Wednesday 24 August 2016

இந்தியப் பொருளாதார மாற்றம் – பகுதி – 5


Siragu Indian economy2

பெயர்பெற்றோர்களின் வட்டாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, தொழிலகங்களையும், சுரங்கங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும், இலாபநோக்கைக் கொண்ட தனியார் மருத்துவ மனைகளையும், கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் அமைக்கவும், கோயில்களையும், ஆசிரமங்களையும், மரபுவழியான ‘அறிவியல்’களான சோதிடம், யோகம், ஆயுர்வேதம் ஆகியவற்றைப் பரப்பும் ‘ஆய்வு நிறுவனங்களை’ உருவாக்கவும் விவசாய நிலங்களையும் பழங்குடி மக்களின் நிலங்களையும் வாங்கி ஏறத்தாழ இலவசமாகவே மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டுக்குழுமத்துறைக்கு வழங்கிவிட்டன.
கம்யூனிஸ்டுக் கட்சிகளும், தாராளமயத்திற்கு ஆதரவான பிற கட்சிகளுக்கு இந்த ‘நிலத்தைப் பிடுங்கும்’ செயலில் உடனாளிகளாக இருந்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட நானோ கார் உற்பத்திசெய்யும் தொழிலகத்தை உருவாக்க, டாட்டா குழுமத்திற்கு நடைமுறையில் 997 ஏக்கர் வளமான விவசாய நிலத்தை மேற்கு வங்காளத்தின் கம்யூனிஸ்டு அரசாங்கம் பரிசாகவே தந்துவிட்டது. விவசாயிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் செய்த தீவிர எதிர்ப்பினால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்திற்கு இடம்பெயர்க்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment