Tuesday, 31 January 2017

மறக்க முடியுமா? அறிஞர் அண்ணா !!


Siragu annaa1

அறிஞர் அண்ணா – பிற மொழி ஆதிக்கத்தால் தமிழ் நாடு இருள் சூழ்ந்த நிலையில் இருந்தபோது தன் தமிழ் மொழியின் ஆற்றலால் தமிழ் மக்களை தன் பக்கம் இழுத்தவர். சோர்ந்து கிடந்த தமிழ் உள்ளத்தில் மொழி கொண்டு உணர்வை ஊட்டிய பேச்சாற்றல் மிக்கவர். அவரின் பேச்சாற்றல் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.
ஒருமுறை விழுப்புரத்தில் அண்ணா பேச சென்றிருந்தார். தேர்தல் நேரம் என்பதால் பல கூட்டங்களில் பேசிவிட்டு இரவு பத்து மணிக்குத்தான் அங்கு அவரால் வரமுடிந்தது. மக்கள் கண்களில் தூக்கம் குடிகொண்டிருந்தது.
மேடையேறிய அண்ணா இப்படி பேசினார்,
” மாதமோ சித்திரை!
மணியோ பத்தரை!
மக்களுக்கோ நித்திரை!
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை!”
என்றவுடன் மக்களின் தூக்கம் கலைந்து, எழுந்த கையொலி அடங்க வெகு நேரம் ஆயிற்று.

இதேபோல் தென்மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்கு அண்ணா பேச வந்தார். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசு, அண்ணா பேசும் மேடைக்கு எதிரே ஒரு பெண் கையில் விளக்குமாறு வைத்திருப்பதாக உள்ள படத்தை மாட்டியிருந்தனர். அதைக்கண்ட தி மு க தொண்டர்கள் ஆத்திரப்பட்டனர். அவர்களை அமைதிப்படுத்தி அண்ணா இப்படி சொன்னார். அவர்கள் ஒன்றும் தவறாக வைக்கவில்லை! அவர்கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு விளக்குமாறு பணித்திருக்கிறார்கள்! என்றார். காங்கிரசு தொண்டர்கள் வெட்கி தலை குனிந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 30 January 2017

தனித்தமிழும் இனித்தமிழும்


newsletter-nov-26-3

தனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை. வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ஒலித்தூய்மை கொண்டுத் தமிழைக் கண்ணெனக் காப்பது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.
தற்காலத்தின் பேச்சு வழக்கு அதிகமாக அயல் மொழி கலப்புடையதாக உள்ளது. பேச்சு மொழி சார்ந்து எழுதப்படும் படைப்பியலக்கியங்களிலும் அயல்மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.
பேச்சுத்தமிழும் எழுத்துத் தமிழும் வேறு வேறு என்ற நிலையை எய்திவிட்டால் பேச்சுத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எழுத்துத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எனவே பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் ஒன்றைஒன்று அதிக அளவில் சார்ந்தே இயங்கவேண்டும். செய்யுள் நடை, வழக்கு நடை ஆகிய இரண்டு நடைகள் தொன்று தொட்டே வந்துகொண்டுள்ளன. செந்தமிழ், கொடுந்தமிழ் ஆகிய இரண்டும் இருந்துள்ளன. செய்யுள் நடையில் திசைச் சொற்கள் குறைவு. வழக்கு நடையில் திசைச் சொற்கள் கலப்பது ஏற்கத்தக்கது. கொடுந்தமிழைத் தாண்டி, வழக்குத் தமிழைத்தாண்டி செய்யுள் நடை இன்னமும் நிலைத்து நிற்கிறது. அன்றைக்கு எழுதிய சிலப்பதிகாரம் இன்றைக்கும் புரிகிறது என்றால் எழுத்துநடைத் தமிழ் உயரிய நிலையில் பேணப்பட்டு வந்துள்ளது என்றே பொருள்.
Siragu-ellaam-kodukkum-tamil1


இந்நிலையில் தமிழின் தூய்மையைக் காத்தல் வேண்டும் என்றால் பேச்சுத்தமிழில் அயல்மொழி வழக்குகளைக் குறைக்கவேண்டும். நல்ல தமிழ் பேசப்பட வேண்டும். நல்ல தமிழில் எழுதப்பட வேண்டும் திரையிசைப்பாடல்களில் அளவுக்கதிகமான ஆங்கிலக் கலப்பு, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பேச்சுமொழியில் அளவுக்கு அதிகமான அயல் மொழிக் கலப்பு. தொலைக்காட்சித்தமிழில், வானொலித்தமிழில், திரைத்தமிழில் அயல்மொழிக் கலப்பு அதிகம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 29 January 2017

மாணவர் போராட்டமும், அதன் பின்னணியும்.!


