னி மிஞிலி


siragu ilakkiyam1
அன்னி மிஞிலி சங்கக் காலப் பாடல்களில் நாம் காணும் பெயர். யார் இவர்? இவர் பெண்!! அதுவும் வஞ்சினம் கொண்டு சூளுரைத்த பெண், அகநானூறு 196 மற்றும் 262 இவர் பெயரைப் பதிவு செய்திருக்கின்றது. இரு பாடல்களையும் எழுதியவர் பரணர். பரணர் சங்க இலக்கியப் புலவர்களுள் முக்கியமானவர். சங்க இலக்கியப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்வது இவர் பாடல்களின் தனிச் சிறப்பு.

சரி அன்னி மிஞிலி யாரை எதிர்த்துச் சூளுரைத்தாள்? கோசர்களை எதிர்த்து? யார் இந்த கோசர்கள் என்று பல வரலாற்றுத் தரவுகளும், குழப்பங்களும் உண்டு. சுருக்கமாகக் கோசர்கள் என்றால் யார் எனப் பார்க்கும் போது, கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும், கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் இவர்கள் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். காஷ்மீரத்திலிருந்து வந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். எனவே அவர்கள் யார் என்பது ஆய்விற்கு உரியது. ஆனால் அவர்களைப் பற்றிய செய்திகள் நிறையச் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 26 February 2020

திறன்மிகு தியாகராயர் சாலை இராமியா


siragu t nagar2
அண்மைக் காலமாய்த் “திறன்மிகு” (Smart) என்ற சொல் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சாலைகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தத் திறன்மிகு சாலைகளை  (Smart Roads) அரசு அமைத்துக்கொண்டு இருக்கிறது. அவற்றுள் சென்னை, தியாகராய நகரில் உள்ள தியாகராயர் சாலையும் ஒன்று.
முன்பு தியாகராயர் சாலையின் இரு மருங்கிலும் நடைபாதைக் கடைகள் நிரம்பி இருந்தன. அக்கடைகள் இருப்பது நடைபாதையில் நடப்பவர்களுக்கு இடையூறாக இருப்பாகக்கூறி அவற்றை அகற்ற முயன்றார்கள். ஆனால் தங்கள் வாழ்வுரிமை பாதிப்பதாகக்கூறி நடைபாதை வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்காடி தங்கள் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டனர். வழக்கமான முறையில் நடைபாதைக் கடைகளை அகற்ற முடியாததைக் கண்ட “மிகத்திறமையான” அரசு அதிகாரிகள் திறன்மிகு சாலைத் திட்டத்தின் மூலம் அதை செய்துவிடலாம் என்று ஒருவழியைக் கண்டனர். “புலிக்குப் புல் வாங்கிப் போட்ட செலவுரூ.500″ என்பதுபோல் நடைபாதை வணிகர்களின் வாழ்வுரிமைக்கு மாற்று இடம் ஒதுக்கிக் கடைகள் கட்டுவதாக அத்திட்டத்தை வடிவமைத்தனர்.
திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு அது தங்களைப் பாதிக்கும் என்று நிறுவமுடியாத நிலையில் நடைபாதை வணிகர்கள் அதை எதிர்க்க முடியவில்லை.

பணமதிப்பு இழப்பு கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டாலும் நடைமுறையில் அப்படி எதுவும் நடக்காததுபோல் நடைபாதை வணிகர்களுக்கு அளித்த உறுதிமொழியும் பொய்யாகிப்போனது. அதுஒருபக்கம் இருக்கட்டும். யார் யார் பயன் அடைந்தார்கள்? என்ன என்ன விளைவுகள் ஏற்பட்டன?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 25 February 2020

தமிழகத்தில், அரசுப்பள்ளி குழந்தைகளின் உணவிலும் மதவாத அரசியல்!


siragu school lunch1
2014 ஆம் ஆண்டு பதவியேற்றத்திலிருந்து, பா.ச.க மதவாத அரசியலை அனைத்துத் தளங்களிலும் திணித்துக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் கவனித்து கொண்டுதானிருக்கிறோம். உணவு விசயத்திலும், மாட்டிறைச்சிக்கு தடை என்ற ஒரு ஆணையை பிறப்பித்து நாடெங்கிலும் கலவரத்தைத் தூண்டிவிட்டது. தென்னிந்தியாவில் பெரியளவிற்கு கலவரங்கள் ஏற்படவில்லை என்றாலும், வடமாநிலங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதில் 300க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய அரசு நேரடியாக இறங்கவில்லை என்றாலும், என்ஜிஓ என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி நடக்கிறது. இஸ்கான் என்ற மதப்பிரசார அமைப்பின் மூலம் தமிழகத்தின், சென்னை அரசுப்பள்ளிகளில் காலை உணவு வழங்குகிறோம் என்ற பெயரில் உள்ளே நுழைகிறார்கள். அதற்கு தமிழக அரசும் அனுமதியளிக்கிறது என்பது தான் தற்போது கடும் கண்டனத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது.
அமெரிக்காவின் இஸ்கான் (ISKCON) என்னும் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா’ என்கிற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவின் பல மாநிலங்களில், குழந்தைகளுக்கு உணவு இலவசமாக அளிக்கும் சேவையை செய்து வருகிறது. இது ஒரு இந்து மத பிரசார அமைப்பு என்பதாகும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தற்சமயம் தமிழகத்தில், அரசின் உதவியுடன், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு, அக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் ஒன்றை முன்னுறுத்தி, அனுமதி கேட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஆசிய பண்பாட்டிற்குச் சமய இலக்கியங்கள் அளித்த சமய நடைமுறைகள் மற்றும் பண்பாட்டுக் கொடைகள் – (பகுதி -2))


