Wednesday, 31 August 2016

இந்தியாவின் பிறமாநிலங்களைப் போல் தமிழகத்துக்கும் வருமா நவோதயா பள்ளிகள்?


Siragu Navodaya School1
கிராமப்புற, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பயில வாய்ப்பு.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள நவோதயா பள்ளி கல்வித்திட்டம் இதுவரை தமிழகத்தில் இல்லை. புதிய கல்விக் கொள்கை விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், நவோதயா பள்ளி கல்வித்திட்டம் தமிழகத்துக்கும் வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


மத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தின் கீழ், 1986ம் ஆண்டு மஹாராட்டிர மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதல் பள்ளிதொடங்கப்பட்டது. படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக, தரமான படிப்பினை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழ்நாடு தவிர இதர மாநிலங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பள்ளி என்ற விகிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 30 August 2016

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இன்றைய நிலை என்ன?


Siragu-assembly1

தமிழக சட்டபேரவை கூட்டம், நடக்க ஆரம்பம் ஆனதில் இருந்தே வெளிநடப்பு என்ற ஒன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த சட்டப் பேரவை கூட்ட விவாதத்தின்போது, ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளும் சரி, எதிர் கட்சிகளின் நடவடிக்கைகளும் சரி திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு துறை ரீதியான விவாதத்தின் போதும், இது எங்களுடைய ஆட்சிக் காலத்தில் நடந்தது, உங்களுடைய ஆட்சிக் காலத்தில் என்ன செய்தீர்கள் என்னும் குழாயடிச் சண்டைதான் நடந்து கொண்டிருக்கின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாம், நம்முடைய தொகுதியின் தேவை என்ன, அடுத்து மக்களுக்கு என்ன நலத்திட்ட உதவிகளை செய்யலாம், அரசின் நலத் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளதா என்று பார்க்காமல், ஒருவரை ஒருவரை சரமாரியாக குற்றம் சுமத்திக் கொண்டு, சட்டப் பேரவையின் பொன்னான நேரத்தை வீணடிப்பதுதான் தங்கள் நிலைப்பாடாகக் கொண்டுள்ளனர் என்பதை அழுத்தம், திருத்தமாக நிமிடத்திற்கு ஒருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 25 August 2016

கற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும்

Siragu karpu1

தமிழ்ச் சமுதாயத்தில் வரையறுக்கப்பெற்றுள்ள, அக இலக்கண மரபுகள் என்பன தனித்தன்மை வாய்ந்தன. தமிழர்கள் தங்களுக்கு அமைத்துக்கொண்ட இல்வாழ்க்கை முறையின் செறிவுகள் அக இலக்கண மரபுகளாக உறுதிப்படுத்தப்பெற்றன. தமிழ் இலக்கண நூல்களில் அகத்திணை பற்றிய பொதுவான செய்திகள் தரப்பெற்று, அதன் பின்னர் களவு, கற்பு என்று இரண்டு வாழ்க்கை முறைகள் அமைத்துக் கொள்ளப்பெற்றுள்ளன. அகத்திணை பற்றிய பொதுவான செய்திகள் என்பதில் முக்கிய இடம்பெறுவன குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை போன்ற திணைப் பகுப்புகள் ஆகும். இவற்றிக்கென தனித்த இடம், பொருள், ஒழுக்கம் உண்டு. அவை காலந்தோறும் மாற்றமடையாமல் ஏற்கப்பட்டு வருகின்றன. தற்போது இவ்வொழுக்க நடைமுறை தளர்ந்து அனைத்து நிலமும் ஒன்று கலந்து நின்றாலும் படிக்கவும் பண்பாட்டை அறிந்து கொள்ளவும் இவை அடையாளங்களாக நிற்கின்றன.


