Wednesday, 31 January 2018

ஆண் அதிகார இளைப்பாறல்


Siragu aganaanootru paadal1

செம்மொழி இலக்கியங்கள் பன்னூறு ஆண்டுகாலத்திற்கு முன்னான தமிழர்தம் பண்பாடுச் செறிவு மிக்க வாழ்வினைப் படம் பிடித்துக்காட்டும் வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. தலைவன், தலைவி ஆகிய இருவருக்குமான இல்லறப் பாங்கினையும், தலைவனின் வீரப்பாங்கினையும் எடுத்துரைக்கும் செம்மொழி இலக்கியங்கள், பண்பாட்டு விலகல்களையும் சுட்டிக்காட்டாமலில்லை. குறிப்பாகத் தலைவனின் ஒழுக்கம் தலைவியைத் தாண்டி மற்றொரு பெண்ணை நோக்கிச் செல்லும் நிலையில் அதாவது கற்பு கடந்து செல்லும் நிலையில் ஏற்படும் பண்பாட்டு விலகல்களையும் செம்மொழி இலக்கியங்கள் நேர்மையுடன் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில், பரத்தை என்ற அழகு, அன்பு, ஏக்கம்  கொண்ட பெண்ணின் அவல மிகு வாழ்வினையும் அவை எடுத்துக்காட்டுகின்றன.

சங்க காலத் தலைவன் என்பவன் வண்டு போன்ற இயல்பினன். பல மலர்கள் தாவும் நிலையை அவன் வண்டுகளிடம் இருந்துப் பெற்றானா அல்லது வண்டு அவனிடம் இருந்துப் பெற்றதா என்பது புரியாமல் ஒரு பரத்தை தன்னை வெறுக்கும் தலைவியைச் சாடுகிறாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 26 January 2018

தமிழ்ப் பாவை (கவிதை)



Siragu tamilar thirunaal1

சங்க காலமுதல் தமிழர்கள் தைத்திரு நாளினை சீர்ப்பொருளோடு சிறப்பித்து வருகின்றனர். தமிழர்கள் கொண்டாடி வருகின்ற பெருவிழாக்களில் ஒன்று தைத்திருநாள். அத்தகைய தைத்திரு நாளினை பல நூல்கள் போற்றிப் புகழ்ந்து பாடிய போதும் பாவை இலக்கியங்களாக நாம் பாடியதில்லை. ஏறக்குறைய அரைநூற்றாண்டுக்கு முன்பு கவியரசு கண்ணதாசன் தைப்பாவையை பாடியுள்ளார். பாவை இலக்கியங்களான திருப்பாவையும், திருவெம்பாவையும் சமயம் சார்ந்து பாடப்பட்டனவாக உள்ளன. அவற்றை மார்கழித் திங்களன்று பாடிப் பரவித் தொழுகின்றனர்.


தமிழர்கள் வாழ்வில் வளமான செல்வத்தை அளிக்கின்ற தைத்திங்களை 
மாதம் முழுதும் வாழ்த்திப் பாடவும், தை மாதத்தை முழுவதுமாக நங்கையர் ஆடவர் கூடிக் கொண்டாடவும் பாடிய “தமிழ்ப் பாவை’’யை தாய்த்தமிழ் நாட்டினர்க்கும் மற்றும் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழ்கின்ற 
பெருங்குடிகளான அயலகத் தமிழர்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எளியவனினும் எளியவனாகியவன் உரிதாக்குகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 24 January 2018

திருச்சி பெரியார் மாளிகை



siragu periyar

சென்ற நூற்றாண்டின் தமிழக அரசியலில் பல திருப்பங்களுக்குக் காரணமான முடிவுகள், திட்டங்கள் தீட்டப்பட்ட இடங்கள் சில திருச்சி மாநகரில் உண்டு.  அவற்றில் ஒன்று திருச்சி புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை (புவியிடக் குறிப்பு: 10.814159, 78.675790).   இந்த இடத்தைப் பெரியார் இயக்கத்திற்காக வாங்க சுயமரியாதை இயக்கத் தொண்டரான தி. பொ. வேதாசலம் பெரும் முயற்சி செய்தார் எனவும், பின்னர் இவர் திருச்சியில் பெரியாரால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குத் தாளாளராக அமர்த்தப்பட்டார் என்றும் வே. ஆனைமுத்து அவர்களின் நூல் (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்) குறிப்பிடுகிறது.
தமிழக அரசியலில் திருப்புமுனையாக, 1967-ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி அமைத்த பொழுது, முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்னர் அறிஞர் அண்ணாதுரை அவர்கள், கலைஞர் கருணாநிதியுடனும் நாவலர் நெடுஞ்செழியனுடனும்  திருச்சி பெரியார் மாளிகையில் தங்கியிருந்த பெரியாரைச் சந்தித்து தங்கள் கட்சியின் வெற்றியைச் சமர்ப்பித்து அவரது வாழ்த்தைப் பெற்றார்.  திராவிடக்கழகத்தில் இருந்து பிரிந்து சென்றதால் அவர்கள் மீது கசப்புணர்வுடன் இருந்த பெரியார், அவர்களுக்கு எதிராகவும் தேர்தலிலும் பிரச்சாரம் செய்திருந்தார். இருப்பினும் அந்தப் பிரிவினையைப் பொருட்படுத்தாது அவரை மதித்து, மறக்காமல் வாழ்த்துப் பெற வந்தவர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்து “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க” என்று பாராட்டி வாழ்த்தியிருக்கிறார் பெரியார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 23 January 2018

