Tuesday, 31 October 2017

கடவுளை அவமதித்தவர்கள் (சிறுகதை)


Siragu kadavulai1

மலையின் விளிம்பில் ஒதுங்கிக் கிடந்தது அந்த காலனி. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைத்துப் போட்ட தீப்பெட்டிகளைப்போல வீடுகள் இருந்தது. ஊரின் நடுவே கொஞ்சம் சமதளமான இடம் எஞ்சியிருந்தது. அங்கேதான் மாரியம்மன் கோயிலின் அடையாளமாக ஒரு நாவல் மரம் ஒன்று நின்றது. அதனைச் சுற்றி தரையில் குத்தப்பட்ட வேல்கள் நின்றன. சிலவற்றில் எலுமிச்சை பழங்கள் குத்தப்பட்டிருந்தன. அந்த இடத்தைச்சுற்றி கொஞ்சம் காலி இடமிருந்தது. குழந்தைகள் விளையாடும் இடமாகவும் மாறிப்போக, கோயில் குழந்தைகளுக்கு மைதானமாகவும் மாறிப்போனது. ‘வொலிபோல்’ பந்துகளோ, சிறுவர்களின் குட்டி பந்துகளோ சில நேரம் வேலில் படுவதுண்டு. வேலை விட்டு வரும் சனங்கள் அதைப் பார்க்க நேரிட்டால்,
“இந்த சனியன் புடுச்ச வெள்ள காட்ட பாருங்க கோயில்ன்னு பாக்குதா, சாமிண்ணு பாக்குதா ஒரே ஆட்டம்தான்”
ஏசிக்கொண்டே போவார்கள். அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. கேட்டாலும் அவர்களிடம் பதிலுமில்லை. விளையாட்டு… விளையாட்டு…

சில நேரங்களில் யார் மேலிலாவது பந்து பட்டுவிடும். அன்றைக்கு காலனியே ரெண்டுபடும். எந்தப் பயலின் பந்து யார்மேலில் பட்டதோ அந்த இரண்டு வீட்டின் எல்லா விசயங்களும் பொது வெளிக்கு வந்து விடும். யார் யோக்கியம், யார் யோக்கியம் இல்லை, புள்ள வளர்த்த லெட்சணம் எல்லாம் வெளியே வந்து சந்தி சிரித்துவிடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 30 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி-4)


IV. தி கிரேட் எஸ்கேப்:
எந்த ஒரு சிறைக்கைதியும் தப்பவே வழியில்லை என்ற பெயர் பெற்றிருந்த அமெரிக்காவின் அல்கட்ராஸ் தீவு சிறைச்சாலையின் பெருமையைக் குலைக்கும் வண்ணம் பலமுறை தப்பும் முயற்சிகள் நடந்தன. ஒருவரே இரண்டுமுறை தப்பிக்க முயன்றதும் உண்டு. ஆனால் தப்புவது என்பது எப்படி வரையறுக்கப்படுகிறது என்பதில்தான் உண்மையாகவே கைதிகள் தப்பினார்களா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது.

Siragu alkatras4-1


சிறையில் இருந்து தப்பி தீவின் கரைவரை வந்து பிடிபட்டவர்களும் உண்டு, தப்பி கடலில் குதித்து நீந்தும்பொழுது சுடப்பட்டு இறந்தவர்களும் உண்டு, நீரின் குளிர் தாளாமல் விறைத்துப்போய் இறந்த உடலாக மிதந்து மீட்கப்பட்டவர்களும் உண்டு, தீவின் பாறைகளுக்கிடையில் மறைந்து கொண்டாலும் குளிர் தாங்காமல் தானே சிறைக்குத் திரும்ப வந்துவிட்டவர்களும் உண்டு, கரையேறித் தப்பினாலும் கைது செய்யப்பட்டு திரும்பியும் கொண்டுவரப்பட்டவர்களும் உண்டு, இல்லை ஹைப்போதெர்மியாவில் விறைத்துப்போய்க் கரையில் ஒதுங்கிக் கிடந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிரைக் காப்பாற்றி திரும்பவும் சிறையில் அடைக்கப்பட்டவர்களும் உண்டு. எனவே, அல்கட்ராஸ் சிறை அதிகாரிகளும், எஃப்.பி.ஐ. அதிகாரிகளும் தப்பியவர்கள் யாவரும் உயிருடனோ, உயிரற்ற உடலாகவோ கிடைத்துவிட்டால் அவர்கள் தப்பிக்கவில்லை என்றும், அவ்வாறு உயிருடனோ, உயிரற்ற உடலாகவோ கிடைக்காவிட்டாலும் கூட அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற வரையறையை வகுத்துக் கொண்டு இதுவரை யாருமே அல்கட்ராஸ் சிறையில் இருந்து தப்பியதில்லை என்று சொல்லி வந்தார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 26 October 2017

கவிதைச்சோலை (நீதி இன்னும் சாகவில்லை!, மாற்றம் வருகுது)


நீதி இன்னும் சாகவில்லை!


Siragu needhi saagavillai1

இங்கு
நீதி இன்னும் சாகவில்லை
உயிர்த்துக்கொண்டது மீண்டும்
வித்தியாக்களின் ஆன்மா வடிவில்!

