Wednesday, 29 November 2017

எது கவிதை? (கவிதை)


Siragu chettinadu poet1

புதுமைதான் கவிதை என்றால்
ஒவ்வொரு விடியலும் கவிதைதான்!
வேதனை தான் கவிதை என்றால்
ஒவ்வாரு பிரிவும் கவிதைதான்!

இயற்கைதான் கவிதை என்றால்
ஒவ்வாரு சீற்றமும் கவிதைதான்!

காதல் தான் கவிதை என்றால்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

செம்மொழி இலக்கியப் பெண் புனைவுகள்


siragu semmoli2

சங்க இலக்கியங்களில் பல புனைவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண் குறித்தான புனைவுகள் கூர்ந்து கவனிக்கத்தக்கன. பெண்ணியம் விழித்து எழுந்து மூன்றாம் அலையாய்ப் பரவும் இக்கால எல்லையில் அப்புனைவுகளைப் பெண்ணிய நோக்கில் ஆராய்வது என்பது புதிய வெளிச்சத்தைப் பரப்பும் என்பதில் ஐயமில்லை.
சங்கஇலக்கியங்களில் காணப்படும் பெண் சார்ந்த புனைவுகளாகப் பின் வருவனவற்றைக் கொள்ள இயலும். கொல்லிப்பாவை, பெண்கொலை புரிந்த நன்னன், திருமாவுண்ணி, அன்னிமிஞிலி ஆகிய புனைவுகளில் பெண் பாத்திரங்கள் மையமாக அமைகின்றன. இக்கதைகள் வாய்மொழிப் புனைவுகளாகும். இவற்றை உருவாக்கியவர்கள் யார் என்று அறியாத நிலையில் இவை எவரால் சொல்லப்பட்ட புனைவுகள் என்பதை அறிய இயலாத நிலை உள்ளது. இவை உவமைகளாக, எடுத்துரைப்புகளாக இருப்பதை எண்ணிப் பார்க்குங்கால் தமிழ்ச் சமுதாயத்தில் இவை வழிவழியாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன என்பதை மட்டும் உணரமுடிகின்றது.

தற்காலத்தில் தொன்மம் சார்ந்த புனைவுகளிலும் பெண்ணிய ஆய்வு மேற்கொள்ளப்பெறுகின்றது. இதுகுறித்த பின்வரும் ஆய்வாளரின் கருத்து நோக்கத்தக்கது. ‘‘தற்போதைய காலக்கட்டத்தில் பெண்ணிய இயக்கம் சமுதாய அறிவியல், தொல்லியல், தொல்மானிடவியல், இறையியில் போன்ற பலதுறைகளைக் கவனித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றில் இடம்பெற்றுள்ள தொன்மக் கூறுகளை பெண்மையத்துடன் ஆராயத் தலைப்படுகிறது. அவற்றில் காணப்படும் ஆ;ண் மையமிட்ட  அரசியலை, ஆண்  பாத்திரங்களை அவை குறித்த சொல்லாடல்களை வெளிப்படுத்த பெண்ணிய நோக்கு முன்வருகிறது. இத்தொன்மங்களில் உள்ள பெண் மௌனம்,  பெண்ணுக்கான இடமில்லா நிலை போன்றனவும் நுணுக்கமாக கவனிக்கப்படுகின்றன என்ற கருத்தின் வழியாக பெண்ணியம் தொன்மங்களிலும் தன் ஆய்வினைச் செலுத்திவருகிறது என்பது உணரப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 28 November 2017

இரு பாதைகளும் ஒரு பயணமும்


siragu iru paadhaigalum2

அமெரிக்கப் பண்பாட்டில் மிகவும் போற்றப்படுவது ஒருவர் தனித்தன்மையுடன் விளங்கும் பண்பு (empowered individualism). ஒருவரது தனித்தன்மை மிகவும் ஊக்கப்படுத்தப்படும், பாராட்டப்படும் (appreciation of / encouraging individualism, choice, and empowerment). குழந்தைகளை வளர்க்கும் பொழுதே நீ இவ்வாறு பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்று போதிக்கப்படுவதில்லை. வளர்ந்த பிறகு நீ என்னவாக விளங்க வேண்டும் என்பது உனது விருப்பம் என்றுதான் அவர்களிடம் சிறு வயது முதல் கேள்விகள் வைக்கப்படும். புதுமைகளைப் படைப்பதும், அதற்காகத் துணிச்சலாக மாறுபட்ட வாழ்க்கை முறையையோ கல்வியையோ சோதனை செய்வதும் உற்சாகப்படுத்தப்படும்.