இதற்கு நிலையில் கைகோள் எனப்படும் இரு வாழ்க்கை நிலைகளை அக இலக்கண நூல்கள் காட்டுகின்றன. கைக் கொள்ளப்பெறும் வாழ்க்கை முறை கைகோள் ஆகின்றது. காதல் சார்ந்த வாழ்க்கை முறை களவு எனவும், திருமணம் முடிந்து இல்லறத்தை நல்லறமாக வாழும் கணவன் மனைவி வாழ்க்கை முறை கற்பு எனவும் கொள்ளப்பெறுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 24 August 2016

இந்தியப் பொருளாதார மாற்றம் – பகுதி – 5


Siragu Indian economy2

பெயர்பெற்றோர்களின் வட்டாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, தொழிலகங்களையும், சுரங்கங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும், இலாபநோக்கைக் கொண்ட தனியார் மருத்துவ மனைகளையும், கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் அமைக்கவும், கோயில்களையும், ஆசிரமங்களையும், மரபுவழியான ‘அறிவியல்’களான சோதிடம், யோகம், ஆயுர்வேதம் ஆகியவற்றைப் பரப்பும் ‘ஆய்வு நிறுவனங்களை’ உருவாக்கவும் விவசாய நிலங்களையும் பழங்குடி மக்களின் நிலங்களையும் வாங்கி ஏறத்தாழ இலவசமாகவே மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டுக்குழுமத்துறைக்கு வழங்கிவிட்டன.
கம்யூனிஸ்டுக் கட்சிகளும், தாராளமயத்திற்கு ஆதரவான பிற கட்சிகளுக்கு இந்த ‘நிலத்தைப் பிடுங்கும்’ செயலில் உடனாளிகளாக இருந்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட நானோ கார் உற்பத்திசெய்யும் தொழிலகத்தை உருவாக்க, டாட்டா குழுமத்திற்கு நடைமுறையில் 997 ஏக்கர் வளமான விவசாய நிலத்தை மேற்கு வங்காளத்தின் கம்யூனிஸ்டு அரசாங்கம் பரிசாகவே தந்துவிட்டது. விவசாயிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் செய்த தீவிர எதிர்ப்பினால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்திற்கு இடம்பெயர்க்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 23 August 2016

திருப்பதியை கலக்கும் தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி!


திருப்பதியில் முகநூல் பக்கம் மூலம் பெண்கள் அளிக்கும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் ஒரு தமிழகப் பெண் ஐபிஎஸ் அதிகாரி!
 Siragu-IPS-lady1

திருப்பதி நகரக் காவல் கண்காணிப்பாளராக ஜெயலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், ஆந்திரா கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திருப்பதி நகர முதல் பெண் எஸ்.பி. என்ற பெருமையையும் ஜெயலட்சுமி பெற்றுள்ளார். ஒருபெண் நிர்வகிக்கிற பகுதியில் முதலில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் ஜெயலட்சுமி. முகநூலில் Tirupati SHE TEAM என்றொரு பக்கத்தை பெண்களுக்காக பிரத்யேகமாகத் தொடங்கி, புகார்கள் பெற்று அதனடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அசத்தி வருகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 22 August 2016

புதிய தேசிய கல்விக் கொள்கை – பள்ளிக் கல்வி

கல்விக் கொள்கைகள் கடைசியாக 1986-ம் வருடம் உருவாக்கப்பட்டு, 1992-ம் ஆண்டு அதில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதன் பின் கிட்டத்தட்ட 30 வருடங்கள் கடந்து விட்டன. புதிய கல்விக் கொள்கைக்கான அறிக்கைகளை மதிப்பிடுவதற்கு, இந்தக் கால வெளியில் நிகழ்ந்திருக்கும் தேசிய, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்களை கணக்கில் கொண்டாக வேண்டும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இன்று தேசத்தின் கால, தூர இடைவெளிகளை பெருமளவு குறைத்திருக்கிறது. கிளர்ச்சியூட்டும் எதிர்மறை தகவல்கள்தான் மிக வேகமாக சமூகத்தில் பரவுகின்றன. இது சமூக எண்ணங்களை எதிர்மறையாகவே வைத்திருக்கிறது. பொருளாதார மாற்றங்கள், மக்கள் சமூக ஒத்திசைவுடன், சேர்ந்து வாழ்வதற்கான தேவையை குறைத்திருக்கிறது – அதாவது, பொருளாதார சுதந்திரத்தையும் எனவே பொருளாதார தன்னிறைவையும் வழங்குகிறது. இதன் மறுவிசையாக சமூகத்தின் அற உணர்வு குறைகிறது. பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள், சமூகத்தின் இயங்கு தளத்தை தொடர்ச்சியாக மாற்றியமைக்கிறது. சமூகம் அதன் மாறிய இயங்குதளத்தில் உராய்வின்றி செல்ல வேண்டுமானால், சமூகத்தின் எண்ணங்களைக் கட்டமைக்கும் கல்வி, அந்த இயங்குதளத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும். மனனம் செய்யும் திறனையே பிரதானமாக்கப்பட்டிருக்கும் இன்றைய கல்வி முறையில், சிந்தனைத் திறன் மழுங்குகிறது. இதன் தொடர்ச்சியாக, கிளர்ச்சியூட்டும் தகவல்கள் முக்கியத்துவம் பெறுவதும், மனிதனின் புற உலகத்துடனான நுண்ணிய உறவுகள் உணரப்படாமல் செல்வதும் நிகழ்கிறது.

vairam minnum fi


புதிய தேசிய கல்விக் கொள்கை, சமூகத்தின் இன்றைய இயங்கு தளத்திற்கு ஏற்றவாறு கல்வியை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சி என்றே கருதுகிறேன். சமூகத்தின் எதிர்மறை இயக்கங்களை இல்லாமல் செய்யும் சமூக எண்ணங்களை உற்பத்தி செய்வதாக அந்தக் கல்வி அமைய வேண்டும். அதே நேரத்தில், பொருளாதாரம் உராய்வின்றி செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பொருளாதாரத்திற்குத் தேவையான தொழில் திறமைகளை கல்வி அளித்தாக வேண்டும். அதே நேரத்தில், மாணவர்களின் கற்பனை மற்றும் சிந்தனைத் திறன்களையும் பண்படுத்த வேண்டும். அதாவது சமூகத்திற்கு அளிக்கப்படும் கல்வி ஒரே நேரத்தில் அக மற்றும் புற நோக்கு உடையதாக இருக்கு வேண்டும். அக நோக்கு சமூக உறவுகளை மேம்படுத்தும். புற நோக்கு, பொருளாதாரத்தை மேம்படுத்தும். அவை இரண்டும் ஒத்திசைவுடன் இருந்தால் வாழ்க்கை முழுமையாக அமையலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 21 August 2016

அழிந்த அணையும், பெருவெள்ளமும் தொன்மையான நாகரிகமும்


அணை உடைந்ததால், பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டு அதன் முடிவில் பண்டைய நாகரிகம் ஒன்று உருவானதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன என்று விளக்கமளித்த அறிவியல் கட்டுரை ஒன்றும்; அணை உடைந்ததால், பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டு அதன் முடிவில் பண்டைய நாகரிகம் ஒன்று அழிந்தது என்ற ஒரு கற்பனைக் கதையினை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஒன்றும் அடுத்தடுத்து வெளியாகி அண்மையில் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்தன.

Siragu Alindha anai1


அணை உடைந்து, பெருவெள்ளம் ஏற்பட்டு இறுதியில் நாகரிகம் ஒன்று உருவானது நிகழ்ந்தது சீனாவில். மாமன்னர் யூ உருவாக்கிய “ஷா குலப் பேரரசு” (Xia dynasty) குறித்த தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன. சிந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை உடைந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டு, மொஹஞ்சதாரோ நகரம் அழிந்ததால் அந்நகரம் கைவிடப்பட்டது என்பது சுதந்திர தினத்திற்காக பாலிவுட் திரையுலகம் வெளியிட்டுள்ள “மொஹஞ்சதாரோ” படம் கூறும் கதை. இவையிரண்டையும் அடுத்தடுத்துத் தருகிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.