தர்மம் அழிந்துவிடும் என்று
இனியாவது யாரும் கனவு காணவேண்டாம்

அதர்மம் அழிந்துவிடாது என்றும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/

Wednesday, 25 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . .(பகுதி-3)


Siragu alkatras1

III. உலகப்புகழ் பெற்ற அல்கட்ராஸ்:
லண்டன் நகரில் (செப்டம்பர் 28, 2017 அன்று) அமெரிக்காவின் அல்கட்ராஸ் சிறைச்சாலை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட “Alcotraz” (speakeasy-style bar called Alcotraz) என்ற ஒரு மதுபான விடுதி திறக்கப்பட்டுள்ளது. ஒரு சிறைச்சாலையின் மாதிரியில் துவக்கப்படும் மதுபான விடுதி என்பதுமக்களை எந்த அளவு அல்கட்ராஸ் சிறைச்சாலை ஈர்த்துள்ளது என்பதையே காட்டி நிற்கிறது.


உலகப் புகழ் பெற்றுள்ள அல்கட்ராஸ் மத்திய சிறைச்சாலையின் நோக்கம் கைதிகளை சீர்திருத்தி மறுவாழ்வு அளிக்கும் நோக்கமல்ல. ஒருமுறை அல்கட்ராஸ் வந்தால் அதுவே அவர்களின் முடிவு என்ற நிலையே இருந்தது. அதைக் கைதிகளும் அறிந்திருந்தனர். எந்த நீதிமன்றமும் அல்கட்ராஸ் சிறையில் அடைக்கவும் எனக் கைதிகளுக்கு தண்டனைக் கொடுத்ததில்லை. பிற மத்திய சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்க முயல்பவர்கள், வன்முறையாளர்கள், அதிக அளவு கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள் என்பவர்கள் அல்கட்ராஸ் சிறைக்கு மாற்றப்படுவார்கள். அதாவது தண்டனை பெற்ற கைதிகள், குற்றம் செய்து அதிக அளவு தண்டனையாக அல்கட்ராஸ் சிறைக்குப் போவது (“the prison system’s prison”) வழக்கம். அல்கட்ராஸ் சிறைச்சாலைகளின் சிறை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 24 October 2017

தமிழ் எழுத்து கற்றல்! (கவிதை)


Siragu tamil4
உயிரெழுத்து பன்னிரண்டு அதை – உன்
உடலோடு ஒற்றிடு!
மெய்யெழுத்து பதினெட்டு அதை –உன்
உயிரோடு கலந்திடு!

உயிரும் மெய்யும் கலந்த –உன்
உயிர் தமிழைக் கற்றிடு!
உயிர் தமிழைக் காக்க போர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்


Siragu nadugal2
அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில் மதங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழி ஒரு சமயச்சார்பற்ற மொழி என கால்டுவெல் எனும் மொழியியல் அறிஞர் குறிப்பிட்டு உள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த வகையில், சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கின்றபோது, நடுகல் வழிபாடு நம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்திருக்கின்றது எனத் தெரிய வருகின்றது. வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் அவர்கள் இறந்தபின் நடுகல் வைத்து வணங்கும் பழக்கம் நம்மிடையே இருந்திருக்கின்றது. மதம் என்ற நிறுவனமயம் ஆக்கப்பட்ட அமைப்பு நம்மிடையே சங்க காலத்தில் இல்லை. திணை வழிபாடு இருந்துள்ளது. இயற்கையை தமிழர்கள் வழிபட்டிருக்கின்றனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கின்றது என்றோ அது தான் இயற்கையை, மனித வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றது என்றோ, மனிதர்களை ஒரு கடவுள் தான் படைத்தார் என்ற கருத்து முதல்வாதம் எந்த மதம் சார்ந்தும் வாழாத தமிழர்களிடம் ஆதியில் இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 19 October 2017

அதிதி (சிறுகதை)


Siragu adhithi1
பாலுவிட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி கற்பனையில் மூழ்கி விடுவது அவன் பழக்கம்.
அப்போது தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டது. அவன் வெளியே ஓடினான். வீட்டுக்கு எதிரே இருக்கும் கோவிலின் அர்ச்சகர் தேங்காயை   சூரைத்தேங்காய் உடைத்தார். பூ விற்பவள், மற்றும் இரண்டு சிறுவர்களும் தேங்காயை எடுக்க ஓடினர். பாலுவும் ஒரு பெரிய தேங்காய் சிதறலை எடுத்துக் கொண்டான். அது அவனுடைய வழக்கம். சூரைத்தேங்காய் சிதறலை எடுக்க வெட்கப்பட மாட்டான்.

அவனுக்கு ஐம்பது வயது ஆகிறது. பொறுப்பு என்பதே கொஞ்சம் கூட கிடையாது. எப்போதும் கனவு உலத்தில் சஞ்சரிப்பான். கடவுள் பக்தி உண்டு. எதிரேயிருக்கும் கோவிலுக்கு அடிக்கடி செல்வான். அப்படிப் போகும்போதெல்லாம் சிதறு தேங்காய் கிடைத்தால் பொறுக்கி வருவான். அவனை அறியாமலேயே அவனுக்கு அது பழக்கமாகி விட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.