பலர் சென்ற வழி இது, இதில் வெற்றி நிச்சயம், தடைகளும் தடங்கல்களும் குறைவு, வாழ்க்கை சீராக இருக்கும் என்ற கோணத்தில் பிள்ளைகளை வளர்ப்பது இந்தியப் பண்பாடு. தங்கள் பிள்ளைகள் மருத்துவராக வேண்டும், பொறியாளராகத் தொழில் செய்ய வேண்டும், சமூகத்தில் அதிகம் மதிக்கப்படும் புகழ் செல்வம் தரும் கல்வியைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வளர்ப்பது அமெரிக்காவில் இருக்கும் இந்தியப் பின்புலம் கொண்ட பெற்றோர்களின் அணுகுமுறையாக இருக்கும். அவ்வாறு தாங்கள் வளர்க்கப்பட்டு, வழி நடத்தப்பட்டு வந்ததால்தான் அயல்மண்ணில் அந்நாட்டு மக்களுக்கு இணையாக தங்களால் வாழ முடிகிறது என்பது அவர்கள் நடைமுறையில் அறிந்தது. தாங்கள் பெற்ற கல்வியும் வளர்ப்பும் தங்களை வாழ வைத்துள்ளது என்று அவர்கள் தங்கள் வாழ்வையே சான்றாக எடுத்துக் கொள்ளும் அவர்களது கோணத்தைக் குறை சொல்லவும் வழியில்லை. அவ்வாறு அவர்கள் வளர்க்கப்பட்ட முறை இந்தியப் பண்பாட்டுக் கூற்றின் அடிப்படையில் அமைந்தது. அத்துடன் அவ்வாறு வழிநடத்தும் முறையைப் பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட பெற்றோரது கடமை எனப் பார்ப்பதும் இந்தியப் பண்பாட்டுக் கோணம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 26 November 2017

தமிழிசை அரங்குகள் வேண்டும்! (கவிதை)


tamil-mozhi-fi

தேனமிர்த மாம்தமி ழிசையை –நாம்
தீந்தமிழ் சொல்லா லன்றோ கேட்கிறோம்?
மேனாட்டு இசையால் தாய்மொழிச் சொற்கள்
மேன்புகழ் நலிந்து வாடக் காணவோ?
தமிழராம் நம்வீட்டில் நிகழும் -நல்ல
தமிழ்ப்பண் பாட்டை வளர்த்தெடுக்க நாளும்
தேனிசை சுரக்கும் பண்பாட்டு முறைபேணி
இசைத்தமிழ் காப்பதைக் கடமையாய்க் கொள்வோம்.

நாளும் வளர்தமிழ் முறைக்கு -நாம்
நல்ல தமிழ்த்தொண் டாகத் தமிழர்
அரங்குகள் எல்லாம் தமிழ்இசை முழக்கி

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

Thursday, 23 November 2017

குறிஞ்சிப்பாட்டில் பெண்ணின் ஆளுமைத்திறன்


Siragu-kurunjippattu2

ஆளுமைத்திறன் என்பது தான் சொல்ல வந்த செய்தியை உறுதியுடன் கூறுதல், நமக்கு என்ன தேவை என்பதை தயக்கமின்றி கூறுதல், தன் கோரிக்கை மறுக்கப்பட்டால் அதற்குரிய மாற்று முயற்சியைத் திட்டமிட்டு வைத்திருத்தல், மறுக்கப்படுகின்றபோது நிதானத்துடன் சமரசத்திற்கு தயாராதல். இவற்றைச் சரியாகக் கையாளுவதே ஆளுமைத்திறன் எனலாம். இங்கே கூறப்பட்ட இயல்புகளில் எதிலும் குறையாமல் செயல்பட்டவர்கள் குறிஞ்சிப்பாட்டுப் பெண்கள். குறிப்பாகத் தோழி. விளையாட்டுப் பெண்ணாக இருந்தாலும் பண்பாட்டுத் தளத்தின் ஆணிவேரை நன்கு அறிந்தவர்கள் தமிழ்ப் பெண்கள் என்று அறுதியிட்டுக் கூறும் கபிலரின் குரல்தான் தோழியின் வாயிலாக வெளிப்படுகிறது. பேசும் திறன், தான் சொல்ல வருகின்ற கருத்திற்குத் தக சூழல்களை உளப்படுத்தல், எதிர் நின்று கேட்பவர்களின் ஐயத்தை உணர்ந்து கொண்டு அதற்குரிய காரண காரியங்களை நிரல்பட மொழிதல், எதிர் உணர்வு அரும்பாமல் இதமாக எடுத்துரைத்தல் என்று எல்லா வகையிலும் தோழி பேசுகிறாள் என்றால் தோழியின் பேச்சு மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களின் அறிவார்ந்த பேச்சாற்றலை அறிந்த கபிலர், பெண்மையின் பேச்சாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் அற்புதப் படைப்பே குறிஞ்சிப்பாட்டுத் தோழி.

குறிஞ்சிப்பாட்டிலே நடக்கின்ற அத்துணைச் சொல் நாடகமும் தோழியின் சொல்லாற்றலே. பாட்டின் தொடக்கத்திலேயே, தான் சொல்லப் போகும் செய்தி தாய்க்குக் கோபத்தை உண்டுபண்ணக் கூடியது என்பதை அறிந்திருந்தும், கோபத்திற்கு ஆளாவோம் என்பது தெரிந்திருந்தும் அவள் கோபத்தினால் வரும் எதிர்வினையைத் தவிர்க்க, சிக்கலான செய்தியாக இருந்தும்கூட அதனை அவள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மேலாண்மைத் திறத்துடன் மொழிகின்றாள் தோழி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 22 November 2017

நவம்பர் 26


Siragu nov 26-1
நவம்பர் 26 1957 தமிழ்நாடு மறக்க முடியாத நாள்!!. ஆம் அன்று தான் தந்தை பெரியார் அவர்கள் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் எனும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அந்தப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தொண்டர்கள் 10000 பேர் பெருந்திரளாக அரசியல் சட்டத்தின் சாதியைப் பாதுகாக்கும் பக்கங்களைக் கொளுத்தினர். தமிழக காவல்துறை செய்வதறியாது 3000 பேரை கைது செய்தனர். அதில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவர்.
அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் ஒரு ஊரில் ஒரு இடத்தில் என்ற அளவில் நடைபெறவில்லை.

‘விடுதலை’ நாளேட்டில் வந்த தகவல்படி, சென்னையில் – 35 இடங்கள், வடார்க்காடு மாவட்டம் – 30 இடங்கள், தென்னார்க்காடு மாவட்டம் – 26 இடங்கள், சேலம் மாவட்டம் – 41 இடங்கள், கோவை மாவட்டம் – 14 இடங்கள், இராமநாதபுரம் மாவட்டம் – 4 இடங்கள், மதுரை மாவட்டம் – 13 இடங்கள், நெல்லை மாவட்டம் – 8 இடங்கள், தர்மபுரி – 18 இடங்கள், செங்கல்பட்டு – 9 இடங்கள், கன்னியாகுமாரி – 5 இடங்கள், திருச்சிராப்பள்ளி – 107 இடங்கள், தஞ்சாவூர் – 161 இடங்கள், புதுச்சேரி – 6 இடங்கள், பெங்களூர் மற்றும் ஆந்திரா – 1 இடம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 15 November 2017

தமிழ்க் கொடையாளர் மா.நன்னன்! (கவிதை)


Siragu tamil4

அள்ளி யள்ளிக் கொடுத்தாய் தமிழை
அன்பால் தமிழ்மொழி வளர்த்தாய் புலவ!
எண்ணும் எழுத்தும் ஓதுவித்து பாமரர்
ஏழைகள் தமிழ்படிப் பறிவுபெற உழைத்தாய்
கண்ணும் கருத்தாய் இருந்து அன்புடனே
கருத்தும் செயலாய் உழைத்தாய் புலவ!

தமிழ்நூல் போற்றும் நல்லுரை தந்து
தீந்தமிழ்ப் புகழை வளர்த்தாய் புலவ!
அன்பும் அறச்சீற்றம் கொண்டு உழைத்தாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D/