Siragu Jallikattu_struggle4

உலகமே வியந்து பார்த்த நம் தமிழ் மாணவர், இளைஞர்களின் அறப்போராட்டம் மிகவும் சிறப்புக்குரியது. சல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் இந்த ஆண்டும் மறுக்கப்பட்டதின் விளைவாக தடையை மீறி நடத்துவோம் என பல இடங்களில் சிறிதளவேனும் நடந்துகொண்டிருக்கையில், அலங்காநல்லூரில் பொங்கலன்று நடத்த முற்படுகையில், சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு மாணவர்களும், இளைஞர்களும் அறப்போராட்டத்தை கையில் எடுத்தனர். அன்றைக்கு மறுநாளே சென்னையில் மெரினா கடற்கரையில், வெறும் 300 பேர் கொண்ட மாணவர்குழு அறப்போராட்டத்தில் இறங்கியது.!

இப்போராட்டம் ஒரு புரட்சி என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு, சாதி, மத வேறுபாடின்றி, பாலினம் கடந்து ஏழு நாட்கள் தொடர்ந்து போராடினார்கள் நம் இளைஞர்கள். இந்த சல்லிக்கட்டுப் போராட்டம், நம் மாநில உரிமைக்கான போராட்டம், நம்மக்களுக்கான போராட்டம், நம் பண்பாட்டிற்கான ஒரு பெரும்போராட்டமாக நடந்தேறியிருக்கிறது. நம் பண்பாட்டின் அடையாள விழாவான பொங்கல் விழாவையொட்டி நடைப்பெறும் இந்த ஏறு தழுவுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறவில்லை. விலங்குகள் நல வாரியம் பீட்டாவின் மனு காரணமாகவும், உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாகவும் நடைபெறாத இந்த மஞ்சுவிரட்டு, இவ்வாண்டு நடைபெறும் என பெரும் ஆவலில் இருந்த நம் மக்கள், இவ்வாண்டும் நடைபெறாது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான், தடையை மீறுவோம் என செயல்பட்டார்கள். இந்த இளைஞர்களைத் தடுத்து, கைது செய்யப்பட்டதின் விளைவாக, மாணவர்கள் இதனை அறப்போராட்டமாக மாநிலம் எங்கும் பல இடங்களில் ஆரம்பித்தார்கள்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 26 January 2017

இளந்தமிழர் படையே வருக!(கவிதை)


Siragu-tamilan

இளந்தமிழர் படையே வருக!-தமிழர்
இனமெனும் உணர்வுடனே வருக! வருக!
பண்டுதமிழ் நாட்டுப் பெருமைதனை காக்க
படைதிரண்டு அணியாய் வருக!வருக!
சமர்க்களம் நோக்கி வருக!-புதுச்
சரித்திரம் படைக்க வருக! வருக!
எட்டுத்திசை யெங்கும்புகழ்த் தமிழ்க்கொடி பறக்க

ஏறுநடையிட்டே தமிழ்வீரர் யாவரும் வருக!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25284

Tuesday, 24 January 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9


கிழமந்திரி சிரஞ்சீவி: பிராமணனிடத்திலிருந்த ஆட்டைச் சில வஞ்சகர்கள் எப்படி வஞ்சித்துக்கொண்டு போனார்களோ, அப்படியே நான் கோட்டான்கள் இருக்குமிடம் போய் அவர்களை வஞ்சனை செய்து கொல்கிறேன்.
காக அரசன் மேகவர்ணன்: அவர்கள் எப்படி ஆட்டைக் கொண்டு போனார்கள்?
Siragu panchadhandhira kadhaigal9-1