ஆண்டாளை துணைக்கழைத்த இந்துத்துவம்.!


siragu aandaal3
கடந்த சில வாரங்களாகவே தமிழக மக்களின் செவிகளில் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் சொற்கள், வைரமுத்துவும், ஆண்டாளும், அதனைப் பற்றிய சர்ச்சையும் தான் என்றால், மறுப்பதற்கில்லை. கவியரசு வைரமுத்து அவர்கள், தினமணியில் வெளிவந்திருக்கும் தன்னுடைய கட்டுரை ஒன்றில், ஆண்டாளைப்பற்றி பல செய்திகள் பெருமையாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பது அந்தக் கட்டுரையைப் படித்த வாசகர்களுக்கு நன்கு தெரியும். ஒரே ஒரு வரி மட்டும் தான், ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் நாச்சியார் என்பவர் தேவதாசி குலத்தில் பிறந்திருக்கலாம் என்பதை குறிப்பிட்டு இருக்கிறார். அதுவும் அவருடைய கருத்து அல்ல என்பதை மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“அந்த செய்தி 1975ம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ட்ஸ் ஸ்டடீஸ் என்ற அமைப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில், 45 இந்திய வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று, 26 கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு பின்னர் Indian movements: Some Aspects of dissent protest and reform என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 19 January 2018

போகி, பொங்கல் (கவிதை)


Siragu tamilar thirunaal1

வறுமையைப் போக்கி !
துன்பத்தைப் போக்கி !
துயரத்தைப் போக்கி !
கோபத்தைப் போக்கி !
போக்கிபோக்கி
போகிகொண்டாடும் இத்தருணத்தில்



நடந்ததை நினைக்க வேண்டாம் !
இழந்ததைதேட வேண்டாம் !
தொலைத்ததை எண்ண வேண்டாம் !
எண்ணியதை மறக்க வேண்டாம் !

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Thursday, 18 January 2018

அறிஞர் மெ.சுந்தரத்தின் ஆராய்ச்சித்திறன்


Siragu naattuppurappaadal1
சங்க இலக்கியங்களில் தோய்ந்தவரும், நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுப்புதில் முன்னோடியுமாக விளங்கிய பேராசிரியர் முனைவர் மெ.சுந்தரம் ஆவார். இவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலைச் சிவபுரிக்கு அடுத்துள்ள வேந்தன்பட்டியாகும். இவரின் தந்தையார் மெய்யப்பச் செட்டியார் ஆவார். இவர் அக்காலத்தில் அப்பகுதி சார்ந்த காங்கிரசு தலைவராக விளங்கினார்.
மெ.சுந்தரம் முதுகலை, முனைவர், எம்.லிட் போன்ற பட்டங்களைப் பெற்றவர். கோனாபட்டு சரசுவதி உயர்நிலைப்பள்ளி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை மாநிலக்கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியப் பணியாற்றியவர். இவரின் மாணவர்களுக்கு மெ.சுந்தரம் அவர்களிடம் படித்தோம் என்ற பெருமை உண்டு. அந்த அளவிற்கு ஆற்றலும் அன்பும் உடையவர்.

இவர் தமிழகம் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவர். நாட்டுப் புறப்பாடல்கள் என்ற தலைப்பில் அந்நூல் வெளிவந்து நாட்டுப்புறவியல் துறையின் முன்னோடி நூலாக விளங்குகிறது. இதனை மறுபதிப்பு செய்வது தற்காலத் தேவையாகும். இந்நூல் தவிர ஐந்து நூல்களின் ஆசிரியராக இவர் விளங்கினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 16 January 2018

அன்னை மீனாம்பாள்


Sirgu Annai_Meenambal1

தலித் ஆளுமை அன்னை மீனாம்பாள் பற்றிய நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அன்னை மீனாம்பாள் அவர்கள் 1904 ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்தார்.

இரங்கூனில் இவரது பாட்டனார் மதுரைப்பிள்ளை பிரபலமானவர். ‘வணிகர் விக்டோரியா’, ‘மதுரை மீனாட்சி’ என்கிற இரண்டு லாஞ்சுகள் அவருக்குச் சொந்தமானவை. இண்டர்மீடியட் படித்துவிட்டுத் திருமணத்துக்காக 16வது வயதில் சென்னைக்கு வந்தார் அன்னை மீனாம்பாள். அப்போதிலிருந்து தொடர்ந்து சமூகப்பணிகளை தான் இறக்கும் வரையில் செய்து வந்திருக்கின்றார். சைமன் குழு வருகையை ஆதரித்துப் பேசி 1928இல் தன் பொது வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

மிகச் சீரிய சுயமரியாதை வீரங்கனை. ஆம், அன்றைய காலக்கட்டங்களில் தந்தை பெரியார் அவர்களோடு பல்வேறு கூட்டங்களில், திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியவர்.


அவருடைய பெரியப்பா வேணுகோபால் பிள்ளை அவர்கள் கடப்பையில் நகராட்சி ஆணையாளராகப் பணிப்புரிந்தவர். சென்னை ஸ்பர்டாங் சாலையில் நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவரான டாக்டர் டி. எம். நாயர் ஆற்றிய சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். அந்த வகையில் நீதிக்கட்சியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.