siragu pattinapaalai1
பண்டமாற்று
 தம்மிடம் உள்ள பொருள்களைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக வேறு பொருட்களைப் பெற்றுச் செல்லும் முறையாகிய பண்டமாற்று முறை அக்காலத்தில் வழக்கிலிருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
பரதவர்கள் மீன் குவியல்களை இடையர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக அவர்களிடமிருந்து சீவல், கௌதாரி போன்றவற்றைப் பெற்றுச் சென்றமையையம். நெய்தல் நிலச் சிறுமியர் இடைச்சியர்களிடமிருந்து அவரைக்கு ஈடாகப் பவளத்தைப் பெற்றுச் சென்றமையையும்,
கவரும்மீன் குவைகழியவர் கானவர்க் களித்துச்
சிவலும்சே வலும்மாறியும் சிறுகழிச் சியர்கள்
அவரைஞ னலுக்கெயிற்றியர் பவளமுத் தளித்தும்
உவரிநெய் தலும் கானமும் கலந்துள ஒழுக்கம்.
என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது.
 சமய வழக்கங்கள்

 சமுதாயத்திலுள்ள நிறுவனங்களில் ஒன்றாகிய சமயம் தொடர்பான வழக்கங்களைத் திருமுறைகள் மூலம் அறியமுடிகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 24 February 2020

கோயில் திருப்பண்ணியர் விருத்தமும் சமுதாய முன்னேற்றமும்


siragu kovil thiruppanniyar1
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி செய்கிறார்கள். எவரும் சும்மா இருப்பதே சுகம் என்று இருப்பதில்லை. ஒவ்வொரு பணியும் ஒரு சமயத்தில் பணியாகின்றது. மற்றொரு சமயத்தில் கடமையாகின்றது. கோயிலில் செய்கின்றபோது எப்பணியும் திருப்பணி ஆகின்றது. கோயில் பூசை செய்வோர் தொடங்கி, திருஅலகிடுவோர் வரை கோயில்பணிகள் பலவாறாக உள்ளன. இப்பணிகளுள் ஒன்று பண்ணிசைத்தல் என்பதாகும். கோயிலில் இசைத் தமிழும் இயற்றமிழும் நாடகத் தமிழும் வளர்க்கப்பெற்றுவந்தன. இவற்றில் இசைத்தமிழான பண் இசைத்தல் பற்றி ஒரு சிற்றிலக்கியமே உள்ளது. கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் என்பது அவ்விலக்கியத்தின் பெயராகும். பண்ணியர் என்பதை பல வகைகளில் பொருள் கொள்ளலாம். பண்ணியர் என்பது இங்குப் பண்ணிசைப்பவர்கள் குறித்த இலக்கியம் என்ற நிலையில் பெருமை பெறுகின்றது. பண்ணியர் என்பதை தில்லைப் பெருமான் என்று பொருள் கொண்ட உரையாளர்களும் உண்டு.
நம்பியாண்டார் நம்பியால் கட்டளைக் கலித்துறையில் இயற்றப்பட்ட எழுபது பாடல்கள் கொண்ட தொகுப்பு திருப்பண்ணியர் விருத்தம் என அழைக்கப்படுகின்றது. இவ்விலக்கியத்தின் ஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானின் பெருமை விதந்து ஓதப்படுகிறது. அதனுடன் கோயில் சார்ந்த பணிகள், பணியாளர்கள், கோயில் சார்ந்த சமுதாயம் போன்றன பற்றிய செய்திகளும் காட்டப்பெற்றுள்ளன.
இப்பாடல்களின் வழியாக அக்கால சமுதாயம் எவ்வாறு கோயில் சார்ந்து வாழ்ந்தது என்பதையும், கோயில் திருப்பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றன என்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது.

நம்பியாண்டார் நம்பி திருமுறைகளை வகுத்தவர் ஆவார். இவரின் தொகுப்பு முயற்சியால் சைவம் தழைத்தது. சைவ நூல்கள் என்றும் பாதுகாப்பினைப் பெற்றன. திருக்காப்பினைச் செய்த இவர் தன் காலத்தில் தான் வாழ்ந்த சமுதாயத்தின் நிலைப்பாட்டை, சமயத்தால் சமுதாயம் முன்னேற இயலும் என்ற நிலையில் பக்தி சார்ந்த படைப்புகளைப் படைத்தளித்துள்ளார். இப்படைப்புகள் இனிய படைப்புகளாக, சமுதாயத்தின் முன்னேற்றம் சொல்லும் படைப்புகளாக விளங்குகின்றன. இவரின் படைப்புகளுள் ஒன்று கோயில் திருப்பண்ணியர் விருத்தம். இப்பனுவல் சிறந்த முறையில் சமுதாயத்தை சமய நெறிப்படி வாழ வழி செய்விப்பதாக உள்ளது. சமயத்தின்பாலும், இறைவன் மீதும் பற்றும் பக்தியும் கொண்ட சமுதாயம் முன்னேற்றம் கொள்ளும் என்பதற்கு இவரின் இப்படைப்பே சான்றாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.