சிரஞ்சீவி: ஒரு தேசத்தில் மித்திரசர்மன் என்னும் பிராமணன் இருந்தான். மாசிமாதத்தில் யாகம் செய்வதற்காக ஒரு பசு அவனுக்குத் தேவைப் பட்டது. அதற்காகப் பக்கத்தில் உள்ளதொரு ஊருக்குப் போய், தகுதியுள்ள ஒருவனிடம் ‘பசு வேண்டும்’ என்று கேட்டான். “நீ நல்ல காரியத்திற் குத்தான் கேட்கிறாய், ஆனால் என்னிடம் பசு இல்லை. ஆடுதான் இருக்கிறது. அதைக் கொண்டு யாகம் செய்” என்று ஒரு பெரிய ஆட்டைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கொண்டுவரும் வழியில் அது அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியது. அதனால் அதை அவன் தோள்மேல் தூக்கிக்கொண்டு வந்தான். சில திருடர்கள் அதைத் தொலைவிலிருந்து பார்த்தார்கள். ஆட்டை எப்படியாவது கைப்பற்றி நம் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். எனவே அவர்களில் ஒருவன் வந்து பிராமணனிடம் சொல்கிறான்:

நித்தியம் அக்னி வளர்க்கின்ற பிராமணனே, நீ ஒழுக்கமுள்ளவனாக இருந்தும் இப்படிப்பட்ட பழியான காரியத்தை ஏன் செய்கிறாய்? ஓர் ஈனமான நாயைத் தோள்மேல் எப்படிக் கொண்டுவருகிறாய்? உங்கள் சாதிக்கு நாய், கோழி, சண்டாளன், கழுதை ஆகியவற்றைத் தொடக்கூடாது என்று சாத்திரம் இருக்கிறதே, தெரியாதா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 23 January 2017

ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு


Siragu kaliththogai1

பாட்டும் தொகையும் என அறியப்படும் சங்க இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. பாவகையினால் பெயர் பெற்ற கலித்தொகை ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், ‘கல்வி வலார் கண்ட கலி’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுவது. சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்ட நூல்களில் அனைத்து நூற்றைம்பது பாடல்களும் சிதைவின்றி கிடைப்பதும் இதன் தனிச்சிறப்பு. நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் கலித்தொகைக்குக் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் கி. பி. 1887 ஆம் ஆண்டில் கலித்தொகையை முதன்முதலில் ஏட்டுச் சுவடிகளை ஆய்ந்து நூலாகப் பதிப்பித்தார்.
                 கடவுள் வாழ்த்து (சிவனை வாழ்த்தும் 1 பாடல்),
                பாலைக்கலி (பெருங்கடுங்கோன் எழுதிய 35 பாடல்கள்),
                குறிஞ்சிக்கலி (கபிலன் எழுதிய 29 பாடல்கள்),
                மருதக்கலி (மருதன் இளநாகன் எழுதிய 35 பாடல்கள்),
                முல்லைக்கலி (அருஞ்சோழன் நல்லுருத்திரன் எழுதிய 17 பாடல்கள்),
                நெய்தற்கலி (நல்லந்துவன் எழுதிய 33 பாடல்கள்),

ஆகிய பாடல்கள் கலித்தொகையில் இடம் பெற்றுள்ளன. பழந்தமிழ்ப் பாடலொன்று ஒவ்வொரு கலிப்பாடல்கள் தொகுப்பும் யார் யாரால் பாடப்பெற்றது என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும், பாடல்களின் அமைப்பையும் நடையையும் கொண்டு நெய்தல் பாடிய நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்து முதற்கொண்டு அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் என்பதும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற இலக்கிய ஆய்வாளர் சிலரின் கருத்தாகவும் இருக்கிறது[1]. மற்ற புலவர்களின் பெயர்களை அறியத் தரும் பழம்பாடலுக்கும் ஓர் உண்மை அடிப்படையாக இருக்கக்கூடும் என்பதால் பிற புலவர்களையும் அந்தந்த கலிப்பாடல்களின் ஆசிரியராகவே வழங்குவது தமிழறிஞர் மரபு. இப்புலவர்களுள் இருவர் அரசர்கள் என்பது கலித்தொகையின் சிறப்பு. ஐந்திணைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கலித்தொகை பாலைத்திணைக்கு முதலிடம் கொடுத்துத் துவங்குகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 19 January 2017

பொங்கல் திருநாள் (கவிதை)


Siragu-pongal6

செங்கரும்புச் சுவைதேறும் செந்தமிழர் புதுப்
பொங்கள் நன்நாள் மலர்ந்தது!-எங்கும்
புதுப்பொலி வுடனேஉழுவார் உள்ளம் எல்லாம்
புத்துணர் வுடனே ஒருவருக் கொருவர்
பொங்கல் நல்வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25192