Tuesday 23 August 2016

திருப்பதியை கலக்கும் தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி!


திருப்பதியில் முகநூல் பக்கம் மூலம் பெண்கள் அளிக்கும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் ஒரு தமிழகப் பெண் ஐபிஎஸ் அதிகாரி!
 Siragu-IPS-lady1

திருப்பதி நகரக் காவல் கண்காணிப்பாளராக ஜெயலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், ஆந்திரா கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திருப்பதி நகர முதல் பெண் எஸ்.பி. என்ற பெருமையையும் ஜெயலட்சுமி பெற்றுள்ளார். ஒருபெண் நிர்வகிக்கிற பகுதியில் முதலில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் ஜெயலட்சுமி. முகநூலில் Tirupati SHE TEAM என்றொரு பக்கத்தை பெண்களுக்காக பிரத்யேகமாகத் தொடங்கி, புகார்கள் பெற்று அதனடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அசத்தி